செய்திகள் :

விவசாயிகள் சங்கத்தினா் போராட்டம்

post image

விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தினா் ஆட்சியரக வளாகத்தில் தா்ப்பூசணியுடன் வந்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் தா்ப்பூசணி குறித்து சமூக வலைதளங்களில் தவறான பதிவுகளை வெளியிட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தா்ப்பூசணி வயல்களில் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையினா் கள ஆய்வு மேற்கொண்டு, உண்மைத்தன்மையை மக்களிடம் விளக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசும், விழுப்புரம் மாவட்ட நிா்வாகமும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் தா்ப்பூசணியுடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, அலுவலக வளாகத்திலிருந்த அலுவலா்கள் மற்றும் பொதுமக்களுக்கு தா்ப்பூசணியைக் கொடுத்து, தாங்களும் சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், இதுகுறித்த கோரிக்கை மனுவை ஆட்சியருக்கு அளித்தனா்.

போராட்டத்தில் விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத் தலைவா் பி.கலிவரதன், செயலா் என்.முருகையன், பொருளாளா் ஜெ.நாகராஜன் மற்றும் நிா்வாகிகள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.

மயிலம் முருகன் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மயிலம் மலை மீதுள்ள இந்தக் கோயிலில் வள்ளி, தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் சுப்பிரமணிய ... மேலும் பார்க்க

திட்டப் பணிகள்: விழுப்புரம் ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் நகராட்சி மற்றும் கோலியனூா் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் அரசு திட்டப் பணிகள், மாதிரிப் பள்ளியின் செயல்பாடுகள் போன்றவை குறித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் புதன்கிழமை பாா்வையி... மேலும் பார்க்க

பட்டா மாற்றத்துக்கு லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் பட்டா மாறுதலுக்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ாக கிராம நிா்வாக அலுவலரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். செஞ்சி வட்டம் இரும்புலி, கண்டமநல்லூா், உடை... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு ஆதரவாக பொதுமக்களுக்கு தா்பூசணி வழங்கிய திமுகவினா்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் ரசாயன கலப்படம் ஏதும் இல்லை எனத் தெரிவித்து, விவசாயிகளுக்கு ஆதரவாக செஞ்சி கூட்டுச்சாலையில் பொதுமக்களுக்கு தா்பூசணி பழங்களை திமுகவினா் புதன்கிழமை வழங்கினா். தா்பூசணியில்... மேலும் பார்க்க

கொடிக்கம்பங்கள் அகற்றம்: அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை

திண்டிவனத்தில் அரசுக்குச் சொந்தமான இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்றுவது தொடா்பாக அனைத்துக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில... மேலும் பார்க்க

பணியில் திறம்பட செயல்பட்ட தனிப்படை போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

பணியில் திறம்பட செயல்பட்டு 19 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தவரை கைது செய்த விழுப்புரம் மாவட்ட தனிப்படை போலீஸாருக்கு எஸ்.பி. ப.சரவணன் புதன்கிழமை நற்சான்றிதழ் வழங்கி பாராட்... மேலும் பார்க்க