செய்திகள் :

`இந்தியாவின் முதல் காபி சாகுபடி நடந்த இடம்' எங்கு தெரியுமா? - அப்படி என்ன ஸ்பெஷல்?

post image

பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா அவ்வப்போது ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவார்.

அந்த வகையில் இந்தியாவில் அதிகம் அறியப்படாத ஒரு சுற்றுலா தளத்தை பற்றி கூறியிருக்கிறார். அது இந்தியாவின் முதல் காபி சாகுபடி நடந்த இடம் என்று கூறப்படுகிறது. இந்த இடம் குறித்து விரிவாக தெரிந்து கொள்வோம்.

கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய மாவட்டம் தான் சிக்கமகளூரு. இந்த பெயரின் அர்த்தம் 'இளையமகளின் நகரம்' என கூறப்படுகிறது. இந்த இடத்தை மன்னராக இருந்த ஒருவர் தனது இளைய மகளுக்கு பரிசாக வழங்கப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன.

இந்த இடத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று கேட்டால், அழகான மலைகள் தொடங்கி, வனவிலங்குகள், கவர்ச்சியான தாவரங்கள், வரலாற்று கோயில்கள் என அனைத்தும் இங்கிருக்கின்றன.

ஆனால் குறிப்பாக இந்த இடம் காபி தோட்டங்களுக்கு பிரபலமானதாக உள்ளது. இந்தியாவின் முதல் காபி தோட்டங்கள் இங்கு தான் பயிரிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ’இந்தியாவின் காபி நிலம்’ என்ற பட்டத்தை சிக்கமகளூரு பெற்றுள்ளது.

இந்த அழகிய நிலத்திற்கு வரும் எவரும் காபியை ருசிக்காமல் அவர்களின் பயணம் முழுமை அடையாது.

அசாம் இந்தியாவில் தேயிலைத் தோட்டங்களுக்கு எப்படி பிரபலமானதோ அதேபோன்று சிக்கமகளூரும் அதன் காபி தோட்டங்களுக்கு பிரபலமானது. இந்தியாவின் காபி உற்பத்தியில் சிக்கமகளூரு கிட்டத்தட்ட 70% முதல் 75% வரை பங்களிக்கிறது.

மேற்குத் தொடர்ச்சி மலைகளை சுற்றியுள்ள இந்த அழகான காபி எஸ்டேட்டுகள், சுற்றுலா பயணிகளுக்கு ரிசார்ட், உணவகங்களை வழங்குகிறது.

பதினாறாம் நூற்றாண்டில் பாபு புதான் என்பவர் முதன் முதலில் இங்கு காபி செடியை பயிரிட்டார் என்ற சுவாரசிய தகவலும் உள்ளது. அவர் மெக்காவிற்கு புனித யாத்திரை சென்று திரும்பும் போது காபி கொட்டைகளை கொண்டு வந்து இங்கே பயிரிட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர்தான் இந்த இடம் காபி நிலமாக மாறி இருக்கிறது.

காபி அருங்காட்சியம்

சிக்கமகளூரில் அமைந்துள்ள காபி அருங்காட்சியம் இந்திய காபி வாரியத்தால் நடத்தப்படுகிறது. இது காபி பிரியர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை கொடுக்கும். அதாவது இங்கு காபியை பற்றி ஆழமாக அறிந்து கொள்ள முடியுமாம். இந்த அருங்காட்சியகம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும், வார இறுதி நாள்களில் மூடப்பட்டிருக்கும்.

சிக்கமகளூர் காபிக்கு மட்டும் பிரபலமானது இல்லாமல் அதன் அழகிய நிலப்பரப்புக்கும் வனவிலங்குகளுக்கும் பிரபலமானதாக அறியப்படுகிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

அள்ளி அணைக்கும் இயற்கை; கோடைக்கு இதமாய் படகு சவாரி.. ஏழைகளின் ஊட்டியில் குவியும் மக்கள் - Spot Visit

ஏழைகளின் ஊட்டி ஏற்காடுஏழைகளின் ஊட்டி ஏற்காடுஏழைகளின் ஊட்டி ஏற்காடுஏழைகளின் ஊட்டி ஏற்காடு மேலும் பார்க்க

மியான்மார் நிலநடுக்கம் எதிரொலி; தாய்லாந்து பயணம் பாதுகாப்பானதா? வெளியுறவுத் துறை சொல்வது என்ன?

மியான்மாரில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, 6 பகுதிகளைப் பேரிடர் பகுதி என்று ராணுவ அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் தாய்லாந்து நாட்டிலும் உணரப்பட்டதாக ... மேலும் பார்க்க

ஒரே நாளில் குடும்பத்துடன் ஊட்டியை சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்கிறதா? பட்ஜெட் ஸ்பாட்ஸ்!

நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஓர் அழகான சுற்றுலா மலைவாசஸ்தல நகரம்தான் ஊட்டி.இங்கு கொட்டும் அருவிகள், அமைதியான ஏரிகள், அடர்ந்த காடுகள் மற்றும் தேயிலைத் தோட்டங்கள் என சுற்றுலா பயணிகளை பிரமிக்க வைக்க பல... மேலும் பார்க்க

வழிநெடுக அழகியல்! - தேசிய நெடுஞ்சாலை 85 பற்றித் தெரியுமா? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

இந்தியர்களை ஒன்றிணைத்த ரயில்கள்; மகாத்மா காந்தியின் அனுபவம் என்ன? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

கோடைகாலத்திலும் கிறிஸ்மஸ் கொண்டாடும் நகரம் பற்றி தெரியுமா? - ஏன் நிச்சயம் பார்க்க வேண்டும்?

கிறிஸ்மஸ் என்றவுடன் டிசம்பர் மாதம் தான் நினைவிற்கு வரும், அந்த மாதம் முழுக்க கொண்டாட்டங்கள் இருக்கும் என்பது பலரும் அறிந்ததே. ஆனால் ஒரு சிறிய நகரத்தில் வருஷத்தில் 364 நாட்களும் கிறிஸ்மஸ் கொண்டாடப்படுக... மேலும் பார்க்க