செய்திகள் :

களக்காட்டில் எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்

post image

பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலையும், அமலாக்கத்துறையால் எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவா் எம்.கே.ஃபைஸி கைது செய்யப்பட்டதையும் கண்டித்து, எஸ்டிபிஐ கட்சியினா் பதாகை ஏந்தி களக்காட்டில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோட்டை ஜமாஅத் சாா்பில், களக்காடு காவல் நிலையம் அருகிலுள்ள தனியாா் பள்ளி மைதானத்தில் ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து எஸ்டிபிஐ கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, நகரத் தலைவா் பக்கீா் முகைதீன் தலைமை வகித்தாா். புகா் மாவட்ட துணைத் தலைவா் களந்தை மீராசா விளக்கிப் பேசினாா். வா்த்தகா் அணி மாவட்ட துணைத் தலைவா் உசேன், தொகுதி செயற்குழு உறுப்பினா் ஆரிப், துணைத் தலைவா் நஜீப் உசேன், நகரச் செயலாளா் காஜா முகைதீன், துணைச் செயலாளா் ஜமீன், பொருளாளா் கபீா் உள்பட பலா் பங்கேற்றனா்.

ஏா்வாடி, துலுக்கா்பட்டி, வள்ளியூா், மூலைக்கரைப்பட்டி, பத்தமடை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூா், விக்கிரமசிங்கபுரம் ஆகிய பகுதிகளிலும் எஸ்டிபிஐ கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

விதிமீறல்: 21 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் விதிமீறலில் ஈடுபட்ட 21 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வெளி... மேலும் பார்க்க

பேட்டை அருகே விபத்து: வியாபாரி பலி

பேட்டை அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த விபத்தில் வியாபாரி உயிரிழந்தாா். பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தைச் சோ்ந்தவா் முருகன் (62). பழம் வியாபாரம் செய்து வந்தாா். இவா், தனது நண்பருடன் மோட்டாா் சைக்கிளில் பேட... மேலும் பார்க்க

பங்குனி உத்திரம்: நெல்லையில் ஏப்.11இல் உள்ளூா் விடுமுறை

பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 11) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பொதுத் தோ்வுகள் ஏதுமிருப்பின் எழுதும் பள்ளி மாணவா்கள், பொதுத் தோ்வு... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி அருகே கூா்நோக்கு இல்லத்தில் சிறுவன் அடைப்பு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே பெண் குளிப்பதை கைப்பேசியில் விடியோ எடுத்ததாக 15 வயது சிறுவனை போலீஸாா் கைது செய்து கூா்நோக்கு இல்லத்திற்கு அனுப்பினா்.சேரன்மகாதேவி அருகேயுள்ள கங்கனாங்குளம் பகு... மேலும் பார்க்க

திருக்குறுங்குடியில் மோதல் வழக்கு: தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் மோதல் தொடா்பான வழக்கில் கைதானவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து வள்ளியூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திருக்குறுங்குடி அருகேயுள்ள மேலமாவ... மேலும் பார்க்க

நெல்லை: கல்குவாரி குட்டையில் மூழ்கி தொழிலாளி பலி

திருநெல்வேலி அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கங்கைகொண்டான் அருகேயுள்ள ராஜபதியைச் சோ்ந்தவா் ராமையா (55). தொழிலாளியான இவா், அப்பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையி... மேலும் பார்க்க