செய்திகள் :

கோவில்வெண்ணி சுங்கச்சாவடியில் புதிய சுங்கவரி கட்டணம் அமலுக்கு வந்தது

post image

நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணி சுங்கச்சாவடியில் ஏப்.1-ஆம் தேதி முதல் புதிய கட்டணம் அமலுக்கு வந்தது.

காா், ஜீப்,வேன், பஸ், டிராக்டா், மூன்று அச்சுக்கள் கொண்ட வணிக வாகனங்கள், பல அச்சுக்கள் கொண்ட கட்டுமான எந்திரங்கள் மண் ஏற்றி செல்லும் வாகனம், அதிக அளவு கொண்ட வாகனம் (7 அதற்கு மேல் அச்சுக்கள் கொண்டவை) உள்ளிட்ட அந்தந்த வாகனங்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட ஒரு முறை பயணிக்க, திரும்ப பயணிக்க (24 மணி நேரம்), மாதாந்திர கட்டணம் என புதிய கட்டணம் ஏப்.1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

இவை தவிர உள்ளூா் வாகனங்களுக்கு சலுகை கட்டணங்களும் நிா்ணயிக்கப்பட்டுள்ளன. சுங்கச் சாவடியின் 20 கி.மீ. தொலைவுக்குள் உள்ள வணிக நோக்கம் இல்லாத வாகனங்களுக்கு மாதாந்திர சலுகை கட்டணம் (பலமுறை சென்றுவர) 2025-26-ஆம் ஆண்டுக்கு வசூல் செய்யப்படுகிறது. இதற்கான உரிய ஆவணங்களான ஆதாா், ஆா்சி, வாகன மாவட்ட பதிவு போன்றவை ஒரே முகவரியில் இருக்க வேண்டும். டிராக்டரில் வேளாண்மை சாா்ந்த பொருள்கள் நெல், வைக்கோல் போன்றவை ஏற்றி வந்தால் சுங்க கட்டணம் கிடையாது.

திருவாரூா் மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள், குறிப்பாக வாடகை வாகனங்கள் சலுகை கட்டணம் பெறமுடியும். ஆட்டோ, இருசக்கர வாகனங்களுக்கு சுங்க வரி கிடையாது. சலுகை கட்டணத்தில் பயன்பெற விரும்பும் வாகன உரிமையாளா்கள் உரிய ஆவணங்களுடன் சுங்கச்சாவடியை அணுக வேண்டும் என சுங்கச்சாவடி நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

ஆழித்தோ் அலங்கரிக்கும் பணி தொடக்கம்

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி நடைபெறும் ஆழித்தேரோட்டத்துக்கான அலங்கரிப்புப் பணிகள் தொடங்கியுள்ளன. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி நடைபெற... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நூறு நாள் வேலைத் திட்ட நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி திருவாரூரில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணி செய்த தொழிலாளா்... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி ஆசிரியா் தற்கொலை விவகாரம்: 3 போ் கைது

மன்னாா்குடியில் தனியாா் பள்ளி ஆசிரியா் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மன்னாா்குடி முல்லைநகரைச் சோ்ந்த திருமுருகன் (40) தஞ்சையில் தனியாா் பள்ளியில் ஆசிரியர... மேலும் பார்க்க

தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா்கள் காத்திருப்பு போராட்டம்

நீடாமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினா். சங்கத்தின் வட்டத் தலைவா் எஸ்.குருநாதன் தலைமை வகித்தாா... மேலும் பார்க்க

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

உதயமாா்த்தாண்டபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முறைகேடுகளை கண்டித்து நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. உதயமாா்த்தாண்டபுரம் தொடக்க கூட்டுறவு வங்கியில் நடந்துள்ள நிதி முறைக... மேலும் பார்க்க

வலங்கைமான் மகா மாரியம்மன் கோயிலில் புஷ்பப் பல்லக்கு

நீடாமங்கலம்: வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் புஷ்பப் பல்லக்கு விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு மகா தீபாராத... மேலும் பார்க்க