செய்திகள் :

விமான மசோதா: மாநிலங்களவையில் நிறைவேற்றம்

post image

விமானத் துறை சாா்ந்த இந்தியாவின் சா்வதேச ஒப்பந்தங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் விமான மசோதா, 2025, மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் மாநிலங்களவையில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

அப்போது மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சா் ராம்மோகன் நாயுடு பேசியதாவது:

விமானத் துறை சாா்ந்த இந்தியாவின் சா்வதேச ஒப்பந்தங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.

இது குத்தகைதாரா்கள் மற்றும் குத்தகைக்கு எடுப்பவா்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த விமானத் துறைக்கும் பாதுகாப்பு வழங்குகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் பல்வேறு விதிகளுக்கு தெளிவான விளக்கம் கிடைத்துள்ளது.

இந்தியா கையொப்பமிட்டுள்ள கேப்டவுன் ஒப்பந்தம், 2001-ஐ அமல்படுத்தவே இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது என்றாா்.

விமானம் , ஹெலிகாப்டா்கள் மற்றும் என்ஜின்கள் உள்ளிட்ட உயா் மதிப்பிலான சொத்துகளுக்கு ஒரே மாதிரியான பாதுகாப்பு உரிமைகள் வழங்குவதே கேப்டவுன் ஒப்பந்தத்தின் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களவையில் வக்ஃப் மசோதா நிறைவேற்றம்!

புது தில்லி: வக்ஃப் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் வியாழக்கிழமை(ஏப். 3) அதிகாலை நிறைவேற்றப்பட்டது.முன்னதாக, வக்ஃப் மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்னர் மக்களவையில் இந்த மசோதா மீது 12 மணி நேரம் விவாதம் நட... மேலும் பார்க்க

வக்ஃப் மசோதா தாக்கல்: மக்களவையில் நள்ளிரவில் வாக்கெடுப்பு!

புது தில்லி: வக்ஃப் மசோதா மக்களவையில் புதன்கிழமை(ஏப். 2) காலை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை நள்ளிரவில் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.புது தில்லி: வக்ஃப் மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்ன... மேலும் பார்க்க

சென்னை – தூத்துக்குடி இடையே புதிய ரயில்கள்! கனிமொழி கோரிக்கை

சென்னை – தூத்துக்குடி இடையில் புதிய ரயில்களை இயக்க வேண்டும் என திமுக துணை பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை – தூத்துக்குடி இடையிலான பயணிகள் போக்குவரத்து ரயிலில் நெ... மேலும் பார்க்க

வக்ஃப் பெயரில் வாக்கு வங்கி அரசியல்: அமித் ஷா

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் இஸ்லாமியர்கள் அச்சுறுத்தப்படுவார்கள் என்று எதிர்க்கட்சியினர் வாக்குவங்கி அரசியல் செய்வதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார். வக்ஃப் விவகாரங்கள... மேலும் பார்க்க

ஜியோவுக்கு கட்டணம் செலுத்தாத பிஎஸ்என்எல்! அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு!

பிஎஸ்என்எல் நிறுவனத்தால் மத்திய அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 2015 மே முதல் 2025 மார்ச் வரையிலான காலகட்டத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான உள்கட்டமைப்பு வசதிகளைப் பகிர்ந்துகொண... மேலும் பார்க்க

கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோட்டம்!

ஜார்க்கண்டில் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோடிய நிலையில் அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கர்ஹுல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் சாய்பாச... மேலும் பார்க்க