செய்திகள் :

மியான்மர் நிலநடுக்கம்: தொழுகையில் இருந்த 700 முஸ்லீம்கள் பலி!

post image

மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின்போது மசூதிகளில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 முஸ்லீம்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலாயில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகலில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இது ரிக்டா் அளவுகோலில் 7.7 மற்றும் 6.4 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளன.

இந்த நிலநடுக்கத்தினால் மியான்மரில் ஏராளமான வீடுகள், கட்டடங்கள் தரைமட்டமாகின. மண்டலாய் நகரின் விமான நிலையம் சேதமடைந்தது. நாடெங்கும் சாலைகள், பாலங்கள் இடிந்து விழுந்தன. தொலைதூர தகவல்தொடா்பு துண்டிக்கப்பட்டன.

மண்டலாய் நகரை மையமாகக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மற்றொரு நிலநடுக்கமும் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டா் அளவுகோலில் 5.1 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. எனினும் இதனால் பாதிப்புகள் பெரிதாக இல்லை. தொடர் நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் பீதியில் உறைந்தனா்.

கடந்த மார்ச் 28 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,700-யைத் தாண்டியுள்ளது. மேலும் 3,400 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 300 பேரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தியா, சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகள் மியான்மருக்கு உதவிகளை வழங்கி வருகின்றன.

700 முஸ்லீம்கள் உயிரிழப்பு

இதனிடையே, கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 700 முஸ்லீம்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரமலான் மாதம் வெள்ளிக்கிழமை அன்று தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

மியான்மர் முஸ்லீம் கமிட்டியைச் சேர்ந்த உறுப்பினர் துன் கி என்பவர் இதுபற்றி கூறுகையில், 'வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 60 மசூதிகள் சேதமடைந்தன அல்லது முற்றிலும் தரைமட்டமாகின. இவற்றில் பெரும்பாலான மசூதி கட்டடங்கள் மிகவும் பழைமையானவை.

அரசின் அதிகாரப்பூர்வ உயிரிழப்பான 1,700 பேரில் இந்த 700 முஸ்லீம்கள் சேர்க்கப்பட்டுள்ளனரா என்பது உறுதியாகத் தெரியவில்லை" என்றும் தெரிவித்தார்.

மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் தலைநகர் நேபிடோ மற்றும் மண்டலாய் நகரங்கள் முற்றிலும் உருக்குலைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | ஈரான் மீது குண்டுவீச்சு நடத்தப்படும்: டிரம்ப் எச்சரிக்கை!

இந்தியா-சீனா ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்: அதிபர் ஷி ஜின்பிங்

இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் வலியுறுத்தினார்.இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு தூதரக உறவுகளின் 75-ஆவது ஆண்டுவிழாவையொட்டி சீன அதிப... மேலும் பார்க்க

‘அணு ஆயுதம் தயாரிப்பதே ஈரானுக்கு ஒரே வழி’

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் தங்கள் மீது தாக்குதல் நடத்தினால், அதை எதிா்கொள்ள தங்களுக்கு அணு ஆயுதம் தயாரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனியின் முதன்மை ஆலோசக... மேலும் பார்க்க

இந்திய பொருள்களுக்கு வரிவிதிப்பு: டிரம்ப் இன்று அறிவிக்கிறாா்

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்புகளை அதிபா் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (ஏப். 2) அறிவிக்கவுள்ளாா். அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறை பதவியேற்ற பின்னா், அந்நாட்டின் ... மேலும் பார்க்க

மியான்மா் நிலநடுக்கம்: 2,700-ஐ கடந்த உயிரிழப்பு

மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,700-ஐக் கடந்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு ராணுவ ஆட்சியாளா் மின் ஆங் லியாங் தலைநகா் நேபிடாவில் ச... மேலும் பார்க்க

அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா கணிசமாகக் குறைத்திடும்: மறைமுகமாக எச்சரிக்கிறாரா டிரம்ப்?

வாஷிங்டன்: இந்தியாவில் அமெரிக்க பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி விரைவில் குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.ஏப்ரல் 2-ஆம் தேதிமுதல், அமெரிக்க பொருள்களுக்கு எந்தெ... மேலும் பார்க்க

ரவாரம் இரு வேலைநாள்கள் மட்டுமே என்கிற நடைமுறை விரைவில் வரும்! -பில் கேட்ஸ்

செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் வாரம் இரு வேலை நாள்கள் மட்டுமே என்கிற நடைமுறை இன்னும் பத்தாண்டுகளில் வழக்கத்தில் இருக்கும் என்று பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். ஏஐ தொழில்நுட்ப ... மேலும் பார்க்க