செய்திகள் :

தண்ணீர் எடுப்பதற்காக குதிரைகளை 200 ரூபாய்க்கு வாடகைக்கு எடுக்கும் கிராமவாசிகள்! - எங்கு தெரியுமா?

post image

கிராமத்திற்குத் தண்ணீர் விநியோகிப்பதற்காக குதிரைகள் வாடகைக்கு எடுக்கின்றனர். எங்கு இவ்வாறு நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

உத்தரகாண்ட் மாநிலம், பித்தோராகரின் பங்லி கிராமம் தங்களின் அன்றாட தேவைகளுக்கான தண்ணீரை எடுக்க குதிரைகளை நம்பியுள்ளது.

கங்கோலிகாட்டில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமத்தில் 1,200 மக்கள் வசிக்கின்றனர். இங்கு இரண்டு குடிநீர் திட்டங்களும் உள்ளன.

1980 ஆம் ஆண்டு முதல் கிராம பஞ்சாயத்து கட்டமைக்கப்பட்ட பிறகு, 100-க்கும் மேற்பட்ட நீர்நிலை கம்பங்கள் மற்றும் 2001 ஆம் ஆண்டு உத்தரகாண்ட்டில் நிறுவப்பட்ட ஜல் நிகாம் திட்டம் ஆகியவை கிராமத்திற்கு நீர் ஆதாரங்களாக உள்ளன.

ஜல் நிகாம் என்பது உத்தரப்பிரதேச மாநிலத்தில் குடிநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மையை கையாளும ஓர் அரசு நிறுவனமாகும்.

குடியிருப்பாளர்கள் ஒரு நாளைக்கு ஒருமுறை 100 லிட்டர் தண்ணீரை மட்டுமே பெறுகிறார்கள். இது போதுமானதாக இல்லை. இதனால் கிணறுகள் போன்ற பிற ஆதாரங்களில் இருந்து தண்ணீர் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

அருகிலுள்ள நீர் நிலையங்கள் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளன. இதற்காக குதிரைகளை வாடகைக்கு எடுக்கின்றனர் கிராமவாசிகள். அதிலும் ஒவ்வொரு குதிரையும் 80 லிட்டர் நீரை மட்டுமே சுமந்து செல்கிறது.

இந்த குதிரையை 200 ரூபாய்க்கு வாடகைக்கு எடுக்கின்றனர். இவ்வாறு வாடகைக்கு எடுக்க முடியாதவர்கள் நான்கு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று, இரண்டு மணி நேரம் தண்ணீர் எடுப்பதற்காகவே செலவிடுகின்றனர்.

ஒவ்வொரு கோடை காலத்திலும் தண்ணீர் டாங்குகள் பயன்படுத்தப்படுகின்றன. விரைவில் அந்த சேவை தொடங்கப்படும் என்றும் கிராமவாசிகள் கூறுகின்றனர்.

Ghibli Art: 40 ஆண்டுகளாக இருக்கும் `ஜிப்லி ஆர்ட்' - திடீரென இணையவாசிகளிடம் டிரெண்டானது எப்படி?

சமூக வலைதளங்களில் தற்போது ஜிப்லி ஆர்ட் என்ற பெயரில் டிரண்டாகி வரும் அனிமேஷன் புகைப்படங்களை பார்த்திருப்போம். 1985லேயே இது போன்ற அனிமேஷன்கள் உருவாக்கப்பட்ட நிலையில், திடீரென இணையவாசிகள் மத்தியில் பிரபல... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப் லாக்கை ஹேக் செய்த மனைவிக்கு அதிர்ச்சி: பல பெண்களுடன் சாட், வீடியோ; கணவனை மாட்டிவிட்ட மனைவி

வாட்ஸ்ஆப்பில் பல தனிப்பட்ட ரகசியங்கள் இருக்கும் என்பதால் பலரும் அதற்கு லாக் போட்டு வைப்பது வழக்கம். வீட்டில் மனைவிமார்கள் தங்களது கணவனின் வாட்ஸ்ஆப்பை பார்க்க விரும்பினாலும் அதனை கணவன்மார்கள் பார்க்க அ... மேலும் பார்க்க

Madhapar: ரூ.7000 கோடி வங்கிக்கணக்கில் வைத்திருக்கும் குஜராத் கிராமம்; சுவாரஸ்ய பின்னணி!

ரூ.700 கோடி வங்கிக் கணக்கில் வைப்புத் தொகையாக வைத்திருக்கும் பணக்கார கிராமத்தைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.குஜராத்தின் போர்பந்தர் நகரத்திலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிராமம்தான் மாதபர்.... மேலும் பார்க்க

சீனா: அவசர நேரத்தில் அம்மாவுக்குப் பிரசவம் பார்த்த 13 வயது சிறுவன்; நெகிழ வைத்த நிகழ்வு!

தாய்க்கு எதிர்பாராத விதமாகப் பிரசவ வலி ஏற்பட்ட போது, துணிச்சலுடன் செயல்பட்டு பிரசவம் பார்த்து தனது தம்பி பூமிக்கு வர உதவியிருக்கிறார் 13 வயது சிறுவன். மருத்துவப் பணியாளர் மொபைலில் தொடர்பில் இருக்கும்ப... மேலும் பார்க்க

`இது கிராமமா கேன்சர் மண்டலமா?’ - அதிர்ச்சியில் ஆந்திர அரசு - விளக்கம் தரும் மருத்துவர்

இது கிராமமா அல்லது இந்தியாவின் புற்றுநோய் மண்டலமா என்று தகவல் தெரிந்த பலரையும் பயமுறுத்திக்கொண்டிருக்கிறது ஆந்திரப்பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலபத்ரம் என்கிற சிறு கிராமம். அப்படி ... மேலும் பார்க்க

தாய்ப்பால் சுவையில் ஐஸ் கிரீமை அறிமுகப்படுத்தும் அமெரிக்க நிறுவனம் - நெட்டிசன்களின் ரியாக்‌ஷன் என்ன?

தாய்ப்பாலுக்கு நிகரான உணவு ஏதும் இல்லை என்று கூறிவரும் நிலையில், அமெரிக்காவின் பிரபல பிராண்டான ஃப்ரீடா (Frida), தாய்ப்பால் சுவையில் ஐஸ்கிரீமை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. கர்ப்ப காலத்தைப் ப... மேலும் பார்க்க