செய்திகள் :

மியான்மார் நிலநடுக்கம் எதிரொலி; தாய்லாந்து பயணம் பாதுகாப்பானதா? வெளியுறவுத் துறை சொல்வது என்ன?

post image

மியான்மாரில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, 6 பகுதிகளைப் பேரிடர் பகுதி என்று ராணுவ அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் தாய்லாந்து நாட்டிலும் உணரப்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மியான்மார் அவசரக்கால நிலையை அறிவித்துள்ளது. இருப்பினும் தாய்லாந்தின் துணைப் பிரதமர் அனுடின் சார்ன் விரகுல், எந்த அவசரக்கால நிலையும் அறிவிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

தாய்லாந்தில் உணரப்பட்ட நிலநடுக்கத்தால், அண்டை நாடான லாவோஸ், வங்கதேசம், சீனாவின் யுன்னான், குவாங்சி மாகாணங்கள், வடக்கு வியட்நாம் மற்றும் மேற்கு மலேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியா முழுவதும் அதிர்வு ஏற்பட்டுள்ளது.

தாய்லாந்தின் வடக்கே உள்ள சியாங் ராய் நகரிலும், வடக்கு நகரமான சியாங் மாய் நகரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன. அதன் பின்னர் விமானங்கள் மீண்டும் தொடங்கப்பட்டு விமான நிலையம் வழக்கம் போல் இயங்கத் தொடங்கியது.

மக்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு உள்ளூர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தற்போது நிலநடுக்கம் காரணமாகத் தாய்லாந்திற்குப் பயணம் செய்வது குறித்து இந்திய வெளியுறவு அலுவலகம் எந்த அவசர ஆலோசனையும் வெளியிடவில்லை.

நீங்கள் தாய்லாந்திலிருந்து அவசர உதவி தேவைப்பட்டால், பாங்காக்கில் உள்ள தூதரகத்தைத் தொடர்பு கொள்ள வெளியுறவு அலுவலகம் பரிந்துரைக்கிறது.

உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனையையும், உள்ளூர் ஊடகங்களையும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு சுற்றுலா நிறுவனத்திடம் உங்கள் பயணத்தை முன்பதிவு செய்திருந்தால், அவர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

`இந்தியாவின் முதல் காபி சாகுபடி நடந்த இடம்' எங்கு தெரியுமா? - அப்படி என்ன ஸ்பெஷல்?

பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா அவ்வப்போது ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவார்.அந்த வகையில் இந்தியாவில் அதிகம் அறியப்படாத ஒரு சுற்றுலா தளத்தை பற்றி கூறியிருக்கிறார். அ... மேலும் பார்க்க

அள்ளி அணைக்கும் இயற்கை; கோடைக்கு இதமாய் படகு சவாரி.. ஏழைகளின் ஊட்டியில் குவியும் மக்கள் - Spot Visit

ஏழைகளின் ஊட்டி ஏற்காடுஏழைகளின் ஊட்டி ஏற்காடுஏழைகளின் ஊட்டி ஏற்காடுஏழைகளின் ஊட்டி ஏற்காடு மேலும் பார்க்க

ஒரே நாளில் குடும்பத்துடன் ஊட்டியை சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்கிறதா? பட்ஜெட் ஸ்பாட்ஸ்!

நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஓர் அழகான சுற்றுலா மலைவாசஸ்தல நகரம்தான் ஊட்டி.இங்கு கொட்டும் அருவிகள், அமைதியான ஏரிகள், அடர்ந்த காடுகள் மற்றும் தேயிலைத் தோட்டங்கள் என சுற்றுலா பயணிகளை பிரமிக்க வைக்க பல... மேலும் பார்க்க

வழிநெடுக அழகியல்! - தேசிய நெடுஞ்சாலை 85 பற்றித் தெரியுமா? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

இந்தியர்களை ஒன்றிணைத்த ரயில்கள்; மகாத்மா காந்தியின் அனுபவம் என்ன? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

கோடைகாலத்திலும் கிறிஸ்மஸ் கொண்டாடும் நகரம் பற்றி தெரியுமா? - ஏன் நிச்சயம் பார்க்க வேண்டும்?

கிறிஸ்மஸ் என்றவுடன் டிசம்பர் மாதம் தான் நினைவிற்கு வரும், அந்த மாதம் முழுக்க கொண்டாட்டங்கள் இருக்கும் என்பது பலரும் அறிந்ததே. ஆனால் ஒரு சிறிய நகரத்தில் வருஷத்தில் 364 நாட்களும் கிறிஸ்மஸ் கொண்டாடப்படுக... மேலும் பார்க்க