செய்திகள் :

சீனாவின் செயற்கைக்கோள் முதலீட்டுக்கு செக் குடியரசு தடை!

post image

செக் குடியரசு நாட்டில் சீனாவின் செயற்கைக்கோள் முதலீட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவைச் சேர்ந்த எம்போசாட் என்ற நிறுவனம் கிழக்கு செக்கியா மாகாணத்தின் வல்கோஸ் என்ற கிராமத்தில் செயற்கைக்கோள் டிஷ் பொறுத்த திட்டமிட்டிருந்தது.

கடந்த வாரம் நடைபெற்ற தனிப்பட்ட சந்திப்பில் செக் நாட்டு அமைச்சர்களினால் இந்த திட்டத்தை நிறுத்துவதற்கான உத்தரவு உறுதி செய்யப்பட்டது.

வெளிநாட்டு முதலீடுகளை மறுஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்ட செக் குடியரசின் 2021 சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள மிகக் கடுமையான நடவடிக்கைகளை, செக் அதிகாரிகள் பயன்படுத்தியது இதுவே முதல்முறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கசிந்த ஆவணத்தின் அடிப்படையில், எம்போஸாட் நிறுவனத்தின் ஈடுபாடினால் செக் குடியரசின் நடவடிக்கைகளை உளவுப் பார்த்து அவர்களது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது என அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆணையங்களின் எச்சரித்ததைத் தொடர்ந்து இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்நிலையில், செக் குடியரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சரான மாரெக் வொஷாலிக் கூறுகையில், சீனாவின் இந்த முதலீட்டினால் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தில் குறைவான அளவிலான தாக்கமே உள்ளது. ஆனால், இது குறிப்பிடத்தக்க பாதுகாப்பு தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் எனக் கூறியுள்ளார்.

எனவே, தற்போது விதிக்கப்பட்டுள்ள தடையினால் அக்கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்போஸாட்டின் 7.3 மீட்டர் அகலமுள்ள பரவலான ஆண்டென்னா அகற்றப்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: அமேசான் நிறுவனருக்கு திருமணம்!

7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு: அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டில் 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதன்படி,கன்னியாகுமரி,போளூர், செங்கம், சங்ககிரி, கோத்தகிரி, அவினாசி, பெருந்துறை ஆகிய 7 ... மேலும் பார்க்க

பாஜக, மோடி என்றெல்லாம் சொல்லி இனி ஓட்டு கேட்க முடியாது! - துரைமுருகன்

பாஜக, மோடி என்றெல்லாம் சொல்லி இனி யாரும் இங்கு வாக்கு சேகரிக்க முடியாது என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தமிழகத்திற்கு கொடுக்கவேண்டிய ரூ. 4,034 கோடியை ... மேலும் பார்க்க

மியான்மர் நிலநடுக்கம்: பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

மியான்மர், தாய்லாந்தில் வெள்ளிக்கிழமை(மார்ச் 28) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்குள்ள தமிழர்களுக்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உதவி தேவைப்படுவோர் - 1800 309 3793+91 80690 099... மேலும் பார்க்க

சமூக நீதியை நிலைநாட்டும் அரசு! - ஆதி திராவிடர், பழங்குடியினர் நலக் கூட்டத்தில் முதல்வர் பேச்சு

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனை மேம்படுத்தும் பொருட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல... மேலும் பார்க்க

தென் கொரிய காட்டுத் தீ: நெருப்பில் சடங்கு செய்த நபர் காரணமா?

தென் கொரியாவில் காட்டுத் தீ ஏற்படக் காரணம் எனச் சந்தேகிக்கப்பட்ட நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தென் கொரியாவின் மிக மோசமான பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தக் காட்டுத... மேலும் பார்க்க

லெபனான் தலைநகரில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல்!

லெபனான் நாட்டு தலைநகரின் மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த 2024 நவம்பர் மாதம் முதல் கடைப்பிடிக்கப்பட்டிருந்த நிலையில் த... மேலும் பார்க்க