செய்திகள் :

தவெக: "அதை விஜய்யிடம்தான் கேட்க வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன?

post image

அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து இன்று பேசியிருக்கிறார்.

அப்போது, "நேற்று( மார்ச் 28) நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் பொதுமக்களின் பிரச்னைகளை முன்வைத்தோம்.

குறிப்பாக உசிலம்பட்டியில் காவலர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், சிவகங்கையில் பயிற்சி மருத்துவருக்கு நடந்த சம்பவம் போன்றவற்றை அரசின் கவனத்திற்குக் கொண்டு வர முயற்சி செய்தோம்.

அனுமதி கேட்டோம். ஆனால் அதனை அவர்கள் மறுத்து எங்களைத் திட்டமிட்டு வெளியேற்றி விட்டார்கள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தி.மு.க ஆட்சி எப்போது தமிழகத்தில் அமைக்கப்பட்டதோ அதிலிருந்து சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்கொடுமை எல்லாம் தொடர்கதை ஆகி இருக்கின்றன.

இதையெல்லாம் சட்டமன்றத்தில் சொல்ல முற்பட்டபோதுதான் எங்களை வெளியேற்றி விட்டார்கள்" என்று கூறியிருக்கிறார்.

தொடர்ந்து தி.மு.க - த.வெ.க இடையேதான் போட்டி என்று விஜய் கூறியது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "அவருடைய கருத்தைச் சொல்லி இருக்கிறார். நாட்டில் எல்லாக் கட்சித் தலைவர்களும் அந்தக் கட்சி வளர்வதற்காகத் தொண்டனை உற்சாகப்படுத்துவதற்காக இதுபோன்ற கருத்துக்களைச் சொல்வார்கள்.

TVK Vijay
TVK Vijay

நாங்கள் பிரதான கட்சி என்று மக்கள் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் எங்களைச் சொல்லவில்லை என்றால் அவரிடம்தான் நீங்கள் கேள்வி கேட்க வேண்டும்" என்றிருக்கிறார்.

செங்கோட்டையனின் டெல்லி பயணம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது" என்று பதிலளித்திருக்கிறார்.

`ஓய்வு குறித்து விவாதிக்க ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் சென்றாரா பிரதமர் மோடி?’ - பரவும் தகவலின் பின்னணி

பிரதமராக நரேந்திர மோடி 2014-ம் ஆண்டு பதவியேற்ற பிறகு கடந்த 10 ஆண்டில் ஒரு முறை கூட ஆர்.எஸ்.எஸ்.தலைமை அலுவலகத்துக்கு சென்றது கிடையாது. தாய் இயக்கமான ஆர்.எஸ்.எஸ்.. பா.ஜ.கவின் வெற்றிக்காக தொடர்ந்து பாடுப... மேலும் பார்க்க

"ரூ.85,000 கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்திருக்கு..! " - கேள்வி எழுப்பும் அன்புமணி ராமதாஸ்

சீன கார் நிறுவனத்தின் ரூ.85,000 கோடி முதலீட்டை தமிழக அரசு இழந்துவிட்டதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இது குறித்து அன்புமணி ராமதாஸ், " சீனாவைச் சேர்ந்த மின்சார மகிழ... மேலும் பார்க்க

`நீட் ரகசியம் கேட்டால், உசேன் போல்டை விட வேகமாக ஓடுகிறார் உதயநிதி’ - ஆர்.பி.உதயகுமார் காட்டம்

மதுரை திருமங்கலம் ஒன்றியத்தில் நடந்த அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "தமிழக முழுவதும் 234 தொகுதிகளில் 68,500 வாக்குச்சாவடிகள் உள்ளது. இதில் பூத... மேலும் பார்க்க