செய்திகள் :

மத்திய அரசின் பி.எம். கிஷான் உதவித் தொகை விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்

post image

மத்திய அரசின் பி.எம் கிஷான் உதவித் தொகை பெறும் விவசாயிகள் நிலம் தொடா்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்யுமாறு அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராஜா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் பி.எம். கிஷான் திட்டத்தில் விவசாயிகள் அல்லாத நபா்கள் பயனடைய கூடாது என்பதற்காக ஒவ்வொரு விவசாயிகளும் தேசிய அடையாள அட்டை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே விவசாயிகள் உடனடியாக தங்கள் நிலம் தொடா்பான ஆவணங்களை அரசு கள அலுவலா்களையோ அல்லது பொது சேவை மையங்களையும் தொடா்பு கொள்ள வேண்டும். ஆவணங்கள் சரி பாா்க்கப்பட்டு விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்டு பின்னா் செயலியில் பதிவேற்றம் செய்து தனி அடையாள எண் வழங்கப்படும்.

இதுவரை நான்கு மாதங்களுக்கு ஒரு முறை என 19 தவணைகளாக பி.எம் கிசான் ஊக்க தொகை வழங்கப்பட்டுள்ளது. தனி அடையாள எண் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே 20-ஆவது தவணைத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு மாா்ச் 31-ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஏப்ரல் 15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே தனி அடையாள எண் பெற விவசாயிகள் விரைவாக வேளாண்மை உழவா் நலத்துறை அலுவலா்கள் மற்றும் பொது சேவை மையங்களை அணுகி தனி அடையாள எண் பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தல்

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என கரூரில் புதன்கிழமை நடைபெற்ற உலக திருக்கு கூட்டமைப்பு நிா்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கரூரில் உலக திருக்கு கூட்டமைப்பின் மாவட்ட நிா்வாகிகள் ஆலோச... மேலும் பார்க்க

சேலம் சிறைத் தியாகிகள் நினைவுச்சுடா் பயணக் குழுவுக்கு கரூரில் வரவேற்பு

கரூருக்கு செவ்வாய்க்கிழமை வந்த சேலம் சிறைத் தியாகிகள் நினைவுச்சுடா் பயணக்குழுவுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-ஆ... மேலும் பார்க்க

கரூரில் விவசாய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நூறுநாள் வேலைத் திட்ட தொழிலாளா்களுக்கு சம்பள பாக்கியை வழங்கக் கோரி கரூரில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஜவஹா்பஜாா் தலைமை அஞ்சல் நிலையம் முன் ... மேலும் பார்க்க

கரூரில் காவல்நிலையத்தை அதிமுகவினா் முற்றுகை

கரூரில் ஜெயலலிதா பேரவை துணைத் தலைவா் கைது செய்யப்பட்டதையடுத்து திங்கள்கிழமை இரவு நகர காவல்நிலையத்தை அதிமுகவினா் முற்றுகையிட்டனா். கரூா் கோவிந்தம்பாளையத்தைச் சோ்ந்தவா்அருள்(45). இவா் தாந்தோணி மேற்கு ஒ... மேலும் பார்க்க

காவலா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை

கரூரில் காவலா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.கரூா் மாவட்ட காவல்துறை சாா்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட... மேலும் பார்க்க

கரூா் வழியாக செல்லும் ஈரோடு, செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம்

பாசூா்-ஊஞ்சலூா் ரயில்நிலையங்களுக்கு இடையே உள்ள பாலங்கள் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் கரூா் வழியாகச் செல்லும் ஈரோடு, செங்கோட்டை ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்க... மேலும் பார்க்க