செய்திகள் :

சைபர் கிரிமினல்களிடம் ரூ.50 லட்சத்தை இழந்த வயதான தம்பதி தற்கொலை

post image

இணையத்தளக் குற்றவாளிகள் பெண்கள் மற்றும் முதியவர்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து அவர்களிடம் இருக்கும் பணத்தைப் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடக்கின்றன. அதிகமானோர் கோடிக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள பீடி என்ற கிராமத்தில் வசித்தவர் டையோக்ஜெரான் சாந்தன் (82). இவர் மகாராஷ்டிரா தலைமைச் செயலகத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவர்.

இவரது மனைவி பிளாவியா (79). இவர்களுக்குக் குழந்தை கிடையாது. இரண்டு பேரும் தங்களது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தற்கொலைக்கு முன்பு இரண்டு பக்கத்திற்குக் கடிதம் எழுதி வைத்திருந்தனர். அக்கடிதத்தில் தங்களது இந்த முடிவுக்கு யாரும் காரணம் கிடையாது என்றும், யாரது தயவிலும் வாழ விரும்பவில்லை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

அனில் மற்றும் சுமித் ஆகியோர் இத்தம்பதியை ஆன்லைனில் மிரட்டி ரூ.50 லட்சத்தைப் பறித்துள்ளது அவர்களது கடிதத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

உங்கள் பெயரில் வாங்கப்பட்ட சிம்கார்டை கொண்டு சட்டவிரோத விளம்பரம் மற்றும் துன்புறுத்தலில் ஈடுபட்டு இருப்பதாகச் சாந்தனிடம் இருவரும் மிரட்டியுள்ளனர். 50 லட்சம் ரூபாயையும் கேட்டுள்ளனர்.

அதோடு சாந்தனிடம் இருக்கும் சொத்து விபரங்களைத் தெரிவிக்கும்படி கேட்டுள்ளார். அவ்வாறு கூறவில்லையெனில் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்று மிரட்டி இருக்கிறார்.

இதனால் சாந்தன் பல்வேறு வழிகளில் ரூ.50 லட்சம் திரட்டி அவர்கள் சொன்ன வங்கிக்கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்துள்ளார். சாந்தன் தன்னிடம் இருந்த தங்க நகைகளை ரூ.7.15 லட்சத்திற்கு அடமானம் வைத்து அதனையும் அனுப்பி இருக்கிறார்.

மேலும் தனக்குத் தெரிந்த நண்பர்களிடம் கடனும் வாங்கி அனுப்பியதாகக் கடிதத்தில் சாந்தன் குறிப்பிட்டுள்ளார். அந்த அளவுக்குப் பணம் அனுப்பிய பிறகும் தொடர்ந்து பணம் கேட்டு சித்ரவதை செய்து கொண்டிருந்ததால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

arrest

எங்களுக்கு யாரும் ஆதரவு இல்லை. யாரது ஆதரவிலும் வாழவும் விரும்பவில்லை. எனவேதான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம் என்றும், தங்களது உடலை மருத்துவப் பரிசோதனை தேவைக்குக் கொடுத்துவிடும்படியும் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களின் கடிதத்தின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவர்களின் மொபைல் போனில் இருக்கும் போன் நம்பர்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

புதுக்கோட்டையில் மனைவியைச் சரமாரியாக வெட்டிக் கொன்ற கணவர்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள எம்.ராசியமங்கலத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மகள் இந்திராணி (வயது 37).இவருக்கு ஏற்கனவே திருமணமாகி தவபாலன் (வயது 12) என்ற ஆண் குழந்தை உள்ள நிலையில், கணவரு... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: `அப்பா ஆம்புலன்ஸில போறார், ப்ளீஸ் விடுங்கண்ணா’ - கெஞ்சிய சிறுவனிடம் செல்போன் பறித்த மூவர்

தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுவன். அவரின் தந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைத்த அந்த சிறுவன் தன் தந்தையை அதில் ஏற்றி விட்டுள்ளார். ஆம்புலன்... மேலும் பார்க்க

தலையில் அரிவாளால் வெட்டி சென்னை வழக்கறிஞர் படுகொலை

சென்னை விருகம்பாக்கம், கணபதி ராஜ் நகர் மெயின் ரோடு பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக விருகம்பாக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் வந்தது.உடனடியாக போலீஸார்... மேலும் பார்க்க

``மீரட்டில் நடந்த கொலையைப் போல..'' - காதலனுடன் சேர்ந்து கணவனை மிரட்டிய மனைவி; உ.பி.,யில் அதிர்ச்சி

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் முஸ்கான் என்ற பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டார். நாளடைவில் புதுக்காதலன் உடன் ஏற்பட்ட நெருக்கத்தால் காதல் கணவனை புதுக்காதலனோடு சேர்ந்து கொலை செய்து டிரம்மில் அடைத்... மேலும் பார்க்க

வயிற்று வலி; ஏர்போர்ட் கழிவறைக்கு சென்று குழந்தைபெற்று குப்பை தொட்டியில் போட்ட கல்லூரி மாணவி

மும்பை விமான நிலையத்தில் உள்ள கழிவறையில் இருந்த குப்பை தொட்டியில் குழந்தை ஒன்றின் உடல் கிடந்தது. அதனை பார்த்த துப்புரவு தொழிலாளி இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். பிறந்தவுடன் குழந்தை ... மேலும் பார்க்க

"தன்னுடன் பேச மறுத்ததால் உயிரோடு தீ வைத்த காதலன்" - சிகிச்சை பலனின்றி இளம்பெண் உயிரிழந்த பரிதாபம்!

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகேயுள்ள இளம்புவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி காளியம்மாள். கருத்து வேறுபாடு காரணமாக காளியம்மாள் தனது கணவரை பிரிந்து தனது 2 மகன்கள் மற்றும் மகளுடன... மேலும் பார்க்க