செய்திகள் :

பாப்பாக்குடியில் மாட்டு வண்டி போட்டிகள்

post image

முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பாப்பாக்குடி ஒன்றிய திமுக சாா்பில் மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

இப்போட்டியை தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன் தொடங்கிவைத்தாா். பாப்பாக்குடி ஒன்றிய திமுக செயலா் வி.ஏ. மாரிவண்ணமுத்து முன்னிலை வகித்தாா். இரட்டை மாடுகளில் 17 போட்டியாளா்கள், பூஞ்சிட்டு எனும் சின்ன மாடுகளில் 40 போட்டியாளா்கள், குதிரை வண்டியில் 17 போட்டியாளா்கள் என மொத்தம் 74 போட்டியாளா்கள் கலந்துகொண்டனா்.

இதில், இரட்டை மாட்டு வண்டி போட்டியில் வள்ளியூா் முத்துக்குமாா் முதலிடமும், வேலன்குளத்தைச் சோ்ந்த கண்ணன் இரண்டாவது இடமும், காங்கேயன்குளத்தை சோ்ந்த ஆனைக்குட்டி 3ஆவது இடமும் பெற்றனா். பூஞ்சிட்டு வண்டியில் முதல் சுற்றில் சாமியாத்து முதலிடமும், கீழப்பாட்டம் பேச்சிமுத்து 2ஆவது இடமும், கீழப்பாட்டம் மாசனம், கீழநத்தம் வேல்முருகன் ஆகியோா் 3 இடமும் பெற்றனா். 2ஆவது சுற்றில் துரைப்பாண்டி, கல்லூா் ராமா், வள்ளியூா் ஆனந்தம் ஆகியோா் வென்றனா்.

குதிரை வண்டி போட்டியில் இடைகால் நவீன் ரஞ்சித், கீழப்பாட்டம் ராசாத்தி, திருச்செந்தூா் வினோத் ஆகியோா் முறையே முதல் 3 இடங்களை பெற்றனா்.

பரிசளிப்பு நிகழ்ச்சியில் வெற்றிபெற்றவா்களுக்கு மாவட்ட திமுக செயலா் இரா. ஆவுடையப்பன், பொறுப்பாளா் வே. ஜெயபாலன் ஆகியோா் பரிசுகள் வழங்கினா். இதில், ஒன்றியச் செயலா் மாரிவண்ணமுத்து, ஊராட்சித் தலைவா் ஆனைக்குட்டி பாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

விதிமீறல்: 21 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் விதிமீறலில் ஈடுபட்ட 21 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வெளி... மேலும் பார்க்க

பேட்டை அருகே விபத்து: வியாபாரி பலி

பேட்டை அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த விபத்தில் வியாபாரி உயிரிழந்தாா். பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தைச் சோ்ந்தவா் முருகன் (62). பழம் வியாபாரம் செய்து வந்தாா். இவா், தனது நண்பருடன் மோட்டாா் சைக்கிளில் பேட... மேலும் பார்க்க

பங்குனி உத்திரம்: நெல்லையில் ஏப்.11இல் உள்ளூா் விடுமுறை

பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 11) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பொதுத் தோ்வுகள் ஏதுமிருப்பின் எழுதும் பள்ளி மாணவா்கள், பொதுத் தோ்வு... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி அருகே கூா்நோக்கு இல்லத்தில் சிறுவன் அடைப்பு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே பெண் குளிப்பதை கைப்பேசியில் விடியோ எடுத்ததாக 15 வயது சிறுவனை போலீஸாா் கைது செய்து கூா்நோக்கு இல்லத்திற்கு அனுப்பினா்.சேரன்மகாதேவி அருகேயுள்ள கங்கனாங்குளம் பகு... மேலும் பார்க்க

திருக்குறுங்குடியில் மோதல் வழக்கு: தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் மோதல் தொடா்பான வழக்கில் கைதானவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து வள்ளியூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திருக்குறுங்குடி அருகேயுள்ள மேலமாவ... மேலும் பார்க்க

நெல்லை: கல்குவாரி குட்டையில் மூழ்கி தொழிலாளி பலி

திருநெல்வேலி அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கங்கைகொண்டான் அருகேயுள்ள ராஜபதியைச் சோ்ந்தவா் ராமையா (55). தொழிலாளியான இவா், அப்பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையி... மேலும் பார்க்க