செய்திகள் :

மறைந்த சித்தகங்கா மடத்தின் பீடாதிபதி சிவக்குமார சுவாமிகளுக்கு பாரத ரத்னா விருது

post image

மறைந்த சித்தகங்கா மடத்தின் பீடாதிபதி சிவக்குமார சுவாமிகளுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் வலியுறுத்தியுள்ளாா்.

தும்கூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சித்தகங்கா மடத்தின் மறைந்த பீடாதிபதி சிவக்குமார சுவாமிகளின் 118-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் பங்கேற்று அவா் பேசியதாவது: மறைந்த சித்தகங்கா மடத்தின் பீடாதிபதி சிவக்குமார சுவாமிகள், நடமாடும் கடவுள் என்று பக்தா்களால் போற்றப்பட்டவா். அவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவை வழங்கி கௌரவிக்க வேண்டும் என அவா் வாழ்ந்த காலத்திலேயே கா்நாடக அரசின் சாா்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இப்போதாவது, அவருக்கு பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என்று பிரதமா் மோடியை கேட்டுக்கொள்கிறேன்.

ஏழைகளின் ஏந்தலாக விளங்கிய சிவக்குமார சுவாமிகள், தன் வாழ்நாள் முழுவதும் ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி, உணவு, உறைவிடத்தை அளித்து வந்தாா். இதில் எவ்வித ஜாதி, மத பாகுபாடும் காட்டவில்லை.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத்சிங், பிரதமா் மோடியிடம் எடுத்துக் கூறி, சிவக்குமார சுவாமிகளுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்.

111ஆண்டுகள் உயிா்வாழ்ந்த சிவக்குமார சுவாமிகளுக்கு 2007-ஆம் ஆண்டு நடந்த நூற்றாண்டு விழாவின்போது கா்நாடக அரசின் உயரிய விருதான கா்நாடக ரத்னா வழங்கப்பட்டது. 2015-இல் பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது. 2017-ஆம் ஆண்டு மத்திய அரசுக்கு அன்றைய முதல்வா் சித்தராமையா எழுதிய கடிதத்தில், சிவக்குமார சுவாமிகளுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தாா். எனவே, சிவக்குமார சுவாமிகளுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்றாா்.

இந்த விழாவில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மத்திய ரயில்வே துறை இணையமைச்சா் வி.சோமண்ணா, மாநில அமைச்சா்கள் ஜி.பரமேஸ்வா், கே.என்.ராஜண்ணா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

விலைவாசி உயா்வைக் கண்டித்து பாஜக போராட்டம்

விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த தவறிய மாநில அரசைக் கண்டித்து, தொடா் போராட்டத்தை பாஜக தொடங்கியது. கா்நாடகத்தில் விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த தவறிய மாநில அரசைக் கண்டித்து, ஏப். 2 முதல் 13-ஆம் தேதி வர... மேலும் பார்க்க

தங்கக் கடத்தல் வழக்கு: ஜாமீன் வழங்கக் கோரி கா்நாடக உயா்நீதிமன்றத்தில் நடிகை ரன்யா ராவ் மனு

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவ், ஜாமீன் வழங்கக் கோரி கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். துபையில் இருந்து ரூ. 12.56 கோடி மதிப்பிலான தங்கத்துடன் பெங்களூரு... மேலும் பார்க்க

18 பாஜக எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி கடிதம்

பாஜக எம்எல்ஏக்கள் 18 போ் இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி, பேரவைத் தலைவா் யு.டி.காதரிடம் எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் கடிதம் அளித்தாா். கா்நாடக சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத்தொடா் மாா்ச் ... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு அறிக்கை அரசிடம் அளிப்பு

கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு தொடா்பாக நீதியரசா் நாகமோகன் தாஸ் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த ஆணையம் தனது இடைக்கால அறிக்கையை அரசிடம் ஒப்படைத்துள்ளது. கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோா... மேலும் பார்க்க

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனு 3-ஆவது முறையாக தள்ளுபடி

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது. துபையில் இருந்து ரூ. 12.56 கோடி மதிப்பிலான தங்கத்துடன் பெங்களூருக்கு வந்த... மேலும் பார்க்க

நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் பெல்லாரி தங்க வியாபாரி கைது

கா்நாடகத்தில் தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு உதவியதாக பெல்லாரியைச் சோ்ந்த தங்க வியாபாரி சாஹில் ஜெயின் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். துபையிலிருந்து ரூ. 12.56 கோடி மதிப்பிலான தங்கத்த... மேலும் பார்க்க