செய்திகள் :

மொழிக் கொள்கை செயல்பாடு: ஸ்டாலினுக்கு டி.ராஜா பாராட்டு

post image

மொழிக் கொள்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மாதிரியாகச் செயல்படுகிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலர் டி.ராஜா பாராட்டு தெரிவித்தார்.

மதுரையில் நடைபெறவுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாட்டில் பங்கேற்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் டி. ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பெங்களூரிலிருந்து விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை மதுரை வந்தனர்.

பின்னர், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் டி. ராஜா கூறியதாவது:

ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை மட்டுமே பின்பற்றக்கூடிய கட்சியாக பாஜக உருமாறியிருக்கிறது. பெரு நிறுவனங்களின் சுரண்டலுக்காகச் செயல்படுகின்ற அரசாகவும், கல்விக் கொள்கையில் இந்திய கூட்டாட்சி நெறிமுறைகளைத் தகர்த்தெறியும் அரசாகவும் மத்திய பாஜக அரசு செயல்படுகிறது.

மத்தியில் ஆளும் பாஜகவிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும்; மக்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இடதுசாரிக் கட்சிகள் ஒன்றுபட்டு செயல்பட்டு வருகிறோம்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் மொழிக் கொள்கை, கல்விக் கொள்கை உள்ளிட்டவற்றில் முன்மாதிரியாகச் செயல்படுகிறார். மேலும், இந்திய ஒற்றுமை காக்கப்பட வேண்டும். மாநில உரிமைகள், தமிழ்நாடு உரிமைகள் காக்கப்பட வேண்டும் என அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இதனால், முதல்வருக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறோம்.

பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்குச் சென்றதில் வியப்படைய ஏதுமில்லை. பின்னணியிலிருந்து பாஜகவை ஆர்.எஸ்.எஸ்.தான் ஆட்டி வைக்கிறது.

அரசமைப்புச் சட்டத்தையே ஏற்றுக் கொள்ளாத ஓர் இயக்கம் இந்தியாவை மதவாத அடிப்படையில் பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. இதை முறியடிக்கும் போராட்டத்துக்கு இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றன.

சத்தீஸ்கர் மாநிலத்தின் மலைப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களை அங்கிருந்து வெளியேற்றி விட்டால், அந்தப் பகுதி கனிம வளங்களை பெருநிறுவன முதலாளிகளுக்கு கொடுத்துவிடலாம் என்ற நோக்கத்தில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

மதவாத சக்திகளுக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு நாங்கள் எப்போதும் ஆதரவு தெரிவிப்போம் என்றார் அவர்.

மின்வாரியம் சார்பில் ஏப். 5-ல் சிறப்பு முகாம்!

தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் ஏப்ரல் 5 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்நுகர்வோர் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் வேண... மேலும் பார்க்க

காகத்தைக் கண்டு பயந்த யானைகள்: வைரல் விடியோ!

தொட்டியில் தண்ணீர் குடிக்கும் போது காகத்தையைக் கண்டு அச்சப்பட்டு யானைகள் பின் வாங்கும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மீண்டும் தொடங்கிய கோடை வெயிலின் தாக்கத்... மேலும் பார்க்க

12 ஆண்டுகளுக்கு ரூ. 5,870 கோடி... சென்னை மெட்ரோ முக்கிய ஒப்பந்தம்!

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஏற்பு கடிதம் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெர... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டணங்கள்: யுபிஐ மூலம் செலுத்தும் வசதி அறிமுகம்!

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கட்டணங்களை யுபிஐ(UPI) மூலம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பதிவுக்கான கட்டணம், தேர்வுக் கட்டணங்களை யுபிஐ மூலம் இனி செலுத்தலாம்.2025-ம் ஆண்டு ஜனவரி முதல் ம... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ... மேலும் பார்க்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த தங்க மணி!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் ’தங்கத்தால் செய்யப்பட்ட மணி’ கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்... மேலும் பார்க்க