செய்திகள் :

ஆந்திரத்தில் தகிக்கும் வெப்பம்: 223 மண்டலங்களுக்கு எச்சரிக்கை!

post image

ஆந்திரப் பிரதேசத்தில் 35 மண்டலங்களில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் ஆறு மண்டலங்களில் கடுமையான வெப்ப அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பேரிடர் மேலாண்மை நிர்வாக இயக்குநர் ஆர். கூர்மநாத் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து விஜயநகரம் (9 மண்டலங்கள்), பார்வதிபுரம் மன்யம் (12), அல்லூரி சீதாராம ராஜு, காக்கிநாடா தலா (மூன்று), கிழக்கு கோதாவரி (2) உள்ளிட்ட 35 மண்டலங்களில் கடும் வெப்ப அலை வீசும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கூடுதலாக, ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் 19 மண்டலங்கள் உள்பட 223 மண்டலங்கள் வெப்ப அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இவற்றைத் தொடர்ந்து விஜயநகரம் மற்றும் அனகப்பள்ளி (தலா 16 மண்டலங்கள்) மற்றும் கிழக்கு கோதாவரி, எலுரு, குண்டூர் (தலா 17), பிரகாசம் மாவட்டத்தில் உள்ள டாடிசெர்லா கிராமத்திலும், ஒய்எஸ்ஆர் கடப்பாவில் உள்ள கமலாபுரத்திலும் வெள்ளிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 42.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை 181 இடங்களில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வருவதைத் தவிர்க்குமாறும், குறிப்பாகக் கர்ப்பிணிகள், முதியவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகப்படியான தண்ணீர் அருந்துமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

முக்கிய வழிபாட்டுத் தலங்களில் நாளைமுதல் மதுவிலக்கு அமல்! - எங்கே?

19 முக்கிய வழிபாட்டுத் தலங்களில் மதுவிலக்கு ஏப். 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக மத்திய பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.மத்திய பிரதேசத்தில் பிரசித்திபெற்ற 19 வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்லாது, அம... மேலும் பார்க்க

ரமலான் தொழுகைக்குப் பிறகு பாலஸ்தீன கொடியை ஏந்தி முழக்கம்! வைரலாகும் விடியோ!

உத்தரப் பிரதேசத்தில் ரமலான் சிறப்புத் தொழுகைக்குப் பிறகு பாலஸ்தீன கொடியை ஏந்தியவாறு இஸ்லாமியர்கள் முழக்கங்களை எழுப்பிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது மேலும் பார்க்க

ஏப்ரல் - ஜூன் வெப்ப அலையின் தாக்கம் எத்தனை நாள்கள்? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வெப்ப அலையின் தாக்கம் ஏப்ரல் - ஜூன் வரை அதிகமாக இருக்குமென்றும், நாடெங்கிலும் பரவலாக இயல்பைவிட வெய்யில் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்(ஐஎம்டி) தெரிவித்துள்ளது.‘வெப்ப-அலை’ எனப்படும் ’வெய்... மேலும் பார்க்க

மோனலிசாவுக்கு பட வாய்ப்பு கொடுத்த இயக்குநர் பாலியல் புகாரில் கைது!

மகா கும்பமேளாவில் பிரபலமடைந்த மோனலிசா என்ற இளம்பெண்ணுக்கு பட வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சனோஜ் மிஸ்ரா பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பார்க்க

இனி அபராதம் செலுத்தவில்லை எனில் ஓட்டுநர் உரிமம் ரத்து! - வருகிறது புதிய விதிகள்!!

சாலைகளில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை 3 மாதங்களுக்குள் செலுத்தவில்லை என்றால் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யும் புதிய விதிகளை மத்திய அரசு கொண்டுவரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாலைகள... மேலும் பார்க்க

மோடி அரசால் வணிகமயமாகும் கல்வி முறை! -சோனியா காந்தி

புது தில்லி: மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை 2020-ஐ கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ‘கல்வித்துறையில் அதிகாரம், வணிகமயமாக்கல், வகுப்புவாதம் (சென்ட்ரலைசேசன், கமர்சியலைசேசன... மேலும் பார்க்க