செய்திகள் :

நிலைக்குலுங்கிய மியான்மர்: ஆயிரத்தைத் தாண்டிய பலி!

post image

மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் பலியானோர் எண்ணிக்கை ஆயிரதைத் தாண்டியுள்ளதாக அந்த நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் நேற்று(28.03.25) பிற்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் இரு நாடுகளும் நிலை குலுங்கியுள்ளது. பெரிய பெரிய கட்டடங்களும் நொடிப்பொழுதில் சீட்டுக்கட்டு போன்று சரிந்துள்ள காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் பல அடுக்குமாடி கட்டடங்கள் நிலநடுக்கத்தால் சரிந்துள்ளன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாகவும், பல உயிரிழந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலாயை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கங்கள் நிகழ்ந்துள்ளன.

கடும் பாதிப்பைச் சந்தித்த மியாமன்ரில் கட்டட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 1,002 பேர் பலியானதாகவும், 2,376 பேர் காயமடைந்துள்ளதாகவும்,30-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதாகவும் அந்த நாட்டு ராணுவ அரசு அறிவித்துள்ளது. இடிபாடுகளிலிருந்து தோண்டி தோண்டி உடல்கள் எடுக்கப்படுவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

ஏற்கெனவே மியான்மரில் உள்நாட்டுப் போரில் சிக்கித் தவிக்கும் சூழலில், இந்த நிலநடுக்கம் மேலும் வேதனைக்குள்ளாகியுள்ளது. இரு நாடுகளிலும் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றது. நிலநடுக்க பகுதியில் எங்கும் மரண ஓலங்களும், அழுகை குரலுமாகக் காணப்படுகிறது. தன் குடும்பத்தினரும், தன்னுடன் இருந்தவர்களும் எங்கேயாவது ஒரு மூலையில் உயிருடன் இருக்கமாட்டார்களா என்ற கூக்குரலிட்டுக் கதறும் மக்களின் குரல்கள் மனதைப் பிளக்கும் வகையில் உள்ளது.

ரமலான் மாதத்தில் அதிக தாக்குதல்களை சந்தித்த நாடு பாகிஸ்தான்!

ரமலான் மாதத்தில் அதிக தாக்குதல்களை சந்தித்த நாடாக பாகிஸ்தான் உள்ளது என அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான திங்க் டேங்க் தெரிவித்துள்ளது. ரமலானையொட்டி பகையுணர்வை சில அமைப்புகள் கைவிட்டிருந்தாலும், ச... மேலும் பார்க்க

மியான்மர் நிலநடுக்கம்: உயிரிழப்பு 2,000-ஆக உயர்வு!

மியான்மரிலும் அதன் அண்டை நாடான தாய்லாந்திலும் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் கடந்த வெள்ளிக்கிழமை(மார்ச் 28) ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப்பணி முழுவீச்சில் நடைபெற்று வரு... மேலும் பார்க்க

அமைதிக்கான நோபல் பரிசு: இம்ரான் கான் பெயர் பரிந்துரை!

அமைதிக்கான நோபல் பரிசுக்கு சிறையிலுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (72) பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.பாகிஸ்தானில் மனித உரிமைகளைக் காப்பதற்கும் ஜனநாயகத்தை நிலைநாட்டவும் மேற்கொண்ட நடவட... மேலும் பார்க்க

அமெரிக்கா எச்சரிக்கை! தயார் நிலையில் ஈரான் ஏவுகணைகள்!

டிரம்ப் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஈரான் ஏவுகணைகளைத் தயார் நிலையில் வைத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடுமையான வரம்புகள் கொண்ட அணு ஆயுதத் திட்டங்கள் தொடர்பான புதிய ஒப்பந்தத்திற்கு ஈரான் அரசு ஒப்... மேலும் பார்க்க

மியான்மர் நிலநடுக்கம்: தொழுகையில் இருந்த 700 முஸ்லீம்கள் பலி!

மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின்போது மசூதிகளில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 முஸ்லீம்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமா... மேலும் பார்க்க

வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும்: ஈரானை எச்சரிக்கும் டிரம்ப்!

அணு ஆயுதத் திட்டம் தொடர்பான அமெரிக்காவின் ஒப்பந்தத்திற்கு ஈரான் ஒப்புக்கொள்ளாவிட்டால் அவர்கள்மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களைக... மேலும் பார்க்க