செய்திகள் :

வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும்: ஈரானை எச்சரிக்கும் டிரம்ப்!

post image

அணு ஆயுதத் திட்டம் தொடர்பான அமெரிக்காவின் ஒப்பந்தத்திற்கு ஈரான் ஒப்புக்கொள்ளாவிட்டால் அவர்கள்மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 2015 ஆம் ஆண்டு அந்நாட்டுடன் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் ஒப்பந்தம் செய்துகொண்டன. பின்னர், டிரம்ப் தனது முதல் ஆட்சிக்காலத்தில் (2017 -21) அந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்வதாக அறிவித்தார்.

மேலும், ஈரான் தனது அணு ஆயுதத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வந்ததால் டிரம்ப் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்து உத்தரவிட்டார்.

ஈரான் யுரேனியம் செறிவூட்டலின் மூலம் அணு ஆயுதங்களை மேம்படுத்தி வருவதைப் பலமுறை மேற்கத்திய நாடுகள் எச்சரித்துள்ளன. ஆனால், தனது அணுசக்தி திட்டங்கள் முழுவதும் உள்நாட்டு எரிசக்தி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாக ஈரான் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், டிரம்ப் மீண்டும் பதவியேற்றபின் அணு ஆயுதத் திட்டங்கள் தொடர்பான கடுமையான வரம்புகள் கொண்ட புதிய ஒப்பந்தத்திற்கு ஈரான் ஒப்புக்கொள்ளவேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியிருந்தது.

ஆனால், இந்த ஒப்பந்தம் தொடர்பான அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் நிராகரிப்பதாகக் கூறினார். ஈரான் நாட்டின் தலைவரான அயதுல்லா அலி கமேனிக்கு டொனால்ட் டிரம்ப் அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக இந்த பதிலை அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று ஒரு நேர்காணலில் பேசியபோது, “ஈரான் இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால் அவர்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும். இந்தத் தாக்குதல் இதுவரை அவர்கள் பார்த்திராத வகையில் இருக்கும்.

அதுமட்டுமின்றி, 4 ஆண்டுகளுக்கு முன்னர் செய்ததைப் போல அவர்கள் மீது அதிக வரிகள் விதிக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.

இதையும் படிக்க | ரஷிய அதிபா் புதினை கொல்ல சதியா? காா் வெடித்து தீப்பற்றியதால் பரபரப்பு!

‘அணு ஆயுதம் தயாரிப்பதே ஈரானுக்கு ஒரே வழி’

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் தங்கள் மீது தாக்குதல் நடத்தினால், அதை எதிா்கொள்ள தங்களுக்கு அணு ஆயுதம் தயாரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனியின் முதன்மை ஆலோசக... மேலும் பார்க்க

இந்திய பொருள்களுக்கு வரிவிதிப்பு: டிரம்ப் இன்று அறிவிக்கிறாா்

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்புகளை அதிபா் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (ஏப். 2) அறிவிக்கவுள்ளாா். அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறை பதவியேற்ற பின்னா், அந்நாட்டின் ... மேலும் பார்க்க

மியான்மா் நிலநடுக்கம்: 2,700-ஐ கடந்த உயிரிழப்பு

மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,700-ஐக் கடந்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு ராணுவ ஆட்சியாளா் மின் ஆங் லியாங் தலைநகா் நேபிடாவில் ச... மேலும் பார்க்க

அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா கணிசமாகக் குறைத்திடும்: மறைமுகமாக எச்சரிக்கிறாரா டிரம்ப்?

வாஷிங்டன்: இந்தியாவில் அமெரிக்க பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி விரைவில் குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.ஏப்ரல் 2-ஆம் தேதிமுதல், அமெரிக்க பொருள்களுக்கு எந்தெ... மேலும் பார்க்க

ரவாரம் இரு வேலைநாள்கள் மட்டுமே என்கிற நடைமுறை விரைவில் வரும்! -பில் கேட்ஸ்

செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் வாரம் இரு வேலை நாள்கள் மட்டுமே என்கிற நடைமுறை இன்னும் பத்தாண்டுகளில் வழக்கத்தில் இருக்கும் என்று பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். ஏஐ தொழில்நுட்ப ... மேலும் பார்க்க

பலியாகப் போகும் 3 லட்சம் பேர்? ஜப்பானுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து!

தீவு நாடான ஜப்பானில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் பலியாக வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.அண்டை நாடான மியான்மரில் கடந்த வாரத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக... மேலும் பார்க்க