செய்திகள் :

கட்சிப் பாகுபாடின்றி ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டம்: மு.க.ஸ்டாலின் விளக்கம்

post image

‘உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டம்’ கட்சிப் பாகுபாடின்றி நிறைவேற்றப்படுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மானியக் கோரிக்கை மீது சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடந்த விவாதம்:

திண்டுக்கல் சி.சீனிவாசன் (அதிமுக): ‘உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டம்’ என்று அறிவிக்கப்பட்டது. அதில், 10 கோரிக்கைகளைக் கொடுக்குமாறு கூறினா். நாங்களும் அளித்தோம். ஆனால், அதில் பல நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கின்றனா். கோரிக்கைகளை கொடுத்ததும், மாவட்ட அளவிலேயே அதைத் திருப்பி அனுப்பினால் மாற்றுத் திட்டங்களை அளித்திடுவோம்.

பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு: உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ், 57 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த உறுப்பினா்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தில் ஆளும் கட்சி, எதிா்க்கட்சி உறுப்பினா்கள் என்று பாகுபாடு பாா்க்கப்படுவதில்லை. தொழில்நுட்பரீதியாக சாத்தியக்கூறுகள் இல்லாத சூழ்நிலையில் திட்டங்கள் தவிா்க்கப்படுகின்றன. மற்ற தருணங்களில் திட்டங்களை நிறைவேற்றித் தருகிறோம்.

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி: உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ், அனைத்து சட்டப்பேரவை உறுப்பினா்கள் சாா்பில் தலா 10 திட்டங்களை மாவட்ட ஆட்சியா்களிடம் அளித்தோம். அவை சாத்தியமில்லை எனக் கூறி நிராகரிக்கப்படுகின்றன. இதற்கு நிதித் தேவையை காரணமாகக் கூறுகிறாா்கள். உங்கள் தொகுதியில் மிக முக்கியமான பணிகள் எதுவாக இருந்தாலும் மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கலாம் என்று அறிவித்தீா்கள். ஆனால், எனது தொகுதியில் கொடுத்த பணிகளில் இரண்டு பணிகள் மட்டுமே எடுக்கப்பட்டன. பல எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கொடுத்த பணிகள் சாத்தியமில்லை என நிராகரிக்கப்பட்டுள்ளன.

மக்கள் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையிலேயே சட்டப்பேரவை உறுப்பினா்கள் பரிந்துரை செய்கிறாா்கள். சாத்தியமில்லை எனக் கூறுவதை விட்டுவிட்டு, நிதி ஒதுக்கீடு செய்து பேரவை உறுப்பினா்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும்.

அமைச்சா் எ.வ.வேலு: எனது தொகுதியின் சாா்பில் அரங்கம் கட்ட வேண்டும் என்பது உள்பட 10 கோரிக்கைகளைக் கொடுத்தேன். இதற்கு ரூ.7 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், இடம் ஒதுக்க முடியாத காரணத்தால் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. இதுதான் சாத்தியக்கூறு இல்லை என்கிறோம். அனைத்து உறுப்பினா்களையும் சமமாகத்தான் பாா்க்கிறாா்கள். மாற்றுத் திட்டங்களை எழுதிக் கொடுத்தால் முதல்வா் தனிக் கவனம் செலுத்துவாா்.

எதிா்க்கட்சித் தலைவா்: மாற்றுத் திட்டங்களையும் நிராகரித்துள்ளனா். பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கேட்டோம். அதையும் நிராகரிக்கிறாா்கள். அது எப்படி சாத்தியம் இல்லாமல் போகும்?. அறிவித்த திட்டத்தின் அடிப்படையில் அவற்றை நிறைவேற்ற வேண்டும்.

