செய்திகள் :

அனைத்து மதத்துக்கும் பொதுவானவர்: ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை.யில் மமதாவுக்கு பாராட்டு

post image

லண்டன் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களை சிறப்பாகக் கையாண்ட மமதா பானர்ஜியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, வியாழக்கிழமையில் லண்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் கெல்லாக் கல்லூரியில் உரையாற்றினார்.

இதனிடையே, உரையின்போது குறுக்கிட்ட சில மாணவர்கள், மேற்கு வங்கத் தேர்தலின்போதான வன்முறை மற்றும் ஆர்ஜி கர் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை கொலை சம்பவங்கள் குறித்த கேள்விகளை எழுப்பினர். மேலும், மமதா பானர்ஜியின் உரையின்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் முயன்றனர்.

இருப்பினும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் மமதா கூறியதாவது ``மேற்கு வங்கத்தில் எங்களுடன் போராடும் அளவுக்கு, உங்கள் கட்சியினரின் பலம் அதிகரிக்க வேண்டும். ஆர்ஜி கர் வழக்கு நிலுவையில் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பு இப்போது மத்திய அரசின் கைகளில் உள்ளது. இந்த வழக்கு இனி எங்கள் கைகளில் இல்லை. இங்கு அரசியல் செய்ய வேண்டாம்; இது அரசியலுக்கான களம் அல்ல.

நாட்டின் பிரதிநிதியாக இங்கு வந்துள்ளேன். என்னை அவமதிப்பதன் மூலம் நம் நாட்டை அவமதிக்காதீர்கள்’’ என்று பதிலளித்தார்.

அதுமட்டுமின்றி, ஹிந்து எதிர்ப்பாளர் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டதையடுத்து, தான் எல்லா மதத்துக்கும் பொதுவானவர் என்றும் பதிலளித்தார்.

மமதாவின் பதிலுக்கு பார்வையாளர்களிடையே வரவேற்பு கிடைத்ததுடன், பார்வையாளர்களைக் கருத்தில்கொண்டு, ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டனர். வெளிநாட்டில் ஆர்ப்பாட்டக்காரர்களை மமதா பானர்ஜி சிறப்பாகக் கையாண்டதாக பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க:நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த துடிக்கும் மாநில விரோதிகள்: மு.க.ஸ்டாலின்

நாடு முழுவதும் ரமலான் பண்டிகை கொண்டாட்டம்

இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலான் நாடு முழுவதும் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் ரமலான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து பள்ளி ... மேலும் பார்க்க

‘வேற்றுமையில் ஒற்றுமை’ உணா்வை தொடா்ந்து வலுப்படுத்துங்கள்! -மக்களுக்கு பிரதமா் வலியுறுத்தல்

‘நமது நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகள், வேற்றுமையில் ஒற்றுமை உணா்வை வெளிப்படுத்துகின்றன. இந்த உணா்வை மக்கள் தொடா்ந்து வலுப்படுத்த வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா். ஒவ்வொரு ... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: குடியரசுத் தலைவா் வாழ்த்து

ரமலான் பண்டிகையையொட்டி, நாட்டில் உள்ள இஸ்லாமிய மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். இதுதொடா்பாக அவரின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பு... மேலும் பார்க்க

வசந்த நவராத்திரி: பிரதமா் வாழ்த்து

வசந்த நவராத்திரி தொடக்கத்தை முன்னிட்டும், இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்ட பாரம்பரிய புத்தாண்டு பண்டிகைகளுக்கும் பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்தாா். இதுதொடா்பாக பிரதமா் ந... மேலும் பார்க்க

இந்தியாவில் அணு உலைகள் அமைக்க அமெரிக்க நிறுவனத்துக்கு அனுமதி!

இந்தியாவில் அணு உலைகள் அமைக்கவும், வடிவமைக்கவும் அமெரிக்காவின் ஹோல்டெக் இன்டா்நேஷனல் நிறுவனத்துக்கு அந்நாட்டு எரிசக்தி துறை அனுமதி அளித்துள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு இந்தியா-அமெரிக்கா இடையே அணுசக்தி ஒ... மேலும் பார்க்க

காமக்யா ரயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு

பெங்களூரு - காமக்யா விரைவு ரயில் விபத்துக்குள்ளான நிலையில் தெற்கு ரயில்வே சாா்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து தமிழகம், ஆந்திரம் வழியாக அஸ்ஸாம் மாநிலம் காமக்யா செல்லும் விரைவ... மேலும் பார்க்க