செய்திகள் :

ரமலான் மாதத்தில் அதிக தாக்குதல்களை சந்தித்த நாடு பாகிஸ்தான்!

post image

ரமலான் மாதத்தில் அதிக தாக்குதல்களை சந்தித்த நாடாக பாகிஸ்தான் உள்ளது என அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான திங்க் டேங்க் தெரிவித்துள்ளது.

ரமலானையொட்டி பகையுணர்வை சில அமைப்புகள் கைவிட்டிருந்தாலும், சமீப ஆண்டுகளாக ரமலான் மாதத்தில் அதிக தாக்குதல்களை சந்தித்த நாடாகவும் பாகிஸ்தான் மாறியுள்ளது.

அமைதி ஆய்வுக்கான பாகிஸ்தானைச் சேர்ந்த நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ரமலான் மாதத்தில் 84 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரமலான் மாதத்தில் 26 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் தலிபான்கள் 2022ஆம் ஆண்டு அரசுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொண்டனர். ஆனால், பலூசிஸ்தான் விடுதலை அமைப்பினர் பாகிஸ்தானில் அரசுக்கு எதிராக தாக்குதல்களைத் தொடர்ந்து வருகின்றனர். இந்த இரு அமைப்புகளுமே பாகிஸ்தானில் வன்முறை அதிகரிக்க, அமைதியின்மை நிலவக் காரணமாகியுள்ளன.

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் மார்ச் 11ஆம் தேதி பயணிகள் ரயில் சிறைப்பிடிக்கப்பட்டதில், 25 பேர் கொல்லப்பட்டனர். ரமலான் மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் மட்டும் 61 தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன.

2025 மார்ச் 2 முதல் 20ஆம் தேதி வரையிலான 20 நாள்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக 56 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

மோதல் மற்றும் பாதுகாப்பு ஆய்வுக்கான பாகிஸ்தான் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அப்துல்லா கான் இது குறித்துப் பேசியதாவது,

''பல்வேறு குழுக்களால் பாகிஸ்தானில் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. பலூச் அமைப்பினர் ஒருங்கிணைந்து தாக்குதல் நடத்துகின்றனர். நாட்டின் தென்மேற்கு பகுதியில் ஹபீஸ் குல் பகதூர் அமைப்பு பலூச் அமைப்பை விடக் கொடியது. அரசுடனான தாக்குதலில் இவர்களிடையே மோதல் ஏற்படுவதுண்டு'' எனக் குறிப்பிட்டார்.

மேலும், ''சில தடை செய்யப்பட்ட அமைப்பான லஷ்கர் - இ - இஸ்லாம், கைபர் கனவாய் பகுதிகளில் தாக்குதல் நடத்துகிறது. பாகிஸ்தானின் அண்டை நாடான ஆப்கானிஸ்தான் (தலிபான் ஆட்சி) இதுபோன்ற கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஆதரவளித்து வருகிறது என்பதே பாகிஸ்தானின் நீண்டநாள் குற்றச்சாட்டாக உள்ளது.

தொடர் தாக்குதலால் அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான நம்பகத்தன்மையில் விரிசலை அதிகரித்துள்ளது. அரசுக்கு மக்கள் ஆதரவு திரும்பக் கிடைக்க வேண்டியது அவசியமானது. அரசின் முதல் கேடயம் பொதுமக்கள்தான்'' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | ரமலான் தொழுகைக்குப் பிறகு பாலஸ்தீன கொடியை ஏந்தி முழக்கம்! வைரலாகும் விடியோ!

சொகுசு கப்பலில் பரவிய நோரோ வைரஸ்: 200 பயணிகளுக்கு நோய் பாதிப்பு!

அமெரிக்காவில் சொகுசு கப்பலில் வைரஸ் நோய் தாக்கியதில் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, ஒரு சொகுசு பயணக் கப... மேலும் பார்க்க

இந்தியா-சீனா ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்: அதிபர் ஷி ஜின்பிங்

இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் வலியுறுத்தினார்.இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு தூதரக உறவுகளின் 75-ஆவது ஆண்டுவிழாவையொட்டி சீன அதிப... மேலும் பார்க்க

‘அணு ஆயுதம் தயாரிப்பதே ஈரானுக்கு ஒரே வழி’

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் தங்கள் மீது தாக்குதல் நடத்தினால், அதை எதிா்கொள்ள தங்களுக்கு அணு ஆயுதம் தயாரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனியின் முதன்மை ஆலோசக... மேலும் பார்க்க

இந்திய பொருள்களுக்கு வரிவிதிப்பு: டிரம்ப் இன்று அறிவிக்கிறாா்

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்புகளை அதிபா் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (ஏப். 2) அறிவிக்கவுள்ளாா். அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறை பதவியேற்ற பின்னா், அந்நாட்டின் ... மேலும் பார்க்க

மியான்மா் நிலநடுக்கம்: 2,700-ஐ கடந்த உயிரிழப்பு

மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,700-ஐக் கடந்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு ராணுவ ஆட்சியாளா் மின் ஆங் லியாங் தலைநகா் நேபிடாவில் ச... மேலும் பார்க்க

அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா கணிசமாகக் குறைத்திடும்: மறைமுகமாக எச்சரிக்கிறாரா டிரம்ப்?

வாஷிங்டன்: இந்தியாவில் அமெரிக்க பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி விரைவில் குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.ஏப்ரல் 2-ஆம் தேதிமுதல், அமெரிக்க பொருள்களுக்கு எந்தெ... மேலும் பார்க்க