செய்திகள் :

தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை!

post image

பொதுத்துறை மின்உற்பத்தி நிறுவனமான தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் தகுதியான விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

உதவித்தொகை திட்டத்தின் பெயர்: NHPC Sports Scholarship

காலியிடங்கள்: 32

விளையாட்டுப் பிரிவுகள் வாரியாக வழங்கப்படும் ஸ்காலர்ஷப் எண்ணிக்கை வருமாறு.

1. FOOT BALL-2

2. KABADI-2

3. HOCKEY-3

4. BOXING-3

5. ARCHERY - 2

6. ATHLETICS-5

7. SHOOTING-1

8. CRICKET - 2

9. SWIMMING-2

10. WRESTLING - 2

11. VOLLEY BALL - 2

12. BRIDGE - 1

13.TABLE TENNIS - 1

14. CHESS - 1

15. BADMINTON - 2

16. PARA SPORTS - 1

வயதுவரம்பு: 26.3.2025 தேதியின்படி 14 முதல் 19 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விளையாட்டுத் தகுதி: காலியிடம் ஏற்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவுகள் ஏதாவதொன்றில் தேசிய,மாநில,பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் இளநிலை அல்லது முதுநிலை பிரிவில் விளையாடி குறைந்தது மூன்றாவது இடம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய விளையாட்டுத் தகுதிகள் பற்றிய கூடுதல் விபரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படையில் வேலை: விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு!

உதவித்தொகை: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.9,000 முதல் 11,000 வரை 3 வருடம் உதவித்தொகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் விளையாட்டுத் தகுதி மற்றும் விளையாட்டு சாதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

வீரர்களின் கடைசி மூன்று ஆண்டுகளின் விளையாட்டு சாதனைகள் மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

விண்ணப்பதாரர்கள் தற்போதும் விளையாட்டு வீரர்களாக இருக்க வேண்டும். தகுதியானவர்களை தேர்வு செய்ய விளையாட்டு திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப் படும்.

இதுபற்றிய விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். விளையாட்டுத் துறையில் பதக்கம் வென்ற கூடுதல் உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nhpcindia.com இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப் பப் படிவம் மற்றும் கூடுதல் விபரங்களை பார்த்து படித்து விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 26.3.2025

பொதுத்துறை நிறுவனத்தில் பொறியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள துணை பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண். ... மேலும் பார்க்க

உதவித்தொகையுடன் ரயில் சக்கரம் தொழிற்சாலையில் பயிற்சி

கர்நாடகம் மாநிலம், பெங்களூருவில் செயல்பட்டு வரும் ரயில் சக்கரம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஐடிஐ முடித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய தொழிற்பழகுநர் பயிற்சிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங... மேலும் பார்க்க

கப்பல் கட்டும் தொழிற்சாலை வேலை: 8, 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

கொச்சி கப்பல் கட்டும் தொழிற்சாலை காலியாக உள்ள 70 Rigger மற்றும் Scaffolder பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 28 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகி... மேலும் பார்க்க

பாதுகாப்புப் படையில் வேலை: விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு!

இந்திய ராணுவத்தின் துணை ராணுவமான இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 133 காவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இருபாலர்களிடம் இருந்து வர... மேலும் பார்க்க

விண்ணப்பித்துவிட்டீர்களா..? கடற்படையில் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி

இந்திய கடற்படையில் காலியாக உள்ள 360 BOAT CREW STAFF பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காத தகுதியானவர்கள் விரைந்து விண்ணப்பிக்கவும். விளம்பர எண். 01/2025-BCS... மேலும் பார்க்க

டிஆா்பி ஆண்டு அட்டவணை வெளியீடு: முதுநிலை ஆசிரியா் தோ்வு ஆகஸ்டில் அறிவிப்பு

சென்னை: ஆசிரியா் தோ்வு வாரியத்தின் சாா்பில் 2025-ஆண்டு நடத்தப்படவுள்ள தோ்வுகளின் அட்டவணை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி, 1,915 முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களை தோ்வு செய்வதற்கான அறிவிப்பு ஆகஸ்ட... மேலும் பார்க்க