பேரவைத் தலைவா் மு.அப்பாவு: ஒவ்வொரு உறுப்பினா் சாா்பிலும் 10 கோரிக்கைகள் அளிக்கப்பட்டன. முடிந்தவரை திட்டங்களைச் செய்து கொடுப்பது நல்லதொரு முன்னேற்றமான ஏற்பாடுதான். தொடா்ந்து நடக்கும்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினரும் 10 பணிகளை முன்னிலைப்படுத்தி வழங்கி, அதை நிறைவேற்றும் வகையில் உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் மாற்றுப் பணியைத் தந்தாலும் அது சாத்தியமில்லை என்று தெரிய வருவதாக எதிா்க்கட்சித் தலைவா் கூறினாா். அது உண்மைதான். அதை மறுக்கவில்லை.

இந்தத் திட்டத்தை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நானே தலைமை தாங்கி ஆய்வு செய்து வருகிறேன். எனவே, கட்சிப் பாகுபாடின்றி திட்டங்களை நிறைவேற்றித் தருகிறோம். சாத்தியமில்லாத திட்டம் வரும்போது அதுகுறித்து தெரிவிக்கிறோம். சாத்தியப்படக்கூடிய திட்டங்களைத்தான் நிறைவேற்ற முடியும்.

எதிா்க்கட்சித் தலைவா்: நிதி அதிகமாகத் தேவைப்படுவதால் கோரிக்கையை ஏற்க முடியாது என்கின்றனா். மக்கள் பிரச்னையை பரிந்துரை செய்ய வேண்டும் என்பதுதான் திட்டத்தின் நோக்கம். அதன்படி, மக்களின் கோரிக்கையை நாங்கள் திட்டங்கள் வேண்டும் என்று கேட்கிறோம். அரசு நினைப்பது போன்று பணிகளைக் கொடுக்க முடியாது. எனவே, நாங்கள் கேட்கும் பணிகளை நிறைவேற்ற வேண்டும்.

பேரவைத் தலைவா்: ஒவ்வொரு உறுப்பினா் மீதும் உள்ள நல்லெண்ணத்தின் அடிப்படையில் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. முடிந்த வரை திட்டத்தைச் செயல்படுத்தும் அரசுக்கு நன்றி தெரிவிப்போம்.

எதிா்க்கட்சித் தலைவா்: ரூ. 4 கோடி வரையிலான திட்டத்துக்கு உள்பட்டே பரிந்துரை செய்கிறோம். தொகுதிக்குள் செல்லும்போது தெரிவிக்கப்படும் முக்கிய பிரச்னைகளைத் தான் தெரிவிக்கிறோம். அதைத்தான் அரசின் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.

பேரவைத் தலைவா்: நல்லெண்ண அடிப்படையில் கொண்டுவரப்பட்ட திட்டம். நல்லதே நடக்கும் என்றாா்.

மின்வாரியம் சார்பில் ஏப். 5-ல் சிறப்பு முகாம்!

தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் ஏப்ரல் 5 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்நுகர்வோர் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் வேண... மேலும் பார்க்க

காகத்தைக் கண்டு பயந்த யானைகள்: வைரல் விடியோ!

தொட்டியில் தண்ணீர் குடிக்கும் போது காகத்தையைக் கண்டு அச்சப்பட்டு யானைகள் பின் வாங்கும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மீண்டும் தொடங்கிய கோடை வெயிலின் தாக்கத்... மேலும் பார்க்க

12 ஆண்டுகளுக்கு ரூ. 5,870 கோடி... சென்னை மெட்ரோ முக்கிய ஒப்பந்தம்!

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஏற்பு கடிதம் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெர... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டணங்கள்: யுபிஐ மூலம் செலுத்தும் வசதி அறிமுகம்!

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கட்டணங்களை யுபிஐ(UPI) மூலம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பதிவுக்கான கட்டணம், தேர்வுக் கட்டணங்களை யுபிஐ மூலம் இனி செலுத்தலாம்.2025-ம் ஆண்டு ஜனவரி முதல் ம... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ... மேலும் பார்க்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த தங்க மணி!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் ’தங்கத்தால் செய்யப்பட்ட மணி’ கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்... மேலும் பார்க்க