செய்திகள் :

15 வயது சிறுவனைக் கொன்ற நண்பர்கள்! ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டல்!

post image

தில்லியில் 15 வயது சிறுவனைக் கொன்ற நண்பர்கள், அந்த சிறுவனின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு ரூ. 10 லட்சம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று சிறுவர்களை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க : நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

வடக்கு தில்லி முகர்ஜி நகரைச் சேர்ந்த விகாஸ் கார்க் என்ற கார் ஓட்டுநரின் மகன் வைபவ் (வயது 15) காணாமல் போனதாக வஜிராபாத் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ​​ஜரோடா புஷ்தா சாலை அருகே வைபவ் மூன்று சிறுவர்களுடன் காணப்பட்ட சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளது.

அதனடிப்படையில் மூன்று சிறுவர்களையும் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், பணத்துக்காக வைபவ்வை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை வைபவ்வை மூவரும் பைக்கில் சுற்ற அழைத்துச் சென்றுள்ளனர். பலஸ்வா ஏரிக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று கத்திகளால் குத்திக் கொலை செய்துள்ளனர். உடலை அங்கேயே வீசிவிட்டு தப்பிய சிறுவர்கள், வைபவ்வின் தந்தையைத் தொடர்புகொண்டு ரூ. 10 லட்சம் கேட்டு திங்கள்கிழமை மிரட்டியுள்ளனர்.

இதனிடையே காவல்துறையினர் கைது செய்து விசாரித்ததில், சிறுவர்கள் வாக்குமூலம் அளித்த இடத்தில் இருந்து வைபவ்வின் உடலை காவல் துறையினர் மீட்டுள்ளனர்.

மேலும், மூன்று சிறுவர்கள் மீது வழக்குப்பதிந்து காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மியூச்சுவல் ஃபண்டு: அதிகரிக்கும் பெண் முதலீட்டாளர்கள்!

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.முந்தைய தலைமுறையினரைவிட, தற்போதைய தலைமுறையினர் நிதி மேம்பாடு விவகாரத்தில் சிறந்து விளங்குகின்றனர். அந்த வகையில் பங்குச்... மேலும் பார்க்க

குழந்தைக்காக முதியவரின் தலை துண்டித்து கொலை

பிகாரில் குழந்தை பாக்கியம்வேண்டி, முதியவரின் தலையைத் துண்டித்து கொலை செய்த மாந்திரீகரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.பிகாரில் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் யுக்வல் யாதவ் (65) என்பவர் காணாமல் போய்வ... மேலும் பார்க்க

மியான்மரில் நிலநடுக்கம்: தாயகம் திரும்பிய இந்திய பயணிகள்!

மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பாங்காக்கில் இருந்து இந்திய பயணிகள் தாயகம் திரும்பினர். மியான்மர் மட்டுமல்லாது தாய்லாந்து, வியட்நாம், சீனாவிலும் உணரப்பட்ட நில அதிர்வுகளால் ம... மேலும் பார்க்க

ஐபில்: பந்தயம் கட்டிய மூவர் கைது!

ஐபிஎல் போட்டி மீது பந்தயம் கட்டிய மூவரை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர். நவி மும்பையில் சன்பாடா பகுதியில் ஒரு குடியிருப்பு வளாகத்தில், ஐபிஎல் கிரிக்கெட் மீது பந்தயம் கட்டி, ஆன்லைன் சூதாட்டம் நடத்த... மேலும் பார்க்க

மறைந்த சுஷாந்த் சிங்கின் தோழியிடம் மன்னிப்பு கேட்ட முன்னாள் எம்.பி.

மறைந்த முன்னாள் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராக்புத் தற்கொலை வழக்கில், அவரது தோழி ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பிருப்பதாக ஜீ செய்திகள் நிறுவனம் குற்றம் சாட்டியதற்காக மன்னிப்புகோரி, ஜீ செய்திகள் நிறுவனத... மேலும் பார்க்க

ஆயுதங்களால் மாற்றத்தைக் கொண்டுவர இயலாது: அமித் ஷா

ஆயுதங்களை ஏந்தி வன்முறையில் ஈடுபடுபவர்களால் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்றும் அமைதி, வளர்ச்சி மட்டுமே நல்ல மாற்றமாக இருக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். சத்தீஸ்கரின் சு... மேலும் பார்க்க