செய்திகள் :

திமுக vs தவெக: விஜய்யின் கருத்துக்கு இபிஎஸ் என்ன சொன்னார் தெரியுமா?

post image

பிரதான எதிர்க்கட்சி என்று மக்கள் தங்களை அங்கீகரித்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் எடப்பாடி பழனிசாமி இன்று(சனிக்கிழமை) செய்தியாளர்களுடன் பேசினார்.

'2026 தேர்தலில் தவெக - திமுக இடையேதான் போட்டி" என தவெக தலைவர் விஜய் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,

"விஜய் அவருடைய கருத்தைச் சொல்கிறார். நாட்டில் அனைத்துக் கட்சித் தலைவர்களும், கட்சி வளர்வதற்காக தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக கருத்து சொல்வார்கள். விஜய்யும் அப்படித்தான் பேசியிருக்கிறார்.

பிரதான எதிர்க்கட்சி என்று மக்கள் எங்களுக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளார்கள். அதற்கான வாய்ப்பையும் எங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். ஏன் விஜய் அப்படி கூறினார் என்று அவரிடம் நீங்கள்தான் கேட்க வேண்டும்" என்றார்.

மேலும் அதிமுக தலைவர்கள் பற்றி தவெக பொதுக்குழுக் கூட்டத்தில் பேசியதற்கு, 'எங்கள் தலைவர்கள் அப்படி இந்த நாட்டை ஆட்சி செய்துள்ளனர். புதிதாகக் கட்சி தொடங்குபவர்களுக்கு அவர்கள் வழிகாட்டியாக இருக்கின்றனர். அதனால் அவர்களைப் பற்றி கூட்டத்தில் பெருமையாகப் பேசியுள்ளனர்" என்றார்.

மேலும், செங்கோட்டையன் தில்லிக்கு சென்றது பற்றிய கேள்விக்கு, 'அதுபற்றி எனக்கு ஒன்றும் தெரியாது' என பதிலளித்தார்.

இதையும் படிக்க | 2026-ல் தமிழ்நாடு முதல்வர் யார்? - சிவோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு!

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று நள்ளிரவுமுதல் அமல்!

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் இன்று(மார்ச் 31) நள்ளிரவு 12 மணிமுதல் சுங்கக் கட்டண உயர்வு அமலாகவுள்ளது. சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்.1, செப்.1 ஆகிய தேதிகளில் சுங்கக்கட்டணத்தை மாற்றி அமைப்பது வழ... மேலும் பார்க்க

தந்தை இறந்த சோகத்திலும் தேர்வெழுதிய மாணவி: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்!

தந்தை இறந்த சோகத்திலும் பொதுத் தேர்வெழுதிய மாணவியைச் சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஸ் ஆறுதல் கூறி உதவித்தொகையும் வழங்கினார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி பொய்கைக்குடி கிராமத்தில் வசிக்கும் ... மேலும் பார்க்க

நாளைமுதல் 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் குறையும்!

தமிழகத்தில் நாளைமுதல்(ஏப். 1) 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவத... மேலும் பார்க்க

தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்! - காங்கிரஸ்

ஏப். 6-ல் தமிழகம் வரும் பிரதமர் மோடியைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்ப... மேலும் பார்க்க

விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை: செல்லூர் ராஜூ

விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மதுரையில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கூட்டணி என்பது எட... மேலும் பார்க்க

ஏப். 7 திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப். 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாயன்மார்களால் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயில், சப்தவிடங்க தல... மேலும் பார்க்க