செய்திகள் :

`கிரேட் எஸ்கேப்’ - யானை வந்தது கூட தெரியாமல் நடைபாதையில் உறங்கிய நபர்கள், உயிர் தப்பிய அதிர்ஷ்டம்!

post image

ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாக இருந்தது வருகிறது முதுமலை புலிகள் காப்பகம். அடர் வனத்தில் இருந்து அவ்வப்போது வெளியே வரும் சில யானைகள், அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் நடமாடி வருகின்றன.

ரேஷன் கடைக்கு வந்த யானை

அரிசி சுவைக்கு பழக்கப்படுத்தப்பட்ட யானைகள் சில, ரேஷன் கடைகள், சத்துணவு கூடங்கள் போன்றவற்றை சேதப்படுத்தி அரிசி பருப்பு போன்றவற்றை உட்கொண்டு வருகின்றன. இதனைத் தவிர்க்கும் வகையில் மசினகுடி போன்ற பகுதிகளில் ரேஷன் கடைகளுக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

முதுமலை புலிகள் காப்பகத்தின் எல்லையில் அமைந்திருக்கும் கூடலூர், தொரப்பள்ளி ரேஷன் கடைக்கு இரவு நேரங்களில் வந்து செல்லும் யானை ஒன்று, ரேஷன் கடையை சேதப்படுத்தி அரிசியை உட்கொண்டு செல்கிறது. இன்று அதிகாலை அரிசியை சுவைக்க வந்த அந்த யானை வழக்கம்போல் ரேஷன் கடையை சேதப்படுத்தி உள்ளே இருந்த அரிசி மூட்டைகளை வெளியே இழுத்து வந்து சுவைத்திருக்கிறது.

ரேஷன் கடைக்கு வந்த யானை

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் , யானை வந்தது கூட தெரியாமல் இருண்டு நபர்கள் ரேஷன் அருகில் உள்ள நடைபாதையில் படுத்துறங்கியுள்ளனர். அவர்களை பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாத அந்த யானை, அரிசியை சுவைப்பதிலேயே குறியாக இருந்துள்ளது. இதனால் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

தும்பிக்கையால் எட்டிவிடும் தூரத்தில் இருந்தும் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு நபர்களையும் யானை ஒன்றும் செய்யாமல் சென்ற சி.சி.டி.வி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

`புதுச்சேரியின் வேடந்தாங்கல்' - ஊசுட்டேரி பறவைகள் சரணாலயத்தில் வண்ணமயமான காட்சிகள்| Photo Album

ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள்ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள்ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள்ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள்ஊசுட்டேர... மேலும் பார்க்க

Elephant Webseries: வாரணம் ஆயிரம்... கோடையும் யானைகளும்! | Photo Album

யானைகள்யானைகள்யானையின் கால் தடம்யானைகள்யானையானைகள்யானைகள்யானைகள்யானைகள்யானைகள்யானைகள்யானைகள்யானைகள்யானைகள்யானைகள்யானையானைகள்யானைகள்யானைகள்யானைகள்யானைகள்யானைகள்Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... மேலும் பார்க்க

கோவை: நான்கு வழிச்சாலைக்காக வெட்டப்படப்போகும் 1000 மரங்கள் | Photo Album

சாலை ஓரங்களில் இருக்கும் 1000க்கு மேற்பட்ட மரங்கள் வெட்டி சாய்க்கப்படுகின்றன. இடம்: அன்னூர், மேட்டுப்பாளையம் இடையே உள்ள தேரம்பாளையம்.அன்னூர், மேட்டுப்பாளையம் இடையே தேரம்பாளையத்தில் உள்ள மரங்கள் வெட்டி... மேலும் பார்க்க

Water Bottle: குடுவை, பிளாஸ்டிக் பாட்டிலான கதை! - சுவாரஸ்யமான பின்னணி | Explainer

``தாயையும் தண்ணியையும் பழிக்கக் கூடாது..." என ஒரு பழமொழி உண்டு. தாயும், தண்ணீரும் உயிரை உருவாக்கி, வளர்த்து, காக்கும் ஆற்றல் பெற்றவர்கள். நீரின்றி அமையாது உலகு என்றான் வள்ளுவன். 'கத்திரி வெயில்' தொடங்... மேலும் பார்க்க

Green Rose : கோடையை வரவேற்க ஊட்டியில் பச்சை ரோஜா பூத்தாச்சு! - எங்கே போகணும் தெரியுமா?

இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷார், வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மலைப்பகுதிகளில் கோடை வாசஸ்தலங்ளை நிறுவுவதில் தீவிரம் காட்டினர். வாட்டும் தென்னிந்திய வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஊட்... மேலும் பார்க்க

கரூர்: காய்கறித் தோட்டம்.. மீன்குட்டை.. மரங்களுக்குப் பெயர்ப் பலகை.. அரசுப் பள்ளியின் புதிய முயற்சி

தமிழக அளவில் செயல்பட்டு வரும் பசுமைப் பள்ளிகளில் மாவட்ட அளவில் சிறப்பாகச் செயல்படும் பள்ளியைத் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்குச் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலி... மேலும் பார்க்க