செய்திகள் :

மின்சாரம் தாக்கி இறக்கும் விவசாயிகளின் குடும்பத்திற்கு நிதியுதவி; புதுச்சேரி அரசின் அறிவிப்பு என்ன?

post image

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2025-2026 பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.

வேளாண்மை, கால்நடை, மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாடு, சமூக நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் தேனீ ஜெயக்குமார், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அப்போது, "விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் எதிர்பாராமல் மின்சாரம் மற்றும் வனவிலங்குகளால் தாக்கப்பட்டும், விஷ ஜந்துக்கள் கடித்தும், மின்னல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் தாக்கியும் உயிரிழக்க நேரிட்டால், அவர்களைச் சார்ந்திருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் உடனடி நிவாரணமாக வழங்கப்படும்.

மேலும், இத்தகைய தாக்குதல்களால் நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.2 லட்சம் கிடைக்கக் காப்பீடு செய்யப்படும். அதற்கான பிரீமியம் தொகையை அரசே செலுத்தும்.

வனத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார்

மேலும், விவசாய நிலம் இல்லாத கால்நடை வளர்க்கும் விவசாயிகள் உயிரிழந்தால் விபத்து காப்பீட்டுத் திட்டம் மூலம் ரூ.5 லட்சமும், நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.2 லட்சம் நிவாரணமும் வழங்கப்படும்.

அதிக மகசூல் தரக்கூடிய நெல் சாகுபடிக்கான ஊக்கத் தொகை ஏக்கருக்கு (இரண்டு பருவம்) ரூ.10,000-ல் இருந்து ரூ.18,000 ஆகவும், சிறுதானியங்களுக்கு ரூ.7,000-ல் இருந்து ரூ.8,000 ஆகவும், பயறு வகைகளுக்கு ரூ.4,000-ல் இருந்து ரூ. 5,000 ஆகவும், மணிலாவுக்கு ரூ.8,000-ல் இருந்து 9,000 ஆகவும், எள்ளுக்கு ரூ.5,000-ல் இருந்து 6,000 ஆகவும் உயர்த்தப்படுகின்றன.

மதகடிப்பட்டு வாரச்சந்தை இடத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்துப் பிற நாட்களில் உழவர் சந்தை செயல்படுத்தப்படும். விவசாயிகளுக்கு ஸ்மார்ட்  விவசாய அட்டை வழங்கப்படும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

வாரணாசி: நவராத்திரியில் சாலையில் நமாஸ் செய்தால் பாஸ்போர்ட் ரத்து; இறைச்சிக் கடைகளுக்குத் தடை

நவராத்திரி திருவிழா வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி ஏப்ரல் 7ம் தேதி வரை நடைபெறுகிறது. அதேசமயம் முஸ்லிம்களின் ரம்ஜான் பண்டிகை வரும் திங்கள் கிழமை கொண்டாடப்படுகிறது.இதனால் உத்தரப்பிரதேசத்தில் மாநில அரசு ப... மேலும் பார்க்க

கிராமசபை கூட்டம்னு சொல்லிட்டு ஏன் திமுக ஆர்ப்பாட்டமாக மாத்துறீங்க? சரமாரி கேள்வி; வெளியேறிய அமைச்சர்

கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாக மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் வேலை நடைபெற்ற வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளர்கள... மேலும் பார்க்க

`தெற்கின் மேல் சமூக, அரசியல், பண்பாட்டுப் படையெடுப்பு...' - உகாதி வாழ்த்துச் செய்தியில் முதல்வர்!

நாளை தெலுங்கு மற்றும் கன்னட மக்களுக்கான புத்தாண்டு விழாவான உகாதி கொண்டாடப்படவிருக்கும் நிலையில், வாழ்த்து செய்தி பகிர்ந்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.முதல்வரின் Ugadi வாழ்த்து செய்தி:-திராவிட மொழ... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து செங்கோட்டையன்; டெல்லிக்குப் படையெடுக்கும் அதிமுக தலைவர்கள்

2021 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வுடன் கூட்டணி வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க பல சிக்கல்களால், பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாது என்று கூறியிருந்தது. இருப்பினும் 2026 சட்டமன்றத் தேர்தல... மேலும் பார்க்க

தவெக: "அதை விஜய்யிடம்தான் கேட்க வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன?

அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து இன்று பேசியிருக்கிறார். அப்போது, "நேற்று( மார்ச் 28) நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் பொதுமக்... மேலும் பார்க்க

'உரிய நேரத்தில் அறிவிப்பு..!' - அதிமுக, பாஜக கூட்டணி குறித்து அமித் ஷா

2021 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வுடன் கூட்டணி வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க, பல சிக்கல்களால் பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாது என்று கூறியிருந்தது. இருப்பினும் 2026 சட்டமன்றத் தேர்தல... மேலும் பார்க்க