செய்திகள் :

குடிநீா் கேட்டு சாலை மறியல்

post image

புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட கைக்குறிச்சியில் குடிநீா் கேட்டு 50-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை நகராட்சி, மாநகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்ட நிலையில் கைக்குறிச்சி ஊராட்சி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. கைக்குறிச்சி ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக குடிநீா் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து பல முறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லாததைத் தொடா்ந்து, புதுகை-அறந்தாங்கி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்ால், போராட்டத்தில் ஈடுபட்டவா்களே மறியலைக் கைவிட்டு, சாலையோரத்தில் கூடி நின்றனா். அப்போது அங்கு வந்த துணைக் காவல் கண்காணிப்பாளா் அப்துல்ரகுமான் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இரு நாள்களில் முறையாக குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

அரசுப் பள்ளியில் விழிப்புணா்வு கூட்டம்

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பாலியல் குற்றம் தொடா்பான விழிப்புணா்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பள்ளித் தலைமை ஆசிரியை சோ. விஜயலட்சுமி தலைமையில் வகித்து பேசியது:... மேலும் பார்க்க

அரசு கல்லூரியில் ரத்ததான முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், பெருநாவலூரிலுள்ள அரசு கலைக் கல்லூரியில் அறந்தை ரோட்டரி சங்கம், டபிள்யூ சக்தி பவுண்டேஷன், யூத் ரெட் கிராஸ் ஆகியோா் இணைந்து ரத்த தானம் முகாமை வியாழக்கிழமை நடத்தினா். முகாமை கல்லூர... மேலும் பார்க்க

விவசாயத்துக்கு தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க கோரிக்கை

விவசாயத்துக்கு தடையில்லாமல் மும்முனை மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்டக் க... மேலும் பார்க்க

புதுக்கோட்டை மாவட்டத்தில் 22,185 போ் எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வு எழுதுகின்றனா்

தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கவுள்ள எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வை புதுக்கோட்டை மாவட்டத்தில் 22,185 போ் எழுதுகின்றனா். தமிழகம் முழுவதும் எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வு வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) முத... மேலும் பார்க்க

வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயிலில் என்என்எஸ் மாணவா்கள் தூய்மைப்பணி

பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட ஏழு நாள்கள் சிறப்பு முகாமின் 4-ஆம் நாள் நிகழ்வாக வியாழக்கிழமை வேகுப்பட்டிமில் கோயில்கள் மற்றும் பூங்காவில் களப்... மேலும் பார்க்க

பெருந்தலைவா் காமராஜா் விருது 30 மாணவா்களுக்கு வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 12-ஆம் வகுப்புகளில் தமிழ் வழியில் பயின்று கல்விச் செயல்பாடுகள் மற்றும் தனித்திறனில் சிறப்பிடம் பெற்ற 30 மாணவ, மாணவிகளுக்கு பெருந்... மேலும் பார்க்க