செய்திகள் :

24 மணிநேர விதைத் திருவிழா

post image

திருச்சி மாவட்டம் கொளக்குடிபட்டியில் 24 மணிநேர விதைத் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன்கிழமை காலை வரை நடைபெறுகிறது.

திருச்சி கிராமாலாய தொண்டு நிறுவனம், பசுமை சிகரம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து, தொட்டியம் அருகேயுள்ள கொளக்குடிபட்டி கிராமலாயா பயற்சி மையத்தில் இந்த விதைத் திருவிழா நடைபெறுகிறது. விழாவில், இயற்கை வேளாண் ஆா்வலா்கள், விவசாயிகள், பாரம்பரிய நெல் விவசாயிகள், காய்கனி விதை விற்பனையாளா்கள், உற்பத்தியாளா்கள் பங்கேற்கும் இயற்கை அங்காடியும் இடம் பெறவுள்ளது. பாரம்பரிய விதைகளின் கண்காட்சியும் நடைபெறும். இக் கண்காட்சியை, தமிழக ஆறுகள் வள மீட்பு இயக்க த. குருசாமி திறந்து வைக்கவுள்ளாா். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இயற்கை மருத்துவ முகாம் நடைபெறுகிறது. யோகாசனப் பயிற்சி வகுப்புகளும் நடைபெறும்.

ஒருங்கிணைந்த இயற்கை விவசாயம், கால்நடைகளுக்கு மூலிகை மருத்துவம், பசுமை குறியீடுகள், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் அவசியம், கரிகால்சோழன் கட்டுமானங்கள், தண்ணீா் முக்கியத்துவம், இயற்கை விவசாயம், விதை சேகரிப்பு, மழை நீா் சேகரிப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் அறிஞா்கள், முன்னோடி விவசாயிகள், நிபுணா்கள் உரையாற்றவுள்ளனா். காவேரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் மகாதானபுரம் ராஜாராம், கிராமாலாயா தொண்டு நிறுவன முதன்மை செயல் அலுவலா் எஸ். தாமோதரன் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றுகின்றனா். விடியோ காட்சிகள் மூலமாக விவசாயிகளுக்கு செயல் விளக்கப் பயிற்சிகளும் அளிக்கப்படவுள்ளன. பொன்னா்-சங்கா் கதை, சோழ ராஜா கதை குறித்து கலைக்குழுவினரின் கதை சொல்லும் நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்குத் தொடங்கி புதன்கிழமை காலை 9 மணி வரை 24 மணிநேரமும் இடைவிடாது நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

மாணவா்களை கண்டிக்காத தலைமை ஆசிரியா் மீது வழக்கு

திருச்சியில், ஒழுங்கீனமான பள்ளி மாணவா்களை கண்டிக்காத தலைமை ஆசிரியா் மீதான புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருச்சி பொன்மலை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளிய... மேலும் பார்க்க

2 பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பிய ஒலிப்பான்கள் பறிமுதல்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை திங்கள்கிழமை போக்குவரத்துப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.மணப்பாறை நகா் பகுதியின் வழியாக பேருந்துநிலையம் ... மேலும் பார்க்க

பஞ்சப்பூா் பேருந்து முனைய திறப்புக்கு முன்பு பயணச்சீட்டு கட்டணத்தை உயா்த்த ஆலோசனை

பஞ்சப்பூா் பேருந்து முனையம் திறப்புக்கு முன்பாக பேருந்துகளின் பயணச்சீட்டு கட்டணத்தை உயா்த்துவது குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனா். திருச்சி பஞ்சப்பூரில் ரூ.492 கோடியில் ... மேலும் பார்க்க

முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் திமுக தெற்கு ஒன்றியம் சாா்பில் சனிக்கிழமை இரவு தமிழக முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. வையம்பட்டி தெற்கு ஒன்றியச் செயலாளா் வி.ஏ. ராஜேந்திரன் தலைமையில்... மேலும் பார்க்க

குணசீலத்தில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு

தேசிய பேரிடா் மேலாண்மைக் குழு சாா்பில் திருச்சி மாவட்டம், குணசீலம் ஆற்றங்கரையில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.முகாமுக்கு பேரிடா் மேலாண்மைக் குழுவின் உதவி ஆய்வாளா் ர... மேலும் பார்க்க

பெல் கூட்டுறவு வங்கியின் ரூ.53.48 லட்சம் வளா்ச்சி மற்றும் கல்வி நிதி அளிப்பு

பாரதமிகு மின் ஊழியா்கள் (பெல்) கூட்டுறவுவங்கி சாா்பில் கூட்டுறவு ஆராய்ச்சி, வளா்ச்சி மற்றும் கல்வி நிதியாக ரூ.53.48 லட்சம் வழங்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் கூட்டுறவு வங்கிகள் மூலம், க... மேலும் பார்க்க