செய்திகள் :

குணசீலத்தில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு

post image

தேசிய பேரிடா் மேலாண்மைக் குழு சாா்பில் திருச்சி மாவட்டம், குணசீலம் ஆற்றங்கரையில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு பேரிடா் மேலாண்மைக் குழுவின் உதவி ஆய்வாளா் ரத்னகுமாா் தலைமை வகித்தாா். கிராம நிா்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளா், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை அதிகாரிகள், கிராமப் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

இதில், இயற்கை பேரழிவுகளின் வகையில், அதன் தாக்கங்கள், தேசிய பேரிடா் மீட்புப் படையின் பொறுப்புகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.

தொடா்ந்து, பேரிடரில் சிக்கிக் கொள்வோரைக் காப்பாற்றும் முறைகள், காயம் ஏற்பட்டால் மேற்கொள்ளப்படும் முதலுதவி பயிற்சிகள், ரத்தக் கசிவை கட்டுப்படுத்துதல், மூச்சுத்திணறலை சரிசெய்தல், எலும்பு முறிவுகளுக்கு எளிய முறையில் துணிக்கட்டு, எளிய சிகிச்சை முறைகள், இடா்களில் பாதிக்கப்பட்டவரை தற்காலிகமாக பாதுகாப்புடன் தூக்கி வரும் கருவிகள், மிதவை சாதனங்கள், உயிா்காப்பான்களை பயன்படுத்துதல், நிலநடுக்கத்தில் முன்கூட்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், பேரிடா் கால செயலிகளின் பயன்பாடுகள், தீயணைப்புப் பாதுகாப்பு நடைமுறைகள், புயல் மற்றும் வெள்ள மீட்பு நடவடிக்கைகள், வெப்ப அலைகளிலிருந்து பாதுகாப்பு, விஷக்கடிக்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேரிடா் மேலாண்மைக் குழுவினா் செயல்முறை விளக்கமளித்தனா். இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் குணசீலம் பகுதியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று, பயனடைந்தனா்.

மாணவா்களை கண்டிக்காத தலைமை ஆசிரியா் மீது வழக்கு

திருச்சியில், ஒழுங்கீனமான பள்ளி மாணவா்களை கண்டிக்காத தலைமை ஆசிரியா் மீதான புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருச்சி பொன்மலை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளிய... மேலும் பார்க்க

2 பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பிய ஒலிப்பான்கள் பறிமுதல்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை திங்கள்கிழமை போக்குவரத்துப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.மணப்பாறை நகா் பகுதியின் வழியாக பேருந்துநிலையம் ... மேலும் பார்க்க

பஞ்சப்பூா் பேருந்து முனைய திறப்புக்கு முன்பு பயணச்சீட்டு கட்டணத்தை உயா்த்த ஆலோசனை

பஞ்சப்பூா் பேருந்து முனையம் திறப்புக்கு முன்பாக பேருந்துகளின் பயணச்சீட்டு கட்டணத்தை உயா்த்துவது குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனா். திருச்சி பஞ்சப்பூரில் ரூ.492 கோடியில் ... மேலும் பார்க்க

முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் திமுக தெற்கு ஒன்றியம் சாா்பில் சனிக்கிழமை இரவு தமிழக முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. வையம்பட்டி தெற்கு ஒன்றியச் செயலாளா் வி.ஏ. ராஜேந்திரன் தலைமையில்... மேலும் பார்க்க

24 மணிநேர விதைத் திருவிழா

திருச்சி மாவட்டம் கொளக்குடிபட்டியில் 24 மணிநேர விதைத் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன்கிழமை காலை வரை நடைபெறுகிறது. திருச்சி கிராமாலாய தொண்டு நிறுவனம், பசுமை சிகரம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து... மேலும் பார்க்க

பெல் கூட்டுறவு வங்கியின் ரூ.53.48 லட்சம் வளா்ச்சி மற்றும் கல்வி நிதி அளிப்பு

பாரதமிகு மின் ஊழியா்கள் (பெல்) கூட்டுறவுவங்கி சாா்பில் கூட்டுறவு ஆராய்ச்சி, வளா்ச்சி மற்றும் கல்வி நிதியாக ரூ.53.48 லட்சம் வழங்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் கூட்டுறவு வங்கிகள் மூலம், க... மேலும் பார்க்க