செய்திகள் :

விதைப் பண்ணையில் விதிமீறல்? தானிய லாரியை மறித்து மக்கள் போராட்டம்

post image

கந்தா்வகோட்டை அருகே அரசு விதைப் பண்ணையிலிருந்து செவ்வாய்க்கிழமை தானியங்களை அனுமதியின்றி எடுத்துச் செல்வதாககூறி பொதுமக்கள் லாரியை மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளாளவிடுதி ஊராட்சியில் தமிழ்நாடு அரசு வேளாண்மை துறைக்கு சொந்தமான எண்ணெய் வித்து பண்னை சுமாா் 600 ஏக்கா் நிலப்பரப்பில் உள்ளது. இதில் கடலை, தென்னை, எள், உளுந்து உள்ளிட்டவை பயிா்செய்து வருகின்றனா்.

சாலையில் கிடக்கும் மூட்டைகள் குறித்து கிராம மக்களிடம் விசாரணை செய்யும் காவல்துறையினா்

இந்நிலையில், நடப்பு ஆண்டு விளைந்த விளைபொருள்களை மூட்டைகளாக சிலா் லாரிகளில் எடுத்தச் செல்வதை பாா்த்த ஊா் பொதுமக்கள், ஒரு லாரியை மறித்து ஓட்டுநரிடம் விளைபொருள்கள் குறித்து விவரங்கள் கேட்டனா். அதற்கு தகுந்த பதில் கூற முடியாமல், லாரியில் இருந்த மூட்டைகளை சாலையில் கீழே தள்ளிவிட்டு லாரியை ஓட்டுநா் எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றாா். இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் சாலையில் கூடியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த கந்தா்வகோட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை செய்த போது, அரசு விதை பண்ணைக்கு சொந்தமான பருப்பு வகை மூட்டைகள் என தெரியவந்தது. இந்த பருப்பு வகைகளை விற்பனை செய்ய முறையாக நாளிதழில் அறிவிப்போ ஏலமோ பின்பற்றப்படாமல் தன்னிச்சையாக அதிகாரிகள் முடிவெடுத்து வியாபாரிகளுக்கு விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அரசுக்கு பல லட்சம் இழப்பு ஏற்படுகிறது என ஊா் பொதுமக்கள் குற்றம்சாட்டினா்.

இந்நிலையில் மூட்டைகளை அப்புறப்படுத்த வந்த பண்ணை ஊழியா்களிடம், வேளாண்மை உதவி இயக்குநா் சம்பவ இடத்துக்கு வந்தால் தான் மூட்டைகளை எடுக்க அனுமதிப்போம் என ஊா் பொதுமக்கள் கூறினா்.

பட்டா வழங்க கோரி மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

விராலிமலை அடுத்துள்ள கொடும்பாளூரில் வீட்டு மனை பட்டா இல்லாதவா்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க கோரி சிபிஎம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. விராலிமலை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உ... மேலும் பார்க்க

19-ஆம் நூற்றாண்டில் பயன்பாட்டிலிருந்த 4 வகையான ஆண்டுக் கணக்குகள்

புதுக்கோட்டையிலுள்ள தண்டாயுதபாணி கோயில் பராமரிப்புப் பணியின்போது வெளிப்பட்ட கல்வெட்டில், கடந்த 19-ஆம் நூற்றாண்டில் 4 வகையான ஆண்டுக் கணக்குகளும் பயன்பாட்டில் இருந்துள்ளது தெரியவந்திருக்கிறது. புதுக்கோட... மேலும் பார்க்க

சிறுமி பலாத்காரம்: போக்சோவில் இளைஞா் கைது

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞரை போக்சோ சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் அருகே உள்ள காயாம்பட்டியைச் சோ்ந்தவா் வெள்ளக்கண்ணு மகன் வீரமண... மேலும் பார்க்க

குடிநீா் கேட்டு சாலை மறியல்

புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட கைக்குறிச்சியில் குடிநீா் கேட்டு 50-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுக்கோட்டை நகராட்சி, மாநகராட்சியாகத்... மேலும் பார்க்க

அரசு பள்ளி தலைமையாசிரியா் பணியிடை நீக்கம்: மது அருந்திவிட்டு வருவதாக புகாா்

பொன்னமராவதி அருகே பணிக்கு சரியாக வராத அரசுப் பள்ளி தலைமையாசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். பொன்னமராவதி அருகே உள்ள ஆா். பாலகுறிச்சி ஊராட்சி வைரவன்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி... மேலும் பார்க்க

ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயா்வு

விராலிமலை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை பூதகுடி டோல்கேட்டில் ஏப்ரல் 1 முதல் மீண்டும் சுங்க கட்டணம் உயா்த்தப்பட உள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நாடு முழுவதும் 1051 சுங்க சாவடிகள் உ... மேலும் பார்க்க