செய்திகள் :

ஸ்லோவாக்கியாவில் பரவும் தொற்று! மீட்புப் பணியில் செக் குடியரசு வீரர்கள்!

post image

ஸ்லோவாக்கியாவில் வேகமாக பரவி வரும் கால்நடை தொற்றைக் கட்டுப்படுத்த செக் குடியரசு நாட்டின் வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஸ்லோவாக்கியா நாட்டிலுள்ள மூன்று பண்ணைகளின் கால்நடைகளுக்கு கடந்த மார்ச் 21 அன்று கோமாரி நோய் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், அந்நாட்டின் மெட்வெடோவ், நராத், பகா ஆகிய நகரங்களைத் தொடர்ந்து துனாஜ்ஸ்கா ஸ்த்ரேதா மாவட்டத்திலுள்ள கால்நடைகளுக்கும் தொற்று பரவியது உறுதி செய்யப்பட்டதினால் ஸ்லோவாக்கியா அரசு நேற்று (மார்ச் 25) அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியது.

இந்த தொற்றைக் கட்டுப்படுத்த அண்டை நாடான செக் குடியரசு கடந்த வாரம் எல்லைக் கட்டுப்பாடுகள் விதித்து இரு நாடுகளைக் கடக்கும் நான்கு முக்கிய எல்லைப் பாதைகளின் வழியாக பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து கால்நடைகள் இறக்குமதி செய்ய தடை விதித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, வேகமாக பரவி வரும் கோமாரி நோயைக் கட்டுப்படுத்தும் பணிகளில் அந்நாட்டு அதிகாரிகளுக்கு உதவுவதற்காக செக் குடியரசின் 16 தீயணைப்புப் படை வீரர்கள் ஸ்லோவாக்கியா நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செக் குடியரசின் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை அதிகாரி கூறுகையில், அவசரக் கால நடவடிக்கையாக செக் தீயணைப்பு வீரர்கள் ஸ்லோவாக்கிய அதிகாரிகளுக்கு கோமாரி நோய் தொற்றைக் கட்டுப்படுத்த உதவுவார்கள் எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, கோமாரி நோயானது ஆடு, மாடு, பன்றி மற்றும் செம்மறி ஆடுகள் போன்ற கால்நடைகளை அவற்றின் சுவாசக்காற்றின் வழியாகத் தாக்கும் எனவும் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு காய்ச்சல், பசியின்மை, அதிகப்படியான உமிழ்நீர் சுரப்பு, வாய் மற்றும் கால்கள் ஆகிய இடங்களில் கொப்புளங்கள் ஆகிய அறிகுறிகள் உண்டாகும் எனவும் கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள செக் குடியரசு நாட்டில் கோமாரி நோயானது கடந்த 1975 ஆம் ஆண்டில் தான் இறுதியாக கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தென் கொரியா காட்டுத் தீ: பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு! 27,000 பேர் வெளியேற்றம்!

மியான்மர் நிலநடுக்கம்: பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

மியான்மர், தாய்லாந்தில் வெள்ளிக்கிழமை(மார்ச் 28) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்குள்ள தமிழர்களுக்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உதவி தேவைப்படுவோர் - 1800 309 3793+91 80690 099... மேலும் பார்க்க

சமூக நீதியை நிலைநாட்டும் அரசு! - ஆதி திராவிடர், பழங்குடியினர் நலக் கூட்டத்தில் முதல்வர் பேச்சு

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனை மேம்படுத்தும் பொருட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல... மேலும் பார்க்க

தென் கொரிய காட்டுத் தீ: நெருப்பில் சடங்கு செய்த நபர் காரணமா?

தென் கொரியாவில் காட்டுத் தீ ஏற்படக் காரணம் எனச் சந்தேகிக்கப்பட்ட நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தென் கொரியாவின் மிக மோசமான பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தக் காட்டுத... மேலும் பார்க்க

லெபனான் தலைநகரில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல்!

லெபனான் நாட்டு தலைநகரின் மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த 2024 நவம்பர் மாதம் முதல் கடைப்பிடிக்கப்பட்டிருந்த நிலையில் த... மேலும் பார்க்க

துருக்கி மக்கள் போராட்டத்தில் பிக்காச்சூ! விடியோ வைரல்!

துருக்கியில் நாடு தழுவிய மக்கள் போராட்டத்தில் பிக்காச்சூ வேடமணிந்த ஒருவர் கலந்து கொண்டுள்ளார்.துருக்கி நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ... மேலும் பார்க்க

சீனாவின் செயற்கைக்கோள் முதலீட்டுக்கு செக் குடியரசு தடை!

செக் குடியரசு நாட்டில் சீனாவின் செயற்கைக்கோள் முதலீட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.சீனாவைச் சேர்ந்த எம்போசாட் என்ற நிறுவனம் கிழக்கு செக்கியா மாகாணத்தின் வல்கோஸ் என்ற கிராமத்தில் செயற்கைக்கோள் டிஷ் பொ... மேலும் பார்க்க