செய்திகள் :

வாழ்த்துங்களேன்!

post image

பிறந்த நாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்... இவை போன்று இன்னும் பல்வேறு இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்!

அன்பார்ந்த வாசகர்களே!

உங்கள் சக்தி விகடன் 21-ம் ஆண்டில் வெற்றிநடை போடும் இந்த இனிய தருணத்தில், உங்களுக்குப் பிடித்தமான வாழ்த்துங்களேன் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் பிரார்த்தனைகள், பிரசித்திபெற்ற பரிகாரத் தலங்களில் சமர்பிக்கப்படவுள்ளன.

பிறந்தநாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் முதலான இனிய தருணங்களை முன்னிட்டு, உங்களுக்காக அல்லது உங்களின் உற்றார்-உறவினர் மற்றும் நண்பர்களுக்கான பிரார்த்தனைகளை, உங்களின் மொபைல் போன் மூலம் பதிவு செய்யுங்கள். அதற்கு, இந்தப் பக்கத்தில் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்தால் போதும்.

அவ்வாறு பதிவு செய்யப்படும் விவரப்படி, இனிய தருணங்களைக் கொண்டாடும் அன்பர்களுக்கான பிரார்த்தனைகள், அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் பொங்கிப் பெருகிடும் வகையில், தமிழகத்தின் வழிபாட்டுச் சிறப்பு மிக்க ஆலயங்களில் சமர்ப்பிக்கப்படும்.

15.4.25 முதல் 28.4.25 வரை பிரார்த்தனைக்குப் பதிவு செய்ய வேண்டிய கடைசித் தேதி: 8.4.25

ஸ்ரீயோகநாயகி சமேத ஸ்ரீஅட்சயநாத சுவாமி

திருப்பங்கள் தரும் திருமாந்துறை ஸ்ரீயோகநாயகி சமேத ஸ்ரீஅட்சயநாத சுவாமி திருக்கோயிலில்...

15.4.25 முதல் 28.4.25 வரையிலும் சுப நிகழ்வுகள், இனிய தருணங்களைக் கொண்டாடும் அன்பர்களுக்கான சிறப்புப் பிரார்த்தனைகள், தஞ்சை மாவட்டம் திருமாந்துறை அட்சயநாத சுவாமி ஆலயத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றன. புராணக் காலத்தில் மாமரங்கள் நிறைந்திருந்த காரணத்தால் `மாந்துறை' எனப் பெயர் பெற்றது. மூலவர் - ஆம்ரவனேஸ்வர் என்கிற அட்சயநாதர். அம்பிகை யோகாம்பிகை.

அம்மையும் அத்தனும் கிழக்கு நோக்கி அருள, இந்த இருவரின் சந்நிதிகளுக்கும் இடையில் பிள்ளையாரும் சந்நிதிகொண்டிருக்கும் அபூர்வ தலம் இது. ஆகவே, 'காணாதிபத்ய க்ஷேத்ரம்' எனப் போற்றப் படுகிறது. விநாயகர், சாபவிமோசனத்திற்காக சிவபூஜை செய்த தலம். சகல பரிகார - நிவாரணத் தலமாக விளங்குகிறது. அற்புதமான இந்தக் கோயிலிலேயே, வாசகர்கள் சகல சௌபாக்கியங்களைப் பெற்று வாழவும், அவர்களின் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறவும் வேண்டி வாழ்த்துப் பிரார்த்தனைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன!

பாம்புக் கடியில் இருந்து மக்களை பாதுகாக்கும் கோயில் - 11 கிராம மக்களின் நம்பிக்கை என்ன?

உத்தரபிரதேசத்தின் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள ஜதௌடா பாண்டா என்ற கிராமத்தில் அமைந்துள்ள இந்த புனிதத் தலம், சுற்றியுள்ள 12 கிராம மக்களை பாம்பு கடியில் இருந்து பாதுகாப்பதாக கூறுகின்றனர். பல நூற்றாண்டுகள... மேலும் பார்க்க

உலகின் முதல் சிவாலயம்; நவகிரக பயம் நீக்கும் அபூர்வ தரிசனம் - உத்திரகோசமங்கை கும்பாபிஷேகம் ஸ்பெஷல்

பாண்டிய நாட்டின் பதினான்கு சிவத் தலங்களுக்கு முன்பாக உருவான தலம் உத்திரகோசமங்கை. இலந்தை மரத்தினடியில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளிய இந்தத் தலத்தில்தான், சிவபெருமான் அம்பிகைக்கு வேதாகம ரகசியப்... மேலும் பார்க்க

சனி பரிகாரக் கோயில்கள்: `துன்பங்கள் நீங்கி நிம்மதி பிறக்கும்' - திருநள்ளாறுக்கு இணையான 5 இடங்கள்

திருவாதவூர் திருமறை நாதர்திருவாதவூர் சனிப்பெயர்ச்சி 2025 சிம்மம் : புதியவர்களிடம் கவனம்; ஆரோக்கியத்தில் அக்கறை - என்ன பலன்கள் உங்களுக்கு?மதுரையிலிருந்து வடக்கே 25 கி.மீ தொலைவிலும், மேலூரிலிருந்து மேற்... மேலும் பார்க்க

`கனவில் வந்தாள்... கொலுசு கேட்டாள்' - வாழ்வு மாற, வசந்த நவராத்திரியில் நீங்கள் வணங்க வேண்டிய தலம்

வாழ்வை மாற்றும் வசந்த நவராத்திரி அன்னை ஆதிசக்தியை வழிபடும் நாள்களில் முக்கியமானவை நவராத்திரி பண்டிகை. ஓர் ஆண்டில் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படும். அவை, சியாமளா நவராத்திரி (தை மாதம்,) வசந்த நவராத்த... மேலும் பார்க்க

சர்வ வஸ்ய ஹோமம்: `பாபாவின் அற்புதம் காண வாருங்கள்' - சங்கல்பம் செய்துகொள்ள சகலமும் உங்கள் வசமாகும்

2025 ஏப்ரல் 10-ம் நாள் வியாழக்கிழமை கன்னியாகுமரி பொற்றையடி ஷீரடி சாய்பாபா ஆனந்த ஆலயத்தில் சர்வ வஸ்ய ஹோமமும் சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது. இந்த யாகத்தால் உங்கள் விருப்பமான காரியங்களை சிறப்பாக நிறைவேற... மேலும் பார்க்க

சத்யநாராயண பூஜை: சங்கல்பம் செய்து கொள்ள சகல வேண்டுதலும் நிறைவேறும்; சாய்பாபாவின் அற்புதம் காணுங்கள்

2025 ஏப்ரல் 10-ம் நாள் வியாழக்கிழமை பங்குனி வளர்பிறை திரயோதசி நன்னாளில் இங்கு பிரமாண்ட விழாவும் சத்யநாராயண பூஜையும் நடைபெற உள்ளது. இந்த பூஜையால் அமைதியான வாழ்வும், விரும்பிய ஐஸ்வரியங்களும் கிடைக்கும் ... மேலும் பார்க்க