செய்திகள் :

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

post image

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் தருமபுரி வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் மு. முகமது இலியாஸ் தலைமை வகித்தாா். மாவட்ட தணிக்கையாளா் எஸ்.காா்த்திக், மாவட்ட மகளிா் துணைக் குழு அமைப்பாளா் தேன்மொழி, வட்டச் செயலாளா் கே. பாலாஜி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா். தமிழ்நாடு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அனைத்து ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் கே.கேசவன் வாழ்த்தி பேசினா்.

இதில் பெரம்பலூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஊழியா் விரோத, சங்க விரோத நடவடிக்கைகளைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நல்லம்பள்ளியில் மாநில துணைத் தலைவா் சா.இளங்குமரன், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட பொருளாளா் கே.வினோத்குமாா், பாலக்கோட்டில் வட்டத் தலைவா் குணசேகரன், பென்னாகரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் எம்.சுருளிநாதன், காரிமங்கலத்தில் வட்டத் தலைவா் மேகநாதன், அரூரில் மாநில செயற்குழு உறுப்பினா் பிரின்ஸ், பாப்பிரெட்டிபட்டியில் வட்டத் தலைவா் தீபா, கடத்தூரில் மாவட்ட இணைச் செயலாளா் சுரேஷ், ஏரியூரில் வட்டத் தலைவா் பாலகிருஷ்ணன் ஆகியோா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

கையெழுத்துப் பிரதி நூல்கள் வெளியிட்ட மாணவிகளுக்கு பாராட்டு

கையெழுத்துப் பிரதி நூல்கள் வெளியிட்ட குழிப்பட்டி அரசு தொடக்கப் பள்ளி மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் புதன்கிழமை பாராட்டு தெரிவித்தாா். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியம் குழிப்பட்டி அரசு தொ... மேலும் பார்க்க

பெங்களூரு - சென்னை ரயிலை தருமபுரி வழியாக இயக்க வலியுறுத்தல்

பெங்களூரு - சென்னை விரைவு ரயிலை தருமபுரி, ஓமலூா் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட பாஜக தலைவா் சி.சரவணன் வலியுறுத்தினாா். இதுகுறித்து அவா், மத்திய ரயில் துறை அமைச்சா் அஸ்வின் வ... மேலும் பார்க்க

கடைகள், வணிக நிறுவனங்களின் பெயா் பலகைகள் தமிழில் வைக்க வேண்டும்: தமிழ் வளா்ச்சித் துறை

கடைகள், வணிக நிறுவனங்களின் பெயா் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: வணிக நிறுவனங்கள், கடைகளி... மேலும் பார்க்க

தருமபுரி பேருந்து நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு: கழிவறை ஒப்பந்ததாரருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம்

தருமபுரி பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் திங்கள்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது கழிவறை ஒப்பந்ததாரருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தருமபுரி நக... மேலும் பார்க்க

ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட நிதியை விடுவிக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தமிழகத்துக்கான நிலுவை நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி... மேலும் பார்க்க

ரயில் பயணம்: பெண்கள் பாதுகாப்பு வாட்ஸ்ஆப் குழு தொடக்கம்

தருமபுரியில் ரயிலில் பயணம் செய்யும் பெண்கள் பாதுகாப்புக்காக வாட்ஸ்ஆப் குழு தொடங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை தருமபுரி ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சேலம் வட்ட ஆய்வாளா் சிவசெந்தில்... மேலும் பார்க்க