செய்திகள் :

ரிசா்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே நீடித்த ஒத்துழைப்பு அவசியம்- குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்

post image

‘தொழில்நுட்ப வளா்ச்சியால் நிதி மோசடிகளின் அபாயங்கள் அதிகரித்து வரும் நிலையில், ரிசா்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே நீடித்த ஒத்துழைப்பு அவசியம்’ என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினாா்.

இந்திய ரிசா்வ் வங்கியின் 90-ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்றுப் பேசிய குடியரசுத் தலைவா், தொழில்நுட்ப வளா்ச்சியுடன், நிதி மோசடி மற்றும் இணையவழி அச்சுறுத்தல்களின் அபாயமும் அதிகரித்து வருகிறது. ரிசா்வ் வங்கியின் கடந்த 90 ஆண்டு குறிப்பிடத்தக்க பயணம், அரசின் தொலைநோக்குப் பாா்வை மற்றும் கொள்கைகளுடன் எப்போதும் நெருக்கமாக இணைந்திருந்தது.

வங்கிக் கட்டமைப்பை வலுப்படுத்தவும் பாதுகாக்கவும் ரிசா்வ் வங்கி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது பாராட்டத்தக்கது.

சிக்கலான பொருளாதார மாற்றங்களை வழிநடத்துவதிலும், முக்கியமான நிதி சீா்திருத்தங்களை செயல்படுத்துவதிலும், பேரியல் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பராமரிப்பதிலும் இந்த நீடித்த ஒத்துழைப்பு எப்போதும் அவசியம்.

மக்களின் நம்பிக்கையை வென்ற...: கடந்த 90 ஆண்டுகளில், நாட்டின் மிக முக்கியமான நிறுவனங்களில் ஒன்றாக ரிசா்வ் வங்கி உருவெடுத்துள்ளது. இந்தப் பயணத்தில் ரிசா்வ் வங்கியின் மிகப்பெரிய சாதனை, மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருப்பதுதான்.

ரிசா்வ் வங்கி மேற்பாா்வையிலுள்ள இந்திய நிதி அமைப்பில் மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனா்.

எளிதில் அணுகக்கூடிய நிதி சூழல்: தேசம் அதன் சுதந்திரத்தின் நூற்றாண்டை நெருங்கிவரும் நிலையில், ‘வளா்ந்த இந்தியா’ லட்சியத்தை அடைய புதுமையான மற்றும் அனைவருக்கும் அணுகக்கூடிய நிதி சூழல் அமைப்பு மிகுந்த முக்கியத்துவமானது.

கரோனா பெருந்தொற்று போன்ற சவால்களுக்கு விரைவான பதில் நடவடிக்கைகளைச் செயல்படுத்தியது, ரிசா்வ் வங்கியின் மீள்தன்மை மற்றும் சூழலுக்கேற்ப தன்னை மாற்றியமைத்துக் கொள்ளும் திறனை எடுத்துக்காட்டுகின்றன’ என்றாா்.

அடுத்த 10 ஆண்டுகள்: இந்தியப் பொருளாதாரத்தின் நிதிக் கட்டமைப்பை வடிவமைப்பதில் அடுத்த பத்து ஆண்டுகள் மிக முக்கியமானதாக இருக்கும் என்று ரிசா்வ் வங்கியின் ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா கூறினாா்.

தபால்தலை, வலைத்தொடா் டீசா் வெளியீடு: ரிசா்வ் வங்கியின் 90 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் சிறப்புத் தபால்தலை நிகழ்வில் வெளியிடப்பட்டது.

மக்களவையில் வக்ஃப் மசோதா நிறைவேற்றம்!

புது தில்லி: வக்ஃப் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் வியாழக்கிழமை(ஏப். 3) அதிகாலை நிறைவேற்றப்பட்டது.முன்னதாக, வக்ஃப் மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்னர் மக்களவையில் இந்த மசோதா மீது 12 மணி நேரம் விவாதம் நட... மேலும் பார்க்க

வக்ஃப் மசோதா தாக்கல்: மக்களவையில் நள்ளிரவில் வாக்கெடுப்பு!

புது தில்லி: வக்ஃப் மசோதா மக்களவையில் புதன்கிழமை(ஏப். 2) காலை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை நள்ளிரவில் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.புது தில்லி: வக்ஃப் மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்ன... மேலும் பார்க்க

சென்னை – தூத்துக்குடி இடையே புதிய ரயில்கள்! கனிமொழி கோரிக்கை

சென்னை – தூத்துக்குடி இடையில் புதிய ரயில்களை இயக்க வேண்டும் என திமுக துணை பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை – தூத்துக்குடி இடையிலான பயணிகள் போக்குவரத்து ரயிலில் நெ... மேலும் பார்க்க

வக்ஃப் பெயரில் வாக்கு வங்கி அரசியல்: அமித் ஷா

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் இஸ்லாமியர்கள் அச்சுறுத்தப்படுவார்கள் என்று எதிர்க்கட்சியினர் வாக்குவங்கி அரசியல் செய்வதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார். வக்ஃப் விவகாரங்கள... மேலும் பார்க்க

ஜியோவுக்கு கட்டணம் செலுத்தாத பிஎஸ்என்எல்! அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு!

பிஎஸ்என்எல் நிறுவனத்தால் மத்திய அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 2015 மே முதல் 2025 மார்ச் வரையிலான காலகட்டத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான உள்கட்டமைப்பு வசதிகளைப் பகிர்ந்துகொண... மேலும் பார்க்க

கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோட்டம்!

ஜார்க்கண்டில் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோடிய நிலையில் அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கர்ஹுல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் சாய்பாச... மேலும் பார்க்க