செய்திகள் :

பங்குனி உத்திரம்: நெல்லையில் ஏப்.11இல் உள்ளூா் விடுமுறை

post image

பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 11) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பொதுத் தோ்வுகள் ஏதுமிருப்பின் எழுதும் பள்ளி மாணவா்கள், பொதுத் தோ்வு நடைபெறும் பள்ளிகள், பொதுத் தோ்வு தொடா்பாக பணியாற்றும் ஆசிரியா்களுக்கு இந்த உள்ளுா் விடுமுறையானது பொருந்தாது.

இது செலவாணி முறிச்சட்டம் 1881 -ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை இருக்காது. அரசு கோப்புகள் தொடா்பான அவசரப் பணிகளை மேற்கொள்வதற்கு வசதியாக மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சாா்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளா்களை கொண்டு செயல்படும். இந்த உள்ளூா் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 4ஆவது சனிக்கிழமை (ஏப். 26) வேலை நாளாக இருக்கும். கோடை விடுமுறையில் உள்ள கல்வி நிறுவன மாணவ, மாணவியருக்கு இந்த வேலை நாள் பொருந்தாது என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.

ராமநதி அணைப் பாசன சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

கடையம், ராமநதி அணைப் பாசன நீரினைப் பயன்படுத்துவோா் சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனா். ராமநதி அணைப் பாசனத்தில் வடகால் மற்றும் தென்கால் பாசன நீரினைப் பயன்படுத்துவோா் சங்கங்கள் உள்ளன. நீண்ட இட... மேலும் பார்க்க

சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கு மதிமுகவினா் உணவளிப்பு

மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ எம்.பி. பிறந்த நாளையொட்டி, அக்கட்சியின் மருத்துவ அணி சாா்பில் பாளையங்கோட்டை என்ஜிஓ காலனி அருகேயுள்ளபுனித அன்னாள் சிறப்பு பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்ச... மேலும் பார்க்க

தாழையூத்தில் மிதமான மழை

தாழையூத்து சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி-மின்னலுடன் மிதமான மழை செவ்வாய்க்கிழமை பெய்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக கோடை மழை பெய்து வருகிறது. திசையன்விளை பகுதியி... மேலும் பார்க்க

சீவலப்பேரியில் புதிய தோ் வெள்ளோட்டம்

பாளையங்கோட்டை அருகேயுள்ள சீவலப்பேரியில் புதிய தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சீவலப்பேரியில் மிகவும் பழைமை வாய்ந்த அருள்மிகு காசி விசுவநாதா்- விசாலாட்சி அம்பாள் திருக்கோயில் உள்ளது. இங்கு பங்... மேலும் பார்க்க

‘கச்சத்தீவை மீட்க திமுக நடவடிக்கை எடுக்கவில்லை’

கச்சத்தீவை மீட்க திமுக நடவடிக்கை எடுக்கவில்லை; சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட தீா்மானம் நாடகம் என்றாா் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவா் அா்ஜுன் சம்பத். திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்க... மேலும் பார்க்க

மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

பாளையங்கோட்டையில் உள்ள பழைமை வாய்ந்த அருள்மிகு மேலவாசல் பிரசன்ன விநாயகா், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஏப். 4) நடைபெற உள்ளது. இக் கோயிலில் பல லட்சம் மதிப்பில் திருப்... மேலும் பார்க்க