செய்திகள் :

வாட்ஸ்ஆப் லாக்கை ஹேக் செய்த மனைவிக்கு அதிர்ச்சி: பல பெண்களுடன் சாட், வீடியோ; கணவனை மாட்டிவிட்ட மனைவி

post image

வாட்ஸ்ஆப்பில் பல தனிப்பட்ட ரகசியங்கள் இருக்கும் என்பதால் பலரும் அதற்கு லாக் போட்டு வைப்பது வழக்கம். வீட்டில் மனைவிமார்கள் தங்களது கணவனின் வாட்ஸ்ஆப்பை பார்க்க விரும்பினாலும் அதனை கணவன்மார்கள் பார்க்க அனுமதிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டுகளும் உண்டு.

மகாராஷ்டிராவில் ஒரு பெண் தனது கணவனின் வாட்ஸ்ஆப்பை ஹேக் செய்து பார்த்தபோது அதிர்ச்சியாகிவிட்டார். நாக்பூரை சேர்ந்த சுனந்தா(24) என்ற பெண் தனது கணவரிடம் போனை கொடுங்கள் பார்க்கவேண்டும் என்று கேட்டார். ஆனால் அவரது கணவர் போனை கொடுக்கவில்லை. அப்படியே கொடுத்தாலும் அவரது வாட்ஸ் ஆப்பை பார்க்க முடியாத படி லாக் செய்து இருந்தார்.

முன்னதாக, சுனந்தா தனது கணவர், தன்னிடம் இயற்கைக்கு மாறாகவும், ஆபாச படங்களில் வருவது போன்றும் உறவு வைத்துக்கொள்ள சொல்லி துன்புறுத்துவதாக கூறி ஏற்கனவே போலீஸில் புகார் செய்திருந்தார்.

எனவே கணவருக்கு வேறு பெண்களுடம் தொடர்பு இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று நம்பினார். இதனால் சுனந்தாவிற்கு எப்படியும் தனது கணவரின் வாட்ஸ் ஆப்பை பார்க்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது. இதையடுத்து தெரிந்த நண்பர்களிடம் பேசி வாட்ஸ்ஆப் லாக்கை எப்படி ஹேக் செய்யவேண்டும் என்று கற்றுக்கொண்டார். அதனை பயன்படுத்தி கணவனின் வாட்ஸ் ஆப்பை திறந்து பார்த்தபோது அதிர்ச்சியாகிவிட்டார். அதில் சுனந்தாவின் கணவர் பல பெண்களுடன் ஆபாசமாக பேசியிருப்பதும், பல பெண்களை கட்டாயப்படுத்தி உறவுக்கு அழைத்திருப்பதும், உறவு வைத்திருப்பதும் தெரிய வந்தது. அது தொடர்பாக வீடியோக்கள், சாட்டிங் விபரங்களும் இருந்தன.

இதில் 19 வயது பெண் ஒருவரும் அடங்கும். தனது பெயரை மாற்றி பெண்களை கோயிலுக்கு வரவழைத்து அவர்களுக்கு சுனந்தாவின் கணவர் பாலியல் தொல்லை கொடுத்து இருந்தார். பெண்களிடம் தனக்கு திருமணமாகவில்லை என்று சொல்லி அவர்களை தனது ஆசைக்கு இணங்க வைத்து அதனை வீடியோ எடுத்து வாட்ஸ் ஆப்பில் வைத்திருந்தார். அதில் உள்ள சில பெண்களை சுனந்தா தொடர்பு கொண்டார். அவர்களிடம் பேசியதில் 19 வயது பெண் சுனந்தாவின் கணவருக்கு எதிராக போலீஸில் புகார் செய்ய சம்மதித்தார். 19 வயது பெண் நாக்பூரில் தங்கி படித்து வந்தார்.

