செய்திகள் :

பட வாய்ப்புக்காக ஹார்மோன் ஊசி போட்டுக்கொண்ட சிறகடிக்க ஆசை நடிகை!

post image

சிறகடிக்க ஆசை தொடரில் நடித்துவரும் பாக்யஸ்ரீ என்ற பாக்கியலட்சுமி, பட வாய்ப்புகளுக்காக ஹார்மோன் ஊசி போட்டுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

சினிமாவுக்கு வந்த காலகட்டத்தில் மிகவும் ஒல்லியான தோற்றத்தில் இருந்ததாகவும், அதனால் பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த நிலையில், உடல் பருமனுக்காக ஹார்மோன் ஊசி போட்டுக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை தொடரில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருபவர் நடிகை பாக்கியலட்சுமி. இவர் இதற்கு முன்பு கல்யாண பரிசு, கைராசி குடும்பம், அபூர்வ ராகங்கள், அழகு, நீலகுயில் உள்ளிட்டத் தொடர்களில் நடித்துள்ளார்.

1982ஆம் ஆண்டு தேவியின் திருவிளையாடல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து நியாயம் கேட்கிறேன், நலமறிய ஆவல், சாந்தி முகூர்த்தம், செயின் ஜெயபால், வளையல் சத்தம், ஒரே ரத்தம், தாயா தாரமா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இதேபோன்று ஆஸ்ரம் என்ற படம் மூலமாக மலையாளத்திலும் அறிமுகமான பாக்ய ஸ்ரீ, தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார்.

60க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்த அவர், வாசுதேவன் மன்னடியாரை திருமணம் செய்துகொண்டு நடிப்பில் இருந்து தற்காலிகமாக ஓய்வெடுத்தார்.

பின்னர் சின்ன திரையில் நடிக்கத் தொடங்கினார். தற்போது சிறகடிக்க ஆசை தொடரில் பார்வதி என்ற பாத்திரத்தில் நடித்து வருகிறார். சன் தொலைக்காட்சியின் லட்சுமி தொடரிலும் நடித்திருந்தார்.

பாக்ய ஸ்ரீ

இதனைடையே தனது சினிமா அனுபவம் குறித்து பாக்ய ஸ்ரீ பேசிய விடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது.

அதில், தனது கணவர் இறந்த 3 மாதத்திற்கு பிறகு சிறகடிக்க ஆசை தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாக உருக்கம் தெரிவித்துள்ளார். இந்தத் தொடர் தன்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பதாகவும், படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் ஒரே குடும்பம் போல தன்னை கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு மட்டுமின்றி நடிக்க வந்த ஆரம்பக்கட்டத்தில் சினிமா வாய்ப்புகளுக்காக ஹார்மோன் ஊசி பயன்படுத்தியதையும் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார்.

சிறகடிக்க ஆசை தொடரில் பாக்ய ஸ்ரீ

அந்தக் காலகட்டத்தில் நடிகைகள் ஒல்லியான தேகத்தில் இருக்கக் கூடாது என்றும், தான் ஒல்லியாக இருந்ததால் பல பட வாய்ப்புகள் தவறிவிட்டதாகவும் தெரிவித்தார்.

இதனால் பின்விளைவுகள் ஏற்படும் என மருத்துவர்கள் கூறியதையும் பொருட்படுத்தாமல், ஊசி போட்டுக்கொண்டதாகவும், ஆனால் தற்போது உடல் எடை கூடுதலாக இருப்பதாகவும், அதனை குறைக்க முடியாமல் அவதியுறுவதாகவும் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | சிறகடிக்க ஆசை தொடருக்கு முதலில் வைத்த பெயர் தெரியுமா?

பாசில் ஜோசப்பின் மரணமாஸ் பாடல் புரோமோ!

நடிகர் பாசில் ஜோசப்பின் மரணமாஸ் பாடல் புரோமோ வெளியாகியுள்ளது.மலையாள இயக்குநர் பாசில் ஜோசப் கோதா, மின்னள் முரளி படங்களின் மூலம் பிரபல இயக்குநராக அறியப்படுகிறார். இயக்குநராக மட்டுமில்லாமல் தற்போது முன்ன... மேலும் பார்க்க

மியாமி ஓபனில் மெஸ்ஸி: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஜோகோவிச்!

மியாமி ஓபனில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அரையிறுதியில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இந்தப் போட்டியில் 6-2, 6-3 என ஜோகோவிச் கிரிகோர் டிமிட்ரியை வீழ்த்தினார். இந்தப் ... மேலும் பார்க்க

எம்புரான் ரூ.100 கோடி வசூல்! மோகன்லால் நெகிழ்ச்சி!

மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. எம்புரான் திரைப்படம் மார்ச்.27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இது 2019இல் பிருத்விராஜ் இயக... மேலும் பார்க்க

திறமை வெளிப்படும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.29-03-2025சனிக்கிழமைமேஷம்:இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமை வெளிப்படும். மேல்... மேலும் பார்க்க

இறுதிச்சுற்றில் சபலென்கா - பெகுலா பலப்பரீட்சை: எலா, பாலினி வெளியேறினா்

அமெரிக்காவில் நடைபெறும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் பெலாரஸின் அரினா சலபென்கா - அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா ஆகியோா் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்தவுள்ளனா்.முன்னதாக வ... மேலும் பார்க்க

ஆசிய மல்யுத்தம்: ரீதிகாவுக்கு வெள்ளி

ஜோா்டானில் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ரீதிகா ஹூடா வெள்ளிப் பதக்கம் வென்றாா்.மகளிருக்கான 76 கிலோ பிரிவில் களமாடிய ரீதிகா, காலிறுதியில் ஜப்பானின் நோடோகா யமாமோடோவையும், அரையிறு... மேலும் பார்க்க