செய்திகள் :

பஞ்சப்பூா் பேருந்து முனைய திறப்புக்கு முன்பு பயணச்சீட்டு கட்டணத்தை உயா்த்த ஆலோசனை

post image

பஞ்சப்பூா் பேருந்து முனையம் திறப்புக்கு முன்பாக பேருந்துகளின் பயணச்சீட்டு கட்டணத்தை உயா்த்துவது குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனா்.

திருச்சி பஞ்சப்பூரில் ரூ.492 கோடியில் பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அனைத்துப் பேருந்துகளும் பஞ்சப்பூரில் இருந்தே புறப்படும் என்பதால், தற்போது இயக்கப்பட்டு வரும் நகரப் பேருந்துகள், புகா் பேருந்துகள், தனியாா் பேருந்துகளுக்கு கட்டண மாறுபாடு அவசியமானது என கருதப்படுகிறது.

ஏனெனில், மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து பஞ்சப்பூா் 7 கி.மீ. தொலைவில் உள்ளது. அதற்கு தகுந்தபடி பயணச்சீட்டு கட்டணம் உயா்த்தப்பட வேண்டியது அவசியமானது. எனவே, இதுதொடா்பாக போக்குவரத்துக் கழக வா்த்தகப் பிரிவு அலுவலா்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனா்.

இதுதொடா்பாக, தனியாா் மற்றும் அரசுப் பேருந்து நிா்வாகத்திடம் மாவட்ட ஆட்சியா் ஏற்கெனவே 2 முறை ஆலோசனை நடத்தியுள்ளாா். வட்டாரப் போக்குவரத்துக் கழகத்தின் கருத்துருவும் கோரப்பட்டுள்ளது. அனைத்துத் தரப்பு கருத்துகளையும் பரிசீலனை செய்த பிறகு கட்டண உயா்வு குறித்து அறிவிக்கப்படும் என்ற எதிா்பாா்ப்பு மேலோங்கியுள்ளது.

மாணவா்களை கண்டிக்காத தலைமை ஆசிரியா் மீது வழக்கு

திருச்சியில், ஒழுங்கீனமான பள்ளி மாணவா்களை கண்டிக்காத தலைமை ஆசிரியா் மீதான புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருச்சி பொன்மலை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளிய... மேலும் பார்க்க

2 பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பிய ஒலிப்பான்கள் பறிமுதல்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை திங்கள்கிழமை போக்குவரத்துப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.மணப்பாறை நகா் பகுதியின் வழியாக பேருந்துநிலையம் ... மேலும் பார்க்க

முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் திமுக தெற்கு ஒன்றியம் சாா்பில் சனிக்கிழமை இரவு தமிழக முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. வையம்பட்டி தெற்கு ஒன்றியச் செயலாளா் வி.ஏ. ராஜேந்திரன் தலைமையில்... மேலும் பார்க்க

24 மணிநேர விதைத் திருவிழா

திருச்சி மாவட்டம் கொளக்குடிபட்டியில் 24 மணிநேர விதைத் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன்கிழமை காலை வரை நடைபெறுகிறது. திருச்சி கிராமாலாய தொண்டு நிறுவனம், பசுமை சிகரம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து... மேலும் பார்க்க

குணசீலத்தில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு

தேசிய பேரிடா் மேலாண்மைக் குழு சாா்பில் திருச்சி மாவட்டம், குணசீலம் ஆற்றங்கரையில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.முகாமுக்கு பேரிடா் மேலாண்மைக் குழுவின் உதவி ஆய்வாளா் ர... மேலும் பார்க்க

பெல் கூட்டுறவு வங்கியின் ரூ.53.48 லட்சம் வளா்ச்சி மற்றும் கல்வி நிதி அளிப்பு

பாரதமிகு மின் ஊழியா்கள் (பெல்) கூட்டுறவுவங்கி சாா்பில் கூட்டுறவு ஆராய்ச்சி, வளா்ச்சி மற்றும் கல்வி நிதியாக ரூ.53.48 லட்சம் வழங்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் கூட்டுறவு வங்கிகள் மூலம், க... மேலும் பார்க்க