அவரிடம் தனது பெயரை சாஹில் சர்மா என்று கூறி அறிமுகம் செய்து கொண்டார். அதோடு தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்று கூறி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உறவு வைத்திருக்கிறார். 19 வயது பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் சுனந்தாவின் கணவர் கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீஸார் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண் மிகவும் அதிர்ச்சியில் இருந்தார். அப்பெண்ணிற்கு கவுன்சிலிங் கொடுத்து பேசவைத்தோம். அப்பெண்ணின் மோதிரத்தை விற்பனை செய்து அதில் கிடைத்த பணத்தையும் குற்றம் சாட்டப்பட்டவர் எடுத்துச்சென்றுள்ளார் என்றார்.

தண்ணீர் எடுப்பதற்காக குதிரைகளை 200 ரூபாய்க்கு வாடகைக்கு எடுக்கும் கிராமவாசிகள்! - எங்கு தெரியுமா?

கிராமத்திற்குத் தண்ணீர் விநியோகிப்பதற்காக குதிரைகள் வாடகைக்கு எடுக்கின்றனர். எங்கு இவ்வாறு நடக்கிறது என்பதை பார்க்கலாம்.உத்தரகாண்ட் மாநிலம், பித்தோராகரின் பங்லி கிராமம் தங்களின் அன்றாட தேவைகளுக்கான தண... மேலும் பார்க்க

Ghibli Art: 40 ஆண்டுகளாக இருக்கும் `ஜிப்லி ஆர்ட்' - திடீரென இணையவாசிகளிடம் டிரெண்டானது எப்படி?

சமூக வலைதளங்களில் தற்போது ஜிப்லி ஆர்ட் என்ற பெயரில் டிரண்டாகி வரும் அனிமேஷன் புகைப்படங்களை பார்த்திருப்போம். 1985லேயே இது போன்ற அனிமேஷன்கள் உருவாக்கப்பட்ட நிலையில், திடீரென இணையவாசிகள் மத்தியில் பிரபல... மேலும் பார்க்க

Madhapar: ரூ.7000 கோடி வங்கிக்கணக்கில் வைத்திருக்கும் குஜராத் கிராமம்; சுவாரஸ்ய பின்னணி!

ரூ.700 கோடி வங்கிக் கணக்கில் வைப்புத் தொகையாக வைத்திருக்கும் பணக்கார கிராமத்தைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.குஜராத்தின் போர்பந்தர் நகரத்திலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிராமம்தான் மாதபர்.... மேலும் பார்க்க

சீனா: அவசர நேரத்தில் அம்மாவுக்குப் பிரசவம் பார்த்த 13 வயது சிறுவன்; நெகிழ வைத்த நிகழ்வு!

தாய்க்கு எதிர்பாராத விதமாகப் பிரசவ வலி ஏற்பட்ட போது, துணிச்சலுடன் செயல்பட்டு பிரசவம் பார்த்து தனது தம்பி பூமிக்கு வர உதவியிருக்கிறார் 13 வயது சிறுவன். மருத்துவப் பணியாளர் மொபைலில் தொடர்பில் இருக்கும்ப... மேலும் பார்க்க

`இது கிராமமா கேன்சர் மண்டலமா?’ - அதிர்ச்சியில் ஆந்திர அரசு - விளக்கம் தரும் மருத்துவர்

இது கிராமமா அல்லது இந்தியாவின் புற்றுநோய் மண்டலமா என்று தகவல் தெரிந்த பலரையும் பயமுறுத்திக்கொண்டிருக்கிறது ஆந்திரப்பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலபத்ரம் என்கிற சிறு கிராமம். அப்படி ... மேலும் பார்க்க

தாய்ப்பால் சுவையில் ஐஸ் கிரீமை அறிமுகப்படுத்தும் அமெரிக்க நிறுவனம் - நெட்டிசன்களின் ரியாக்‌ஷன் என்ன?

தாய்ப்பாலுக்கு நிகரான உணவு ஏதும் இல்லை என்று கூறிவரும் நிலையில், அமெரிக்காவின் பிரபல பிராண்டான ஃப்ரீடா (Frida), தாய்ப்பால் சுவையில் ஐஸ்கிரீமை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. கர்ப்ப காலத்தைப் ப... மேலும் பார்க்க