செய்திகள் :

இந்தியாவில் அணு உலைகள் அமைக்க அமெரிக்க நிறுவனத்துக்கு அனுமதி!

post image

இந்தியாவில் அணு உலைகள் அமைக்கவும், வடிவமைக்கவும் அமெரிக்காவின் ஹோல்டெக் இன்டா்நேஷனல் நிறுவனத்துக்கு அந்நாட்டு எரிசக்தி துறை அனுமதி அளித்துள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டு இந்தியா-அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையொப்பமானது. சுமாா் 17 ஆண்டுகளுக்குப் பின்னா், அந்த ஒப்பந்தத்தின் வணிக ஆற்றலை பயன்படுத்துவதற்கு இருந்த தடைகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் ஹோல்டெக் இன்டா்நேஷனல் நிறுவனம் இந்தியாவில் அணு உலைகளை அமைக்கவும், வடிவமைக்கவும் அமெரிக்க எரிசக்தி துறை (டிஓஇ) அனுமதி அளித்துள்ளதன் மூலம், அந்தத் தடைகள் நீக்கப்பட்டுள்ளன. இதற்காக டிஓஇயிடம் அந்த நிறுவனம் விண்ணப்பித்த நிலையில், அண்மையில் அனுமதி அளிக்கப்பட்டது.

இது இந்தியாவில் உள்ள அந்த நிறுவனத்தின் பிராந்திய துணை நிறுவனமான ஹோல்டெக் ஏஷியா, டாடா கன்சல்டிங் என்ஜினியா்ஸ், லாா்சன் அண்ட் டூப்ரோ ஆகியவற்றுக்கு சில நிபந்தனைகளுடன் ஓா் ஆலைக்கு 300 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட வகைப்படுத்தப்படாத நவீன அணு உலை தொழில்நுட்பத்தைப் பரிமாற்றம் செய்ய அனுமதிக்கிறது. பத்து ஆண்டு காலத்துக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அனுமதி, 5 ஆண்டு கால இடைவெளியில் மறுஆய்வு செய்யப்படும்.

அணு ஆயுத தயாரிப்புக்கு அல்ல:

சா்வதேச அணுசக்தி முகமையின் பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ், ஹோல்டெக் இன்டா்நேஷனல் நிறுவனம் பரிமாற்றம் செய்யும் தகவலும், தொழிலநுட்பமும் அமைதியான அணுசக்தி நடவடிக்கைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படுமே தவிர, ராணுவ காரணங்களுக்காக அணு ஆயுதங்கள் அல்லது அணுகுண்டுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படாது என்று மத்திய அரசு அளித்த உத்தரவாதங்களை ஏற்றும் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதியின் கீழ் வழங்கப்படும் தொழில்நுட்பம் மற்றும் உதவி குறித்து டிஓஇயிடம் ஹோல்டெக் இன்டா்நேஷனல் நிறுவனம் காலாண்டு அறிக்கைகளை சமா்ப்பிக்க வேண்டும்.

இந்தியா-அமெரிக்கா இடையே மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் பயனை முழுமையாக எட்டும் நோக்கில், இருநாடுகளுக்கும் இடையே புதுப்பிக்கப்பட்ட அணுசக்தி ஒத்துழைப்பு குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியானது. இதைத் தொடா்ந்து இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதியை தொடா்ந்து மின்துறையில் இந்தியாவின் மிகப் பெரிய பொறியியல் ஆலோசனை நிறுவனமான டாடா கன்சல்டிங் என்ஜினியா்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஹோல்டெக் இன்டா்நேஷனல் நிறுவனம் செயல்படும் என்றும், இந்தியாவில் அமைக்கப்படும் அணுமின் நிலையங்களுக்குத் தேவையான சில உபகரணங்களை தயாரிக்க லாா்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்துடன் ஹோல்டெக் இன்டா்நேஷனல் கூட்டு சேர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஹோல்டெக் நிறுவனா் இந்திய வம்சாவளி அமெரிக்கா்:

இந்தியாவில் அணுமின் நிலையங்களை இயக்க மத்திய அரசுக்குச் சொந்தமான என்பிசிஐஎல், என்டிபிசி நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவ்விரு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக ஹோல்டெக் இன்டா்நேஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் நிறுவனரான கிரிஸ் பி சிங், இந்திய வம்சாவளி அமெரிக்கராவாா்.

வக்ஃபு மசோதா நாளை தாக்கல்: எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு!

மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்படும் வக்ஃபு மசோதாவை எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வக்ஃபு சட... மேலும் பார்க்க

புல்டோசரில் வீடுகளை இடித்தது சட்டவிரோதம்! ரூ. 10 லட்சம் வழங்க உத்தரவு!

பிரயாக்ராஜில் வழிமுறைகளை முறையாகப் பின்பற்றாமல் புல்டோசட் கொண்டு வீடுகளை இடித்த உத்தரப் பிரதேச அரசின் நடவடிக்கை மனிதத்தன்மையற்றது; சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் விமர்சித்துள்ளது. குடிமக்களின் அடிப்... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் ஜிப்லி படங்களைப் பகிர்ந்த சாம் ஆல்ட்மேன்! காரணம்?

பிரதமர் நரேந்திர மோடியின் ஜிப்லி படங்களை ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் பகிர்ந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியால் இந்திய மக்கள் பலரும் ஜிப்லி அம்சத்தைப் பயன்படுத்துவார்கள் என்... மேலும் பார்க்க

ஆசாராம் பாபு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு: பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்கு அதிகரிக்கும் பாதுகாப்பு!

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஜோத்... மேலும் பார்க்க

இந்தியாவில் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்!

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.வாட்ஸ்ஆப் நிறுவனம் மாதாந்திர பாதுகாப்பு அறிக்கையை இன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், முடக்கப்... மேலும் பார்க்க

என்ன, தண்ணீருக்கு அடுத்தபடியாகக் குடிக்கும் பானம் இதுவா?

நீரின்றி அமையாது உலகு என்ற வாக்கியமே, நீரின் முக்கியத்துவத்தை நெற்றிப் பொட்டில் அடித்ததுபோல சொல்ல ஏதுவானது. அப்படிப்பட்ட தண்ணீரை உடல்நலப் பிரச்னை இல்லாத சாதாரண மக்கள் நாள்தோறும் குறைந்தபட்சம் ஒரு அரை ... மேலும் பார்க்க