செய்திகள் :

துருக்கி மக்கள் போராட்டத்தில் பிக்காச்சூ! விடியோ வைரல்!

post image

துருக்கியில் நாடு தழுவிய மக்கள் போராட்டத்தில் பிக்காச்சூ வேடமணிந்த ஒருவர் கலந்து கொண்டுள்ளார்.

துருக்கி நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் மக்கள் தேசியக் கொடியுடன் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அண்டாலியா நகரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பிரபல போகிமோன் கார்டூனில் வரும் ’பிக்காச்சூ’ கதாபாத்திரத்தின் வேடமணிந்து ஒருவர் பங்குபெற்றுள்ளார். அந்தக் கதாபாத்திரத்தின் முழு உருவ ஆடையணிந்து அவர் கலந்து கொண்டது போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

மேலும், அவருடன் தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை போராட்டக்காரர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, அவர் பங்குபெற்ற போராட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் அங்கு விரைந்தவுடன் அங்கிருந்த தப்பித்து ஓடியவர்களுடன் பிக்காச்சூவும் ஓடும் விடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அவருக்கு ஆதரவாக ஏராளமான பிக்காச்சூ ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, துருக்கியின் மிகப் பெரிய நகரமான இஸ்தான்புல்லின் மேயரான எக்ரீம் இமாமோக்லு கடந்த மார்ச் 19 அன்று ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.

வரும் 2028ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் அதிபர் எர்டோகனை எதிர்த்து இமாமோக்லு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளது அவரது ஆதரவாளர்களிடையே மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த போராட்டங்களில் ஈடுபட்ட சுமார் 1,900 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில், 260-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சீனாவின் செயற்கைக்கோள் முதலீட்டுக்கு செக் குடியரசு தடை!

7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு: அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டில் 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதன்படி,கன்னியாகுமரி,போளூர், செங்கம், சங்ககிரி, கோத்தகிரி, அவினாசி, பெருந்துறை ஆகிய 7 ... மேலும் பார்க்க

பாஜக, மோடி என்றெல்லாம் சொல்லி இனி ஓட்டு கேட்க முடியாது! - துரைமுருகன்

பாஜக, மோடி என்றெல்லாம் சொல்லி இனி யாரும் இங்கு வாக்கு சேகரிக்க முடியாது என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தமிழகத்திற்கு கொடுக்கவேண்டிய ரூ. 4,034 கோடியை ... மேலும் பார்க்க

மியான்மர் நிலநடுக்கம்: பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

மியான்மர், தாய்லாந்தில் வெள்ளிக்கிழமை(மார்ச் 28) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்குள்ள தமிழர்களுக்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உதவி தேவைப்படுவோர் - 1800 309 3793+91 80690 099... மேலும் பார்க்க

சமூக நீதியை நிலைநாட்டும் அரசு! - ஆதி திராவிடர், பழங்குடியினர் நலக் கூட்டத்தில் முதல்வர் பேச்சு

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனை மேம்படுத்தும் பொருட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல... மேலும் பார்க்க

தென் கொரிய காட்டுத் தீ: நெருப்பில் சடங்கு செய்த நபர் காரணமா?

தென் கொரியாவில் காட்டுத் தீ ஏற்படக் காரணம் எனச் சந்தேகிக்கப்பட்ட நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தென் கொரியாவின் மிக மோசமான பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தக் காட்டுத... மேலும் பார்க்க

லெபனான் தலைநகரில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல்!

லெபனான் நாட்டு தலைநகரின் மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த 2024 நவம்பர் மாதம் முதல் கடைப்பிடிக்கப்பட்டிருந்த நிலையில் த... மேலும் பார்க்க