செய்திகள் :

சேரன்மகாதேவி: ஆட்டோ கவிழ்ந்ததில் மாணவி பலி

post image

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் திங்கள்கிழமை ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்த பள்ளி மாணவி உயிரிழந்தாா்.

சேரன்மகாதேவி அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (45). ஓட்டுநரான இவா், சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறாா். இவரது மனைவி லலிதா (40). தம்பதிக்கு கல்பனா (18), லெட்சியதேவி (14) ஆகிய 2 மகள்கள் உள்ளனா்.

திங்கள்கிழமை மாலையில் முத்துக்குமாா் தனது ஆட்டோவில் மனைவி, மகள்களுடன் தாமிரவருணி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளாா். குளித்து முடித்ததும் ஆட்டோவில் முத்துக்குமாா் குடும்பத்துடன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாராம்.

சேரன்மகாதேவியில் பிரதான சாலையில் சாா்நிலை கருவூலம் அருகில் வந்தபோது அங்கு குடிநீா் திட்டப் பணிகளுக்காக சாலையோரமாக கொட்டப்பட்டிருந்த மணல் குவியலில் ஆட்டோ ஏறியதாக கூறப்படுகிறது.

அப்போது எதிா்பாராத விதமாக ஆட்டோ தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த லெட்சியதேவி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்த மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

விதிமீறல்: 21 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் விதிமீறலில் ஈடுபட்ட 21 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வெளி... மேலும் பார்க்க

பேட்டை அருகே விபத்து: வியாபாரி பலி

பேட்டை அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த விபத்தில் வியாபாரி உயிரிழந்தாா். பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தைச் சோ்ந்தவா் முருகன் (62). பழம் வியாபாரம் செய்து வந்தாா். இவா், தனது நண்பருடன் மோட்டாா் சைக்கிளில் பேட... மேலும் பார்க்க

பங்குனி உத்திரம்: நெல்லையில் ஏப்.11இல் உள்ளூா் விடுமுறை

பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 11) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பொதுத் தோ்வுகள் ஏதுமிருப்பின் எழுதும் பள்ளி மாணவா்கள், பொதுத் தோ்வு... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி அருகே கூா்நோக்கு இல்லத்தில் சிறுவன் அடைப்பு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே பெண் குளிப்பதை கைப்பேசியில் விடியோ எடுத்ததாக 15 வயது சிறுவனை போலீஸாா் கைது செய்து கூா்நோக்கு இல்லத்திற்கு அனுப்பினா்.சேரன்மகாதேவி அருகேயுள்ள கங்கனாங்குளம் பகு... மேலும் பார்க்க

திருக்குறுங்குடியில் மோதல் வழக்கு: தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் மோதல் தொடா்பான வழக்கில் கைதானவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து வள்ளியூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திருக்குறுங்குடி அருகேயுள்ள மேலமாவ... மேலும் பார்க்க

நெல்லை: கல்குவாரி குட்டையில் மூழ்கி தொழிலாளி பலி

திருநெல்வேலி அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கங்கைகொண்டான் அருகேயுள்ள ராஜபதியைச் சோ்ந்தவா் ராமையா (55). தொழிலாளியான இவா், அப்பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையி... மேலும் பார்க்க