செய்திகள் :

Myanmar Earthquake: மியான்மாரில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படக் காரணம் என்ன?

post image

மியான்மாரில் 7.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு நாட்டையே உலுக்கியுள்ளது.

இந்த நிலநடுக்கம் சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், மியான்மாரில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட 12 நிமிடங்களில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

நாட்டின் ராணுவ அரசு ஆறு பகுதிகளில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. மீட்புப் பணிகள் தீவிரம் நடைபெற்று வருகின்றன.

நிலநடுக்க அதிர்வு பதிவு

1988ல் ஏற்பட்ட நிலநடுக்கம்

இதற்கு முன்பு இந்த அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 1988 ஆம் ஆண்டு மியான்மாரில் ஏற்பட்டுள்ளது.

7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இந்திய எல்லையிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் அளவில் ஏற்பட்டுள்ளது. இதில் 730 மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

அதன் பின்னர் 2004 டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி 9.3 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. கோகோ தீவு வரை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.

அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது ஏன்?

பூமியின் மேற்பரப்பு பல பெரிய தட்டுகளால் ஆனது. இந்த தட்டுகள் நகரும்போது ஏற்படும் உராய்வு மற்றும் அழுத்தம் காரணமாக, பாறைகள் உடைந்து ஆற்றல் வெளியிடுகிறது.

ஆற்றல் வெளியீடு நில அதிர்வு அலைகளை உருவாக்குகின்றன. அவை பூமியின் மேற்பரப்பு வழியாகப் பரவி நிலநடுக்கத்தை ஏற்படுத்துகின்றன.

நிலநடுக்கங்கள் எரிமலை சரிவு மற்றும் வெடிப்பினாலும் ஏற்படுகின்றன. மியான்மார், சீனா, ஜப்பான், இந்தோனேசியா போன்ற சில பகுதிகள் புவியின் உட்புறச் சூழலின் பலவீனத்தன்மை காரணமாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மக்கள் எப்படி மீண்டனர்

நிலநடுக்கத்தால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது. போக்குவரத்துச் சேவைகள், நீர், மின்சாரம் போன்றவற்றிற்கு இடையூறு ஏற்பட்டன.

முக்கிய சமூக சேவைகளின் இழப்புகள் ஏற்பட்டன. அதன் பின்னர் மக்கள் படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர். அரசின் உதவியும், அதிக காப்பீட்டு பிரீமியங்களும் இதற்கு உதவியாக இருந்தன.

பாதிக்கப்பட்ட சமூகத்தின் சமூக பொருளாதார நிலையும் அவர்கள் படிப்படியாக மீட்டெடுத்துக் கொண்டு வந்தனர். இயற்கை பேரிடர் இயற்கையான ஒன்று என்றாலும் அதற்கான முன்னெச்சரிக்கைகளை எதிர்காலத்தில் எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Madhapar: ரூ.7000 கோடி வங்கிக்கணக்கில் வைத்திருக்கும் குஜராத் கிராமம்; சுவாரஸ்ய பின்னணி!

ரூ.700 கோடி வங்கிக் கணக்கில் வைப்புத் தொகையாக வைத்திருக்கும் பணக்கார கிராமத்தைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.குஜராத்தின் போர்பந்தர் நகரத்திலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிராமம்தான் மாதபர்.... மேலும் பார்க்க

சீனா: அவசர நேரத்தில் அம்மாவுக்குப் பிரசவம் பார்த்த 13 வயது சிறுவன்; நெகிழ வைத்த நிகழ்வு!

தாய்க்கு எதிர்பாராத விதமாகப் பிரசவ வலி ஏற்பட்ட போது, துணிச்சலுடன் செயல்பட்டு பிரசவம் பார்த்து தனது தம்பி பூமிக்கு வர உதவியிருக்கிறார் 13 வயது சிறுவன். மருத்துவப் பணியாளர் மொபைலில் தொடர்பில் இருக்கும்ப... மேலும் பார்க்க

`இது கிராமமா கேன்சர் மண்டலமா?’ - அதிர்ச்சியில் ஆந்திர அரசு - விளக்கம் தரும் மருத்துவர்

இது கிராமமா அல்லது இந்தியாவின் புற்றுநோய் மண்டலமா என்று தகவல் தெரிந்த பலரையும் பயமுறுத்திக்கொண்டிருக்கிறது ஆந்திரப்பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலபத்ரம் என்கிற சிறு கிராமம். அப்படி ... மேலும் பார்க்க

தாய்ப்பால் சுவையில் ஐஸ் கிரீமை அறிமுகப்படுத்தும் அமெரிக்க நிறுவனம் - நெட்டிசன்களின் ரியாக்‌ஷன் என்ன?

தாய்ப்பாலுக்கு நிகரான உணவு ஏதும் இல்லை என்று கூறிவரும் நிலையில், அமெரிக்காவின் பிரபல பிராண்டான ஃப்ரீடா (Frida), தாய்ப்பால் சுவையில் ஐஸ்கிரீமை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. கர்ப்ப காலத்தைப் ப... மேலும் பார்க்க

Vikatan Weekly Quiz: எம்.பி-க்கள் சம்பளம் உயர்வு டு ATM கட்டணம் உயர்வு - இந்த வார க்விஸ்க்கு ரெடியா?

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வு, ஏடிஎம் கட்டணம் உயர்வு, இளையராஜாவுக்கு பாராட்டு விழா அறிவிப்பு, சர்வதேச கால்பந்து போட்டியில் கின்னஸ் சாதனை என இந்த வாரத்தின் சம்பவங்கள் பல பல... அவற்றின் கேள்வி... மேலும் பார்க்க

`எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம்' - குணால் கம்ராவை கைது செய்ய சிவசேனா அமைச்சர் கோரிக்கை

மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவில் இருந்து வெளியில் வந்ததை சித்திரிக்கும் விதமாக, அவரை துரோகி என்று விமர்சித்து காமெடி நடிகர் குணால் கம்ரா காமெடி ஷோவில் பாடினார். மும்பையில் இக்காமெட... மேலும் பார்க்க