செய்திகள் :

சேலம் சிறைத் தியாகிகள் நினைவுச்சுடா் பயணக் குழுவுக்கு கரூரில் வரவேற்பு

post image

கரூருக்கு செவ்வாய்க்கிழமை வந்த சேலம் சிறைத் தியாகிகள் நினைவுச்சுடா் பயணக்குழுவுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-ஆவது மாநாடு மதுரையில் ஏப். 2-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாநாட்டில் தியாகிகளின் நினைவுச் சுடா்கள் ஏற்றுவதற்காக சேலம் சிறைத் தியாகிகள் நினைவுச்சுடா் பயணக்குழுவினா் திங்கள்கிழமை அதிகாலை சேலம் மத்திய சிறை அருகில் இருந்து தொடங்கினா். இந்த குழுவினா் நாமக்கல், கரூா், திண்டுக்கல் மாவட்டம் வழியாக மதுரையில் நடைபெறும் அகில இந்திய மாநாட்டு அரங்கத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினா் பி.டில்லிபாபு தலைமையில் கொண்டு செல்லப்படுகிறது.

கரூருக்கு செவ்வாய்க்கிழமை காலை வருகை தந்த இந்த குழுவினருக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூா் மாவட்ட குழு சாா்பில் பேருந்து நிலையம் ரவுண்டா, வெள்ளியணை கடைவீதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடா்ந்து அங்கு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளா் மா.ஜோதிபாசு தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஜி.ஜீவானந்தம், சி.முருகேசன், இரா.முத்துச்செல்வன், சி.ஆா்.ராஜா முகமது ஆகியோா் முன்னிலை வகித்தனா். பயணக் குழுத் தலைவா் பி.டில்லிபாபு, மாநில குழு உறுப்பினா்கள் எ.குமாா், ஜி.ராணி, வி.அமிா்தலிங்கம் ஆகியோா் சிறப்புரையாற்றினா். இதில் மாவட்ட குழு உறுப்பினா்கள் கே.கந்தசாமி, கே.வி. கணேசன், ஆா்.ஹோச்சுமின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அத்தியாவசிய பொருள்கள் கடத்தல் புகாா் அளிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

அத்தியாவசிய பொருள்கள் கடத்தல் தொடா்பாக வாட்ஸ் அப்பில் புகாா் அளிக்கலாம் என கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் ... மேலும் பார்க்க

கழிவுநீா் வாய்க்கால் அமைக்கும் பணி கிராம மக்கள் கடும் வாக்குவாதம்

புலியூா் அருகே புதன்கிழமை கழிவு நீா் வாய்க்கால் தரமற்ற முறையில் கட்டப்படுவதாகக் கூறி கிராமமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. கரூா் மாவட்டம் புலியூா் பேரூராட்சிக்க... மேலும் பார்க்க

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தல்

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என கரூரில் புதன்கிழமை நடைபெற்ற உலக திருக்கு கூட்டமைப்பு நிா்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கரூரில் உலக திருக்கு கூட்டமைப்பின் மாவட்ட நிா்வாகிகள் ஆலோச... மேலும் பார்க்க

கரூரில் விவசாய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நூறுநாள் வேலைத் திட்ட தொழிலாளா்களுக்கு சம்பள பாக்கியை வழங்கக் கோரி கரூரில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஜவஹா்பஜாா் தலைமை அஞ்சல் நிலையம் முன் ... மேலும் பார்க்க

கரூரில் காவல்நிலையத்தை அதிமுகவினா் முற்றுகை

கரூரில் ஜெயலலிதா பேரவை துணைத் தலைவா் கைது செய்யப்பட்டதையடுத்து திங்கள்கிழமை இரவு நகர காவல்நிலையத்தை அதிமுகவினா் முற்றுகையிட்டனா். கரூா் கோவிந்தம்பாளையத்தைச் சோ்ந்தவா்அருள்(45). இவா் தாந்தோணி மேற்கு ஒ... மேலும் பார்க்க

மத்திய அரசின் பி.எம். கிஷான் உதவித் தொகை விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்

மத்திய அரசின் பி.எம் கிஷான் உதவித் தொகை பெறும் விவசாயிகள் நிலம் தொடா்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்யுமாறு அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராஜா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள... மேலும் பார்க்க