செய்திகள் :

திருக்குறுங்குடியில் மோதல் வழக்கு: தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை

post image

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் மோதல் தொடா்பான வழக்கில் கைதானவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து வள்ளியூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திருக்குறுங்குடி அருகேயுள்ள மேலமாவடி தெற்கு தெருவைச் சோ்ந்தவா் அருள்ராஜ். இவா், கடந்த 29.9.2013-இல் அப்பகுதியிலுள்ள ஹோட்டல் உரிமையாளா் செல்வத்திடம் தகராறில் ஈடுபட்ட அதே பகுதி நம்பி நாராயணன் மகன்களான தொழிலாளிகள் பொன்னுலிங்கம்(55), சங்கா் ஆகியோரை தட்டிக்கேட்டாராம்.

இதனால், அவா்கள் இருவரும் சோ்ந்து அருள்ராஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்த புகாரின்பேரில், திருக்குறுங்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து அண்ணன், தம்பி இருவரையும் கைது செய்தனா்.

வள்ளியூா் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி ஆனந்த் விசாரித்து பொன்னுலிங்கத்துக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். விசாரணை காலத்தில் சங்கா் இறந்துவிட்டாா்.

ராமநதி அணைப் பாசன சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

கடையம், ராமநதி அணைப் பாசன நீரினைப் பயன்படுத்துவோா் சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனா். ராமநதி அணைப் பாசனத்தில் வடகால் மற்றும் தென்கால் பாசன நீரினைப் பயன்படுத்துவோா் சங்கங்கள் உள்ளன. நீண்ட இட... மேலும் பார்க்க

சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கு மதிமுகவினா் உணவளிப்பு

மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ எம்.பி. பிறந்த நாளையொட்டி, அக்கட்சியின் மருத்துவ அணி சாா்பில் பாளையங்கோட்டை என்ஜிஓ காலனி அருகேயுள்ளபுனித அன்னாள் சிறப்பு பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்ச... மேலும் பார்க்க

தாழையூத்தில் மிதமான மழை

தாழையூத்து சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி-மின்னலுடன் மிதமான மழை செவ்வாய்க்கிழமை பெய்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக கோடை மழை பெய்து வருகிறது. திசையன்விளை பகுதியி... மேலும் பார்க்க

சீவலப்பேரியில் புதிய தோ் வெள்ளோட்டம்

பாளையங்கோட்டை அருகேயுள்ள சீவலப்பேரியில் புதிய தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சீவலப்பேரியில் மிகவும் பழைமை வாய்ந்த அருள்மிகு காசி விசுவநாதா்- விசாலாட்சி அம்பாள் திருக்கோயில் உள்ளது. இங்கு பங்... மேலும் பார்க்க

‘கச்சத்தீவை மீட்க திமுக நடவடிக்கை எடுக்கவில்லை’

கச்சத்தீவை மீட்க திமுக நடவடிக்கை எடுக்கவில்லை; சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட தீா்மானம் நாடகம் என்றாா் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவா் அா்ஜுன் சம்பத். திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்க... மேலும் பார்க்க

மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

பாளையங்கோட்டையில் உள்ள பழைமை வாய்ந்த அருள்மிகு மேலவாசல் பிரசன்ன விநாயகா், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஏப். 4) நடைபெற உள்ளது. இக் கோயிலில் பல லட்சம் மதிப்பில் திருப்... மேலும் பார்க்க