நிதியாண்டின் முதல் நாளில் கடும் சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை!
தோனி முன்னதாக களமிறங்க வேண்டும்: வாட்சன் பேட்டி
நேற்றிரவு சேப்பாக்கில் நடந்த போட்டியில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிஎஸ்கே அணி ஆர்சிபியிடம் தோல்வியைச் சந்தித்தது.
முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 196/7 ரன்கள் எடுக்க அடுத்து விளையாடிய சிஎஸ்கே 20 ஓவர்களில்146/8 ரன்கள் எடுத்தது.
இதில் தோனி 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து அசத்தினார். இருப்பினும் தோனி முன்னதாகவே களமிறங்கி இருக்கலாம் என்ற விமர்சனம் அவர்மீது எழுந்து வருகிறது.
இந்நிலையில் ஜியோ ஹாட்ஸ்டார் நிகழ்ச்சியில் வாட்சன் பேசியதாவது:
தோனி முன்னதாக இறங்க வேண்டும்
16 பந்துகளில் 30 ரன்களை அடித்தார் தோனி. இதைப் பார்க்கதான் சிஎஸ்கே ரசிகர்கள் வருகிறார்கள்.
தோனி இன்னமும் வரிசையில் முன்னதாக களமிறங்கினால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
எனது கருத்துபடி, அஸ்வினுக்கு முன்பாக தோனி களமிறங்கியிருக்க வேண்டும். கூடுதலாக 15 பந்துகளை தோனி பிடித்திருக்க வேண்டும்.
கடைசி சில ஆண்டுகளில் தன்னால் அழகாக விளையாட முடியுமென தொடர்ச்சியாக நிரூபித்து வருகிறார்.
ருதுராஜ் மீண்டும் தொடக்க வீரர் ஆகலாம்
தோனி இன்னும் முன்னதாக களமிறங்கினால் அவரது திறமையை அதிகமாக காட்ட முடியுமென உண்மையாலுமே நம்புகிறேன்.
எப்படியாகினாலும் இது தோனிக்கு புதியது கிடையாது. ஓய்வுபெற்றபிறகு கடைசி சீசனிலும் கடைசியாகத்தான் விளையாடினார்.
கேப்டன் ருதுராஜ் 4 பந்துகளில் டக் அவுட்டானார். சிஎஸ்கேவின் டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் சொதப்பியது.
ராகுல் திரிபாதியை தொடக்க வீரராக இறக்கியது அதிர்ச்சியாக இருக்கிறது. ருதுராஜ் சிறப்பான தொடக்க வீரர். ஹேசில்வுட்டுக்கு எதிராக அவரே இடம் கொடுத்து விளையாடியது அவரது இயல்பு அல்ல.
சிஎஸ்கே அணி சமநிலையில் இல்லை
பொதுவாக ருதுராஜ் நின்ற இடத்தில் இருந்து பந்துக்கு எதிர்வினை ஆற்றுவார். ஆனால், அவர் செய்தது அழுத்தத்தைக் காட்டுகிறது.
தீபக் ஹூடா ஆட்டமிழக்கக் கூடாதென்பது போலவே விளையாடுகிறார். சாம் கர்ரணை 5ஆவதாக ஆட வைப்பதும் கேள்விக்குறியே. 7ஆவதாக விளையாட வைக்கலாம்.
தற்போதைக்கு, சிஎஸ்கே அணியில் சமநிலை இல்லை. தோனி விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக இருக்கிறார். அவரை முன்னதாக இறக்கியிருந்தால் வென்றிருக்கலாம் என்றார்.