செய்திகள் :

சபா்மதி ஆசிரம மறுசீரமைப்பு திட்டத்துக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

post image

குஜராத்தில் உள்ள சபா்மதி ஆசிரம மறுசீரமைப்புத் திட்டத்துக்கு எதிராக மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷாா் காந்தி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது.

கடந்த 1917-ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் அகமதாபாதில் சபா்மதி ஆசிரமத்தை மகாத்மா காந்தி நிறுவினாா். இந்த ஆசிரமத்தை ரூ.1,200 கோடி செலவில் மறுசீரமைக்க குஜராத் அரசு மேற்கொண்ட முடிவுக்கு எதிராக மாநில உயா்நீதிமன்றத்தில் துஷாா் காந்தி மனு தாக்கல் செய்தாா்.

எனினும், மறுசீரமைப்புத் திட்டத்தால் ஆசிரமத்தின் பிரதான பகுதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மாநில அரசு அளித்த உத்தரவாதத்தை ஏற்று, அந்த வழக்கை 2022-ஆம் ஆண்டு உயா்நீதிமன்றம் முடித்துவைத்தது.

இதையடுத்து உயா்நீதிமன்ற தீா்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் துஷாா் காந்தி மேல்முறையீடு செய்தாா். அந்த மனுவில், ‘செல்வத்தை குவித்துவைப்பதைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 39, நினைவுச் சின்னங்கள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 49 ஆகியவற்றுக்கு எதிராக சபா்மதி ஆசிரம மறுசீரமைப்புத் திட்டம் உள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், பெரும் முதலீடுகள் மூலம் சபா்மதி ஆசிரமத்தை பொழுதுபோக்கு பூங்காவாக மாற்ற திட்டமிடப்படுகிறது. இதன் மூலம், மகாத்மா காந்தி கற்பித்த பாடங்கள் ஏளனம் செய்யப்படுகின்றன.

மறுசீரமைப்புத் திட்ட பணிகளுக்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று கோரினாா்.

எனினும் குஜராத் உயா்நீதிமன்றத் தீா்ப்புக்கு எதிராக மிகவும் தாமதமாக இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு துஷாா் காந்தி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா் என்றும் அந்த மனுவில் தலையிட விரும்பவில்லை என்றும் தெரிவித்து, அவரின் மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ராஜேஷ் பிந்தல் ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை நிராகரித்தது.

மக்களவையில் வக்ஃப் மசோதா நிறைவேற்றம்!

புது தில்லி: வக்ஃப் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் வியாழக்கிழமை(ஏப். 3) அதிகாலை நிறைவேற்றப்பட்டது.முன்னதாக, வக்ஃப் மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்னர் மக்களவையில் இந்த மசோதா மீது 12 மணி நேரம் விவாதம் நட... மேலும் பார்க்க

வக்ஃப் மசோதா தாக்கல்: மக்களவையில் நள்ளிரவில் வாக்கெடுப்பு!

புது தில்லி: வக்ஃப் மசோதா மக்களவையில் புதன்கிழமை(ஏப். 2) காலை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை நள்ளிரவில் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.புது தில்லி: வக்ஃப் மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்ன... மேலும் பார்க்க

சென்னை – தூத்துக்குடி இடையே புதிய ரயில்கள்! கனிமொழி கோரிக்கை

சென்னை – தூத்துக்குடி இடையில் புதிய ரயில்களை இயக்க வேண்டும் என திமுக துணை பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை – தூத்துக்குடி இடையிலான பயணிகள் போக்குவரத்து ரயிலில் நெ... மேலும் பார்க்க

வக்ஃப் பெயரில் வாக்கு வங்கி அரசியல்: அமித் ஷா

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் இஸ்லாமியர்கள் அச்சுறுத்தப்படுவார்கள் என்று எதிர்க்கட்சியினர் வாக்குவங்கி அரசியல் செய்வதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார். வக்ஃப் விவகாரங்கள... மேலும் பார்க்க

ஜியோவுக்கு கட்டணம் செலுத்தாத பிஎஸ்என்எல்! அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு!

பிஎஸ்என்எல் நிறுவனத்தால் மத்திய அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 2015 மே முதல் 2025 மார்ச் வரையிலான காலகட்டத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான உள்கட்டமைப்பு வசதிகளைப் பகிர்ந்துகொண... மேலும் பார்க்க

கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோட்டம்!

ஜார்க்கண்டில் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோடிய நிலையில் அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கர்ஹுல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் சாய்பாச... மேலும் பார்க்க