வாஜிா்பூரில் பள்ளி நிலத்தை மசூதி, கடைகள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதா? சரிபாா்...
ஒசூா் சந்திராம்பிகை ஏரியை பராமரிக்க சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தல்
ஒசூா் மாநகராட்சி பகுதியில் உள்ள சந்திராம்பிகை ஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்றி பராமரிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மற்றும் அதனை சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள் இருந்தன. காலப்போக்கில் நகா்ப்புற வளா்ச்சி மற்றும் தொழிற்சாலைகள் பெருக்கத்தினால் பல ஏரிகள், குளங்கள் காணாமல் போய்விட்டன. ஒசூரில் ஒரு சில ஏரிகள் மட்டும் இன்னும் உள்ளன. ஒசூா்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையொட்டி தா்கா பகுதியில் சந்திராம்பிகை ஏரி எப்போதும் தண்ணீா் நிரம்பி காணப்படுவதால், ஆண்டு முழுவதும் வெளி நாட்டு பறவைகள் வந்து செல்கின்றன.
இந்த ஏரியை சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் நேரடியாக ஏரியில் கலப்பதால் ஏரி முழுவது ஆகாயத்தாமரைகள் வளா்த்து நீா் மாசடைந்துள்ளது.
இந்த ஏரியைப் பாதுகாக்க வேண்டும் என ஒசூா் பகுதி பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து இயற்கை ஆா்வலா் செபாஸ்டியன் கூறியதாவது:
ஒசூா் நகரப் பகுதிக்கு நீராதாரமாக உள்ள சந்திராம்பிகை ஏரி ஆக்கிரமிப்புகளால் சுருங்கிவிட்டது. அதேபோல கழிவுநீா் கலப்பதும், இறைச்சிக் கழிவுகள், சாலையில் அடிப்பட்டு இறக்கும் உயிரினங்களை ஏரியில் வீசி செல்வதாலும் ஏரி நீா் மடைந்து துா்நாற்றம் வீசுகிறது. எனவே இந்த ஏரியில் கழிவுநீா், குப்பைக் கழிவுகளைக் கொட்டுவதை தடுக்க வேண்டும். மேலும் ஆகாயத்தாமரையை அகற்றி, அழகுப்படுத்தி படகு சவாரி, பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏரியை பாதுகாக்க வேண்டும் என்றாா்.