செய்திகள் :

அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா கணிசமாகக் குறைத்திடும்: மறைமுகமாக எச்சரிக்கிறாரா டிரம்ப்?

post image

வாஷிங்டன்: இந்தியாவில் அமெரிக்க பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி விரைவில் குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

ஏப்ரல் 2-ஆம் தேதிமுதல், அமெரிக்க பொருள்களுக்கு எந்தெந்த நாடுகளில் எந்தளவுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதோ அதேபாணியில், அமெரிக்காவிலும் வெளிநாட்டு பொருள்கள் மீது வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்திருந்த நிலையில், இது குறித்து, செவ்வாய்க்கிழமை(ஏப். 1) பேசிய டிரம்ப், ”அமெரிக்க பொருள்களுக்கான வரியை இந்தியா கணிசமாகக் குறைக்கும் என்று தெரிய வந்துள்ளது. அதேபோல, இன்னும் பல நாடுகள் வரி குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளன’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்தியாவில் அரசு முன்னெடுத்து வரும் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் மற்றும் பற் வர்த்தக கொள்கைகளைக் குறிப்பிட்டு விமர்சித்திருந்த டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிர்வாகம், அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் வேளாண் பொருள்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படுவதற்கும் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தது. இதனிடையே, ஏப். 2-முதல், வெளிநாட்டு பொருள்களுக்கு அதிகமான வரிவிதிக்கப் போவதாக தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து, அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் குறிப்பிட்ட சில பொருள்களுக்கு வரியை குறைத்து வரி தளர்வு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. மேலும், அமெரிக்க நிறுவனங்களுக்குச் சாதகமாக அந்நாட்டில் தயாரிக்கப்படும் பல பொருள்களுக்கும் வரி குறைக்கப்படும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டிரம்ப்பும் பிரதமர் மோடியும் அமெரிக்காவில் நிகழாண்டின் தொடக்கத்தில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் விளைவாக, இந்த வரி தளர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகப் பார்க்கப்படுகின்றன.

இந்த நிலையில், மத்திய அரசு அமெரிக்காவுக்கு மேலும் பல சலுகைகள் காட்டும் என்பதை அதீத நம்பிக்கையுடன் வெளிப்படுத்தியிருக்கிறார் டிரம்ப்.ஒருவேளை, அப்படிச் செய்யாவிட்டால், இந்திய பொருள்களுக்கு வரி அதிகம் விதிக்கப்படும் என்கிற மறைமுக எச்சரிக்கையாகவும் டிரம்ப்பின் இந்த கருத்து பார்க்கப்படுகறது.

பாகிஸ்தான் அதிபருக்கு கரோனா தொற்று பாதிப்பு!

பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி ஜா்தாரிக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி ஜா்தாரி (69) உடல்நிலை பாதிப்பு காரணமாக கராச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்... மேலும் பார்க்க

மருத்துவ சிகிச்சைக்காக தென் கொரியா செல்லும் வெளிநாட்டவர் எண்ணிக்கை அதிகரிப்பு!

மருத்துவ சிகிச்சைக்காக தென் கொரியா செல்லும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தென் கொரியாவுக்கு கடந்த ஆண்டில் மட்டும் 17.7 லட்சம் வெளிநாட்டவர்கள் ம... மேலும் பார்க்க

மியான்மா் நிலநடுக்கம்: உயிரிழப்பு 3,643-ஆக உயர்வு

மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3,643-ஐக் கடந்துள்ள நிலையில், மிக மோசமான இயற்கை பேரழிவு நடந்து ஐந்து நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அதிபர் மருத்துவமனையில் அனுமதி!

பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி ஜா்தாரி உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 69 வயதாகும் அதிபர், காய்ச்சல், தொற்று காரணமாக கராச்சியில... மேலும் பார்க்க

டிரம்ப்பின் வரிவிதிப்பால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகள் எவை தெரியுமா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள வரிவிதிப்பு பல்வேறு நாடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று டிரம்ப்பின் அரசு தெரிவித்திருக்கிறது. ஆனாலும், இந்த வரிவிதிப்பால் பல நாடுகள் பாதிப்புக்குள்ளாகும... மேலும் பார்க்க

சொகுசு கப்பலில் பரவிய நோரோ வைரஸ்: 200 பயணிகளுக்கு நோய் பாதிப்பு!

அமெரிக்காவில் சொகுசு கப்பலில் வைரஸ் நோய் தாக்கியதில் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, ஒரு சொகுசு பயணக் கப... மேலும் பார்க்க