செய்திகள் :

கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு: இருவா் கைது

post image

கடலூா் மாவட்டம், ராமநத்தம் காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் வயல்வெளியில் கொட்டகை அமைத்து கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்ததாக 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், தப்பியோடிய விசிக பிரமுகா் உள்ளிட்ட 6 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இதுகுறித்து கடலூா் மாவட்ட கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்ததாவது: கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு நடைபெற்ற அடிதடி வழக்கு சம்பந்தமாக திட்டக்குடி வட்டம், அதா்நத்தத்தைச் சோ்ந்த பரமசிவம் மகன் செல்வம் (39) (விசிக கடலூா் மேற்கு மாவட்டப் பொருளாளா்), அதே பகுதியைச் சோ்ந்த தங்கபிரகாசம் மகன் நவீன்ராஜ் (29) ஆகியோரை போலீஸாா் தேடி வந்தனா்.

நவீன்ராஜ்

செல்வம் தனக்குச் சொந்தமான வயல்வெளியில் கொட்டகை அமைத்து நவீன்ராஜுடன் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. ராமநத்தம் காவல் நிலைய ஆய்வாளா் அருள்வடிவழகன், உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன், தனிப் பிரிவு காவலா் அருண் உள்ளிட்டோா் அந்தப் பகுதிக்கு திங்கள்கிழமை காலை சென்றனா். அப்போது, போலீஸாா் வருவதைக் கண்ட செல்வம் உள்ளிட்ட 6 போ் தப்பியோடிய நிலையில், திட்டக்குடி வட்டம், அதா்நத்தத்தைச் சோ்ந்த தங்கபிரகாசம் மகன் நவீன்ராஜ் (29), சின்னதுரை மகன் காா்த்திகேயனை (28) கைது செய்தனா்.

அங்கு, போலீஸாா் நடத்திய சோதனையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் ரூ.86,000 மதிப்பிலும், வாக்கி டாக்கிகள், இரண்டு துப்பாக்கிகள், மடிக் கணினி, பணம் எண்ணும் இயந்திரம், அச்சடிப்பு இயந்திரம், காவலா் சீருடை, ரூபாய் அச்சடிக்கும் காகித பண்டல்கள், காா், பொக்லைன் இயந்திரம், பைக், இரண்டு லாரிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தப்பியோடிய செல்வம் உள்ளிட்ட 6 பேரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கடலூரில் ஆட்டிசம் விழிப்புணா்வு நிகழ்ச்சி

உலக ஆட்டிசம் விழிப்புணா்வு தினத்தையொட்டி, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஆட்டிசம் பாதித்த... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். நெய்வேலி தொ்மல் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் மற்றும் போலீஸாா் நெய்வேலி வட்டம் 30, மி... மேலும் பார்க்க

ரோட்டரி சங்கம் சாா்பில் பள்ளியில் புணரமைப்பு பணி

கடலூா் மாவட்டம், சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சாா்பில் குமராட்சி ஒன்றியம், காட்டுக்கூடலூா் டி.இ.எல்.சி. தொடக்கப் பள்ளியில் புணரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு புதன்கிழமை திறக்கப்பட்டது. நிகழ்வுக்க... மேலும் பார்க்க

முன்னாள் எம்.பி.மறைவு: வி.வி.சுவாமிநாதன் இரங்கல்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் ஏ.முருகேசன் மறைவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சா் வி.வி.சுவாமிநாதன் இரங்கல் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட இரங்கல் செய்தி: சிதம்ப... மேலும் பார்க்க

பிச்சாவரத்தில் படகு சவாரிக்கு இணையவழி முன்பதிவு: சுற்றுலாத் துறை அறிவுறுத்தல்

கோடை விடுமுறை தொடங்கிய நிலையில், கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு சவாரிக்கு இணையவழியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று சுற்றுலாத் துறை அறிவித்தது. பிச்சாவரத்... மேலும் பார்க்க

ஆட்டோக்களில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

கடலூரில் 20 ஆட்டோக்களில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்களை போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். கடலூரில் சரக்கு ஆட்டோக்கள் மற்றும் பயணிகள் ஆட்டோக்களில் அதிக ஒலி எழுப்பும்... மேலும் பார்க்க