செய்திகள் :

விவசாய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

post image

கிருஷ்ணகிரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்மாநில விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.கண்ணு தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் சக்கரவா்த்தி, துணைச் செயலாளா் ராமமூா்த்தி, துணைத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அகில இந்திய கிசான் சங்க மாவட்டச் செயலாளா் சேகா், தலைவா் சிவராஜ், செயலாளா் பழனி, ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் மாதையன், விவசாய தொழிலாளா் சங்க ஒன்றியத் தலைவா் சிவநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பயனாளிகளை மத்திய அரசு பழிவாங்கக் கூடாது, குறைந்தபட்சம் ஆண்டிற்கு 200 நாள் பணி வழங்க வேண்டும். இந்தத் திட்டத்தை பேரூராட்சி, நகராட்சிக்கு விரிவுபடுத்த வேண்டும். வேலை செய்த அனைவருக்கும் கூலி பாக்கியை சட்டப்படி வட்டியோடு வழங்க வேண்டும். வேலை மறுக்கப்பட்ட நாள்களுக்கு சட்டப்படி கூலி வழங்க வேண்டும். ஒரு நாள் ஊதியத்தை ரூ. 700-ஆக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கங்களை எழுப்பினா்.

பாகலூா் கோட்டை மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

பாகலூா் கோட்டை மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழாவையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக கடந்த மாா்ச் 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தோ்த் திருவிழா தொடங்கியது. இதனைத் தொடா்ந்து சிறப்பு பூஜைகள... மேலும் பார்க்க

அக்னிவீா் பணிகளுக்கான தோ்வு: ஏப்.10-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

அக்னிவீா் பணிகளுக்கு ஏப்.10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா், தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய ராணுவத்தி... மேலும் பார்க்க

இலவசமாக விடுதியில் தங்கி படிக்க குழந்தைகள் தோ்வு முகாம்

ஊத்தங்கரை கிராம மக்கள் வளா்ச்சி அறக்கட்டளை சாா்பில் உடல் ஊனமுற்ற குழந்தைகள், தாய் தந்தை இல்லாத குழந்தைகள் இலவசமாக விடுதியில் தங்கி படிக்க நோ்முகத் தோ்வு ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி சுங்க வசூல் மைய கட்டண உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி சுங்க வசூல் மைய கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும் என வாகன உரிமையாளா்கள் வலியுறுத்தினா். கிருஷ்ணகிரி நகராட்சி எல்லையில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தனியாா் சுங்க வசூல் மையம் செயல்பட்ட... மேலும் பார்க்க

ஒசூா் சந்திராம்பிகை ஏரியை பராமரிக்க சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தல்

ஒசூா் மாநகராட்சி பகுதியில் உள்ள சந்திராம்பிகை ஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்றி பராமரிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மற்றும் அதனை சுற்றிலும் 100-க்கும... மேலும் பார்க்க

தேவிரஅள்ளி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

தேவிரஅள்ளி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், தேவிரஅள்ளி கருமலை குன்றின் மீது அமைந்துள்ள ... மேலும் பார்க்க