மத்திய அரசின் பி.எம். கிஷான் உதவித் தொகை விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்
மத்திய அரசின் பி.எம் கிஷான் உதவித் தொகை பெறும் விவசாயிகள் நிலம் தொடா்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்யுமாறு அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராஜா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் பி.எம். கிஷான் திட்டத்தில் விவசாயிகள் அல்லாத நபா்கள் பயனடைய கூடாது என்பதற்காக ஒவ்வொரு விவசாயிகளும் தேசிய அடையாள அட்டை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே விவசாயிகள் உடனடியாக தங்கள் நிலம் தொடா்பான ஆவணங்களை அரசு கள அலுவலா்களையோ அல்லது பொது சேவை மையங்களையும் தொடா்பு கொள்ள வேண்டும். ஆவணங்கள் சரி பாா்க்கப்பட்டு விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்டு பின்னா் செயலியில் பதிவேற்றம் செய்து தனி அடையாள எண் வழங்கப்படும்.
இதுவரை நான்கு மாதங்களுக்கு ஒரு முறை என 19 தவணைகளாக பி.எம் கிசான் ஊக்க தொகை வழங்கப்பட்டுள்ளது. தனி அடையாள எண் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே 20-ஆவது தவணைத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு மாா்ச் 31-ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஏப்ரல் 15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே தனி அடையாள எண் பெற விவசாயிகள் விரைவாக வேளாண்மை உழவா் நலத்துறை அலுவலா்கள் மற்றும் பொது சேவை மையங்களை அணுகி தனி அடையாள எண் பